Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஈரானுடனான நெருக்கத்தால் இலங்கைக்கான ஆயுத விற்பனையை இஸ்ரேல் நிறுத்துகிறது
[21 - April - 2008] [Font Size - A - A - A]
இலங்கைக்கான ஆயுத விற்பனையை இஸ்ரேல் நிறுத்தப்போவதாக இலங்கைக்கு தெரிவித்துள்ளதுடன் இலங்கைக்கு ஏற்கனவே விற்பனை செய்த தமது ஆயுதங்கள் தொடர்பான தொழில்நுட்பம் ஈரானின் கைகளுக்குச் சென்றுவிடலாமென்றும் இஸ்ரேல் அச்சம் கொண்டுள்ளது.

ஈரானுடன் இலங்கை அரசு மிக நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி வருவதையடுத்தே இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தப்போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

கடந்த மாத பிற்பகுதியில் இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவிடமே இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தப்போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தலைமையிலான இலங்கைக்குழு இஸ்ரேலிடம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தமக்குத் தேவையான ஆயுதங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.ஆனால், தங்கள் பாதுகாப்பு அமைச்சர் எகுட் பராக்கின் ஊடாக இஸ்ரேல் அரசு தனது முடிவை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவிடம் தெரிவித்துள்ளது.

ஈரானுடன் இலங்கை அண்மைக் காலமாக நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி வருவதன் காரணமாகவே இலங்கைக்கான ஆயுத விற்பனையை தாம் நிறுத்தப்போவதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எகுட் பராக் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இஸ்ரேலைச் சேர்ந்த ஆயுத முகவர் ஒருவரிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஈடுபட்டிருந்த போதிலும் இஸ்ரேல் உயர் அதிகாரிகளின் தலையீட்டினால் அது தவிர்க்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்மையில் ஈரானுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விஜயம் செய்ததும் ஈரானிய ஜனாதிபதி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு ஒரு காரணமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாத பிற்பகுதியில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தனது இஸ்ரேலிய பயணத்தின் போது போர் விமான உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் இஸ்ரேலிய ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் பலவற்றுடன் தொடர்புகொண்டு ஆயுத உதவிகளைப் பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தபோதிலும் அந்த நிறுவனங்கள் அனைத்தும் பிரதமருடன் தொடர்புகொள்ள மறுத்துவிட்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இலங்கைக்கான பெருமளவு ஆயுத ஏற்றுமதிகள் மற்றும் முப்படையினருக்குமான போர்த் தளபாடங்களுக்குரிய உதிரிப்பாகங்கள் அனைத்தும் இலங்கைக்கு அனுப்பப்படுவதை இஸ்ரேல் இடைநிறுத்தியுள்ளது.

Email this page Your Opinion Print this page
நீர்வீழ்ச்சி மரணங்கள் அதிகரிப்பு கடந்த வருடங்களில் 801 பேர் பலி
மனித உரிமை மீறல் சம்பவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிப்பு
ஈரானுடனான நெருக்கத்தால் இலங்கைக்கான ஆயுத விற்பனையை இஸ்ரேல் நிறுத்துகிறது
பாண்டிருப்பில் கணவன், மனைவியான கிராமசேவகர்கள் சுட்டுக் கொலை
இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து மயிரிழையில் தப்பி தமிழகம் சென்ற அகதிகள்
பிரான்ஸின் புதிய தூதுவர் லயனல் நியமனம்?
பிள்ளையான் குழு உறுப்பினர் சுட்டுக்கொலை
அதிபர், உபஅதிபர், முன்னாள் ஆசிரியர் நாவலப்பிட்டியில் ரி.ஐ.டி.யினரால் கைது
ஷெல் தாக்குதலில் ஒருவர் படுகாயம்
மத்திய மாகாணத்தில் அனைத்து நடவடிக்கைகளுக்குமான கட்டளைத்தளபதியை அரசு அவசரமாக நியமித்தது
நுவரெலியா காரோட்டப் போட்டியில் ஒரு வீரர் பலி; இருவர் படுகாயம்
மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகளுடன் விமல் வீரவன்ச குழுவினர் சந்திப்பு
`இலங்கைக்கு எதிராக பொருளாதார இராஜதந்திர தடைகளை கனடா அமுல்படுத்த வேண்டும்'
இந்துசமய அறிவினையும் தத்துவங்களையும் வளர்க்க மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சு நடவடிக்கை
பல பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரி பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு
ஆட்சிமாற்றத்திற்குரிய தேர்தலாகவே இதனை தமிழ் பேசும் மக்கள் கருதுகின்றனர்
போலி வைத்தியர்களின் அதிகரிப்பால் உயிராபத்துக்குள்ளாகியிருக்கும் மக்கள்
கிழக்கு மாகாண சபை மன்றத்தின் செயலாளராக தியாகலிங்கம் நியமனம்
வெடி பொருட்கள் மீட்பு ஒருவர் தேடப்படுகிறார்
முன்னாள் இராணுவ மேஜர் அமைச்சருக்கு எதிராக மனு
பகவதி மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் ஹெல உறுமய வலியுறுத்தல்
கோஷ்டி மோதலில் ஒருவர் பலி; இருவர் காயம்
வெள்ளை வானில் கடத்தப்பட்ட லொறிச் சாரதியை காணவில்லையென முறைப்பாடு
கடைகளில் திடீர் சோதனை
கண்டியில் தேடுதல் 12 பேர் கைது
இலங்கையில் ஐ.நா.வின் பணிகளை முடக்குவதற்கு திரைமறைவில் திட்டங்கள்
சம்பூர் அனல் மின்நிலையம் நிர்மாணிக்கும் உடன்படிக்கையில் இலங்கை- இந்தியா கைச்சாத்து
வடகடல் நிறுவனத்தின் பணிகளை அதிகரிக்க ஐ.நா. அபிவிருத்தி திட்டம் 12.6 மி.ரூபா உதவி
கல்முனையில் மீன்பிடித் தொழிலை மேம்படுத்த படகு இறங்குதுறைகள் அமைக்க நடவடிக்கை
யாழ்.ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்குவதில் தாமதம்
பெருமளவான வள ஒதுக்கீடுகளை கல்விக்காக அரசு மேற்கொள்ளும் நிலையில் மாணவர்களும் பெருந்தொகை பணத்தினை செலவிடுகின்றனர்
பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர் ஆங்கில மொழியில் தேர்ச்சிபெறுவது அவசியம்
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி க.பொ.த. (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறு
நித்தம்புவவில் தேடுதல் மூன்று தமிழர்கள் கைது
ஈரானிய அரசின் நிதி உதவியுடன் கிழக்கில் புதிய வீடமைப்புத் திட்டம்
தமிழ் - முஸ்லிம்களின் காணிகள் சூறையாடப்படுவதை தடுக்க கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசுக்கு பாடம் புகட்டுங்கள்
தேர்தலில் தோற்ற பின்னர் பாராளுமன்றத்துள் மீண்டும் நுழைவதற்கு ரவூப் ஹக்கீம் திட்டம்
கிழக்குமாகாண சபைத் தேர்தல் முஸ்லிம்களை பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தல் போன்றது
அஷ்ரப் மறைவுக்குப் பின் முஸ்லிம் மக்களுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாதித்தது என்ன?
கிழக்குத் தேர்தலை வடக்கு , கிழக்கு இணைப்பு தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பாக கருதுகிறது முஸ்லிம் காங்கிரஸ்
அரிசிக்கு உத்தரவாத விலை அறிவிப்பு அரசாங்கத்தின் ஏமாற்று வித்தை
மாகாண நிர்வாக பொறுப்பிலிருந்து விடுபட்ட பாடசாலைகள் இன்று அநாதை நிலையில்
நெடுந்தீவில் அமோக நெல் விளைச்சல்
தொழிற்சங்கங்களின் பலத்தை காட்டுவதற்கன்றி தொழிலாளரின் விடுதலைக்காகவே மேதினம்
வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோரைப் பாதுகாக்க மில்லலான தோட்டத்தில் காவல் நிலையம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com