`இலங்கையில் அமைதியும் அபிவிருத்தியும்' எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு எதிர் வரும் 24ஆம், 25ஆம் திகதிகளில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது.
இதில் நோர்டிக் நாடுகளில் வாழும் இலங்கையைச் சேர்ந்த கல்வியாளர்கள் மனிதாபிமான செயல்பாட்டாளர்கள் வரலாற்றாசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கையின் ஆயுத நெருக்கடி மற்றும் அமைதி முயற்சிகளில் மக்களின் வாழ்வாதாரம் அரசியல் பன்மைத்துவம் போன்ற விடயங்கள் குறித்து ஆய்வு கட்டுரைகளும் விவாதங்களும் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.