மக்கள் விடுதலை முன்னணியின் அதிருப்திக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவும் அவரது சகாக்களான பத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்தனர்.
மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர் வண. திப்படுவாவ ஷ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து ஆசி பெற்றபோது ;
அரசாங்கத்துக்கு இன்றைய காலகட்டத்தில் முழு ஆதரவையும் வழங்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.இதேபோல இவர்கள் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வண. உடுகம் புத்தரகித்த தேரரையும் சந்தித்து ஆசி பெற்றனர்.
மக்கள் விடுதலை முன்னணியை சரியான பாதையில் கொண்டு செல்வதே தனது நோக்கமென விமல் வீரவன்ச எம்.பி.அங்கு ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
மகாநாயக்க தேரர்களின் அறிவுரைகளின்படி தான் செயற்படப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விமல் வீரவன்சவும் அவரது குழுவினரும் தலதா மாளிகைக்கும் சென்று வழிபட்டனர்.