வட போர் முனையில் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற பல்வேறு மோதல் சம்பவங்களில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 9 படையினர் காயமடைந்துள்ளனர் என்று படையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் படையினர் வெளியிட்ட விபரம் வருமாறு;
மணலாறு கிரிபன்வேவ, வடக்கு ஜனகபுர, ஆண்டான்குளம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற மோதலில் படைத்தரப்பை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 6 படையினர் காயமடைந்தனர்.
யாழ்.கிளாலி முன்னரங்கப் பகுதியில் இடம் பெற்ற மோதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
மன்னார் சுலைனாமருதமடுப் பகுதியில் இடம் பெற்ற மோதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.
மன்னாரில் கட்டைக்குளம், காத்தான் குளம், மணிப்புல் குளம் பகுதியில் இடம் பெற்ற மோதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.