Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 20, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கனடிய வெளிவிவகார அமைச்சரை பதவி விலக எதிரணி வலியுறுத்தல்
[20 - April - 2008] [Font Size - A - A - A]
* குற்றச்சாட்டுகளில் ஒன்றாக இலங்கைப் பிரச்சினை

இலங்கை, டார்புர், மத்திய கிழக்கு மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளுக்கு தலைமை தாங்குவதில் கனடிய அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாகக் கடுமையாக விமர்சித்திருக்கும் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் வெளிவிவகார அமைச்சர் மக்கஸிம் பேர்னியரை திறமையற்றவரெனவும் பொறுப்பற்றவரெனவும் சாடியிருப்பதுடன் அவரைப் பதவி நீக்குமாறு பிரதமர் ஸ்ரீபன் ஹறார்பருக்கு அழுத்தம் கொடுத்துள்ளன.

தனது அமைச்சரின் பாரதூரமான தவறுகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது பிரதமரின் பொறுப்பு என்று லிபரல் கட்சியைச் சேர்ந்த பொப்ரே செய்தியாளர் மாநாட்டில் கூறியுள்ளார்.

அவர் (வெளிவிவகார அமைச்சர்) எமது வெளியுறவுக் கொள்கையை சந்தேகமான இடத்துக்குத் தள்ளியுள்ளார். ஆப்கானிலுள்ள எமது படையினருக்கும் அசௌ கரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்று பொப்ரே கூறியுள்ளார்.

இதேவேளை, வௌவிவகாரக் குழுவைக் கூட்டி பேர்னியரின் ஆற்றல்கள் அவரின் செயற்பாடுகளை ஆராய வேண்டுமென புதிய ஜனநாயகக் கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர்.

அண்மையில் ஆப்கானிஸ்தானுக்குச் சென்ற மக்கஸிம் பேர்னியர் கந்தகார் ஆளுநரை அகற்ற வேண்டுமென அந்நாட்டு ஜனாதிபதி ஹமீத் ஹர்சாய்க்கு தெரிவித்திருந்த விடயம் குறித்து கடுமையான விமர்சனங்கள் ஏற்பட்டுள்ளன.

இறைமையுள்ள நாடொன்றின் விவகாரங்களில் தலையிட்டதன் மூலம் இராஜதந்திர ரீதியில் பாரதூரமான தவறை பேர்னியர் இழைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கன் அரசை சாத்தியமற்றதொரு சூழ்நிலைக்கு பேர்னியர் தள்ளி விட்டிருப்பது குறித்து இன்னமும் அவர் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் ஆளுநரை அகற்றினால் ஆப்கன் அரசு நேட்டோ அதிகாரத்திற்கு சார்பாகச் செயற்படுவதாகவே அர்த்தப்படும் நேட்டோ படை விலகினால் அவர்களின் ஆட்சி செய்யும் தகைமையும் ஊழலை ஒழிக்கும் முயற்சியும் கேள்விக்குறியாகி விடுமென பொப்ரே வியாழனன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறியுள்ளார்.

இத்தகைய தவறுகளை இழைத்திருக்கும் பேர்னியர் முக்கியமான பதவியான வெளிவிவகார அமைச்சுப் பதவியை வகிக்கத் தகுதியற்றவரென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Email this page Your Opinion Print this page
இலங்கைத் தமிழர் மீதான உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த உடன் நடவடிக்கை எடுங்கள்
கிழக்கில் மேலாதிக்கத்தை அமுல்படுத்த நினைக்கும் அரசின் நோக்கத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்
எரிபொருட்களின் விலைகளை மீளாய்வு செய்ய வேண்டிய நிலை
வேலூரில் நளினியை பிரியங்கா சந்தித்த இடம் தொடர்பாக சர்ச்சை
கனடிய வெளிவிவகார அமைச்சரை பதவி விலக எதிரணி வலியுறுத்தல்
மைத்திரிபால சிறிசேன லண்டனில் மங்களவுடன் இரகசிய சந்திப்பு?
ஜே.வி.பி. பாராளுமன்றக் குழுத் தலைவராக பிமல் கட்சியின் பிரசார செயலாளராக சுனில் ஹந்துநெத்தி
நாளை முதல் வாக்காளர் அட்டை விநியோகம்
ஜெயராஜை கொலை செய்யும் திட்டம் தெஹிவளை அத்திட்டியவில் தயாரிப்பு
சிலாவத்தையில் கடும் விமானத் தாக்குதல்
உள்ளூரில் போதியளவு நெல் கையிருப்பில் இருக்கும் போது அரிசிக்கு ஏன் தட்டுப்பாடு?
சிலாவத்தையில் கடும் விமானத் தாக்குதல்
ஏறாவூரில் கைக்குண்டு மீட்பு
குடும்பஸ்தர் குத்திக்கொலை
வட போர் முனை மோதல்களில் படைவீரர் பலி,9 பேர் காயம்
இலங்கை தொடர்பாக ஒஸ்லோவில் கருத்தரங்கு
வடக்கு - தெற்கு மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதன் மூலமே சமாதானத்தை அடையலாம்
குடாநாட்டில் குற்றச்செயல்களை தடுக்க விழிப்புக் குழுக்களை அமைக்க நடவடிக்கை
அவரிவத்தையில் தொழில்புரியும் மலையக வாலிபர் பொலிஸாரால் கைது
புதுவித காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 750 பேருக்கு வைத்தியசாலைகளில் சிகிச்சை
கிழக்கில் அடுத்த வாரம் முதல் ஐ.தே.க. தீவிர பிரசாரத்தில் இறங்கும்
இலங்கைத் தமிழருக்கு போலி கடவுச்சீட்டு விசாக்கள் தயாரித்த இருவர் கைது
யாழ்.குடாநாட்டில் அரிசி விலை அதிகரிப்பு
போரதீவில் இரு கிளைமோர்கள் மீட்பு
இடம்பெயர்ந்த அல்லைப்பிட்டி மக்கள் மீளவும் குடியமர்வு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com