பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலரிமாளிகையில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடுவதையும் உயர்கல்வியமைச்சர் பேராசிரியர் விஷ்வவர்ணபால, பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர ஆகியோரை அமர்ந்திருப்பதையும் காணலாம். இச் சந்திப்பில் பல்கலைக்கழகங்களில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள், மாணவர்கள் உள்ளீர்ப்பு போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
அம்பேபுச இராணுவ தளத்தில் இடம்பெற்ற புதுவருட நிகழ்வுகளின்போது இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா அவரது பாரியாரும் வனிதா சேவா சங்கத்தின் தலைவியுமான அனோமா பொன்சேகா ஆகியோர் வெற்றிலை கொடுத்து வரவேற்கப்படுவதையும் இராணுவத் தளபதி மங்கள விளக்கேற்றுவதையும் அனோமா பொன்சேகா அழகுராணிப் போட்டியில் வெற்றிபெற்ற ஒருவருக்கு பூச்செண்டு வழங்குவதையும் காணலாம்.