Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அரிசிக்கு உத்தரவாத விலை அறிவிப்பு அரசாங்கத்தின் ஏமாற்று வித்தை
[21 - April - 2008] [Font Size - A - A - A]
-எம்.ஏ.எம். நிலாம்-

அரிசியை தாராளமாக சந்தைப்படுத்துவதை விடுத்து அரசாங்கம் அரிசிக்கு உத்தரவாத விலையை நிர்ணயிப்பது காலம் கடந்து போன கொள்கையாகவே காணப்படுவதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின புதிய ஏமாற்று வித்தையானதேஅரிசிக்கான உத்தரவாத விலைப் பிரகடனம் எனவும் ஜே.வி.பி. சுட்டிக்காட்டியுள்ளது.

உத்தரவாத விலைப் பிரகடனத்தின் மூலம் ஒரு போதும் அரிசியின் விலையைக் குறைக்க முடியாதெனத் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி. இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

ஆரம்பத்தில் அமைச்சர் பந்துல குணவர்தன எந்தச் சக்தியாலும் அரிசியின் விலை அதிகரிப்பைத் தடுத்து நிறுத்த முடியாதென அடிக்கடி கூறிவந்தார். கடந்த 16 ஆம் திகதி இரவு அவருக்கும் அரசுக்கும் எங்கிருந்து புது ஞானோதயம் பிறந்துள்ளது எனக் கேட்கின்றோம். திடீரென ஒரே இரவுக்குள் அரிசிக்கு உத்தரவாத விலையை வர்த்தமானி மூலம் பிரடகனப்படுத்தப்பட்டது. அதுவும் நான்கு வகையான அரிசிக்கு மட்டுமே இந்த உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உத்தரவாத விலை என்பது ஒரு காலம் கடந்து போன கொள்கையாகும். அது நடைமுறைச் சாத்தியமற்ற ஒரு விடயமாகவே இன்று காணப்படுகின்றது. பொருளியல் விஞ்ஞானத்தில் மிக இலகுவான சித்தாந்தமான கேள்வி- விநியோகம் என்ற நிரலுக்கேற்ப அரசாங்கம் செய்ய வேண்டியது அரிசியை தாராளமாக சந்தைப்படுத்த நடவடிக்கை எடுப்பதே ஆகும்.

சந்தையில் அரிசி தாராளமாகக் கிடைக்கும் போது விலை அதிகரிப்பு ஏற்பட வழி உருவாக மாட்டாது. போட்டிச் சந்தை முறைக்கு அரசும் நுழைய வேண்டும். ஆனால், அதற்கான தகைமை அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. நீண்ட காலத் திட்டத்தை வகுத்து அரசாங்கம் செயற்பட்டிருந்தால் இன்று அரிசித்தட்டுப்பாடோ, விலை அதிகரிப்போ ஏற்பட்டிருக்க முடியாது.

உலக நாடுகளில் உணவு நெருக்கடி ஏற்பட்டிருக்கும் இன்றைய சூழ் நிலையில் அரசு வெளி நாடுகளை நம்பியிருக்காமல் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து நாட்டில் விளையும் நெல்லை முழுமையாகக் கொள்வனவு செய்து கூடுதலான அரிசியை கையிருப்பில் வைத்திருப்பதற்கு அரசு நடவடிக்கை எடுப்பதே உரிய மார்க்கமாகும் என்பதை வலியுறுத்திக் கூறுகின்றோம்.

அரசாங்கம் சிறுபிள்ளைத்தனமான முடிவுகளை எடுக்காமல் காலத்துக்கேற்ற விதத்தில் புதிய உத்திகளைக் கையாள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கின்றோம்.

Email this page Your Opinion Print this page
நீர்வீழ்ச்சி மரணங்கள் அதிகரிப்பு கடந்த வருடங்களில் 801 பேர் பலி
மனித உரிமை மீறல் சம்பவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிப்பு
ஈரானுடனான நெருக்கத்தால் இலங்கைக்கான ஆயுத விற்பனையை இஸ்ரேல் நிறுத்துகிறது
பாண்டிருப்பில் கணவன், மனைவியான கிராமசேவகர்கள் சுட்டுக் கொலை
இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து மயிரிழையில் தப்பி தமிழகம் சென்ற அகதிகள்
பிரான்ஸின் புதிய தூதுவர் லயனல் நியமனம்?
பிள்ளையான் குழு உறுப்பினர் சுட்டுக்கொலை
அதிபர், உபஅதிபர், முன்னாள் ஆசிரியர் நாவலப்பிட்டியில் ரி.ஐ.டி.யினரால் கைது
ஷெல் தாக்குதலில் ஒருவர் படுகாயம்
மத்திய மாகாணத்தில் அனைத்து நடவடிக்கைகளுக்குமான கட்டளைத்தளபதியை அரசு அவசரமாக நியமித்தது
நுவரெலியா காரோட்டப் போட்டியில் ஒரு வீரர் பலி; இருவர் படுகாயம்
மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகளுடன் விமல் வீரவன்ச குழுவினர் சந்திப்பு
`இலங்கைக்கு எதிராக பொருளாதார இராஜதந்திர தடைகளை கனடா அமுல்படுத்த வேண்டும்'
இந்துசமய அறிவினையும் தத்துவங்களையும் வளர்க்க மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சு நடவடிக்கை
பல பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரி பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு
ஆட்சிமாற்றத்திற்குரிய தேர்தலாகவே இதனை தமிழ் பேசும் மக்கள் கருதுகின்றனர்
போலி வைத்தியர்களின் அதிகரிப்பால் உயிராபத்துக்குள்ளாகியிருக்கும் மக்கள்
கிழக்கு மாகாண சபை மன்றத்தின் செயலாளராக தியாகலிங்கம் நியமனம்
வெடி பொருட்கள் மீட்பு ஒருவர் தேடப்படுகிறார்
முன்னாள் இராணுவ மேஜர் அமைச்சருக்கு எதிராக மனு
பகவதி மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் ஹெல உறுமய வலியுறுத்தல்
கோஷ்டி மோதலில் ஒருவர் பலி; இருவர் காயம்
வெள்ளை வானில் கடத்தப்பட்ட லொறிச் சாரதியை காணவில்லையென முறைப்பாடு
கடைகளில் திடீர் சோதனை
கண்டியில் தேடுதல் 12 பேர் கைது
இலங்கையில் ஐ.நா.வின் பணிகளை முடக்குவதற்கு திரைமறைவில் திட்டங்கள்
சம்பூர் அனல் மின்நிலையம் நிர்மாணிக்கும் உடன்படிக்கையில் இலங்கை- இந்தியா கைச்சாத்து
வடகடல் நிறுவனத்தின் பணிகளை அதிகரிக்க ஐ.நா. அபிவிருத்தி திட்டம் 12.6 மி.ரூபா உதவி
கல்முனையில் மீன்பிடித் தொழிலை மேம்படுத்த படகு இறங்குதுறைகள் அமைக்க நடவடிக்கை
யாழ்.ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்குவதில் தாமதம்
பெருமளவான வள ஒதுக்கீடுகளை கல்விக்காக அரசு மேற்கொள்ளும் நிலையில் மாணவர்களும் பெருந்தொகை பணத்தினை செலவிடுகின்றனர்
பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர் ஆங்கில மொழியில் தேர்ச்சிபெறுவது அவசியம்
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி க.பொ.த. (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறு
நித்தம்புவவில் தேடுதல் மூன்று தமிழர்கள் கைது
ஈரானிய அரசின் நிதி உதவியுடன் கிழக்கில் புதிய வீடமைப்புத் திட்டம்
தமிழ் - முஸ்லிம்களின் காணிகள் சூறையாடப்படுவதை தடுக்க கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசுக்கு பாடம் புகட்டுங்கள்
தேர்தலில் தோற்ற பின்னர் பாராளுமன்றத்துள் மீண்டும் நுழைவதற்கு ரவூப் ஹக்கீம் திட்டம்
கிழக்குமாகாண சபைத் தேர்தல் முஸ்லிம்களை பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தல் போன்றது
அஷ்ரப் மறைவுக்குப் பின் முஸ்லிம் மக்களுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாதித்தது என்ன?
கிழக்குத் தேர்தலை வடக்கு , கிழக்கு இணைப்பு தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பாக கருதுகிறது முஸ்லிம் காங்கிரஸ்
அரிசிக்கு உத்தரவாத விலை அறிவிப்பு அரசாங்கத்தின் ஏமாற்று வித்தை
மாகாண நிர்வாக பொறுப்பிலிருந்து விடுபட்ட பாடசாலைகள் இன்று அநாதை நிலையில்
நெடுந்தீவில் அமோக நெல் விளைச்சல்
தொழிற்சங்கங்களின் பலத்தை காட்டுவதற்கன்றி தொழிலாளரின் விடுதலைக்காகவே மேதினம்
வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோரைப் பாதுகாக்க மில்லலான தோட்டத்தில் காவல் நிலையம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com