-ஏ.தேவராஜா-
தாய்வானின் தலைநகரில் அண்மையில் நடைபெற்ற ஆசிய கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி மிகச் சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் , குகாம் நாட்டு அணிகளை மிக இலகுவாக வெற்றி பெற்றதால் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியில் குகாம் நாட்டு அணியுடன் நடைபெற்ற 1 ஆவது ஆட்டத்தில் இலங்கை அணி 5-1 என்ற கோல்களினாலும் பாகிஸ்தான் அணியுடனான 2 ஆவது போட்டியில் இலங்கை அணி 7-1 என்ற கோல்களினாலும் வெற்றி பெற்றதுடன், தாய்வான் அணியுடனான போட்டியை 2-2 என்ற கோல்கள் அடிப்படையில் சமன் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியின் 2 ஆம் சுற்று ஆட்டங்கள் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ளதாக இலங்கை உதைபந்தாட்ட அணியின் பிரதிப் பயிற்சியாளர் அன்ரனி பாலேந்திரா தெரிவித்தார்.