அரபு நாடொன்றில் வேலை செய்துவரும் ஓர் இளைஞர், நீண்ட காலமாக விடுமுறையில் இங்கு வரவில்லை. ஆனால் பெற்றோருக்கு இடையிடையே பணம் அனுப்பி வந்தார்.
மகனைக் காண ஆவல் கொண்ட பெற்றோர் வற்புறுத்தியதால் அவர் விடுமுறையில் வந்தார். வந்த நாள் முதல் நண்பர்களுடன் மது அருந்தி கூத்தும் கும்மாளமுமாக இருந்ததால் அவர் கொண்டு வந்த பணம் முழுவதும் செலவாகிவிட்டது. எனவே பெற்றோரிடம் கேட்டு அவ்வப்போது பணம் வாங்கி செலவழித்தார்.
விடுமுறை காலம் முடிவடைந்து அரபு நாட்டுக்குத் திரும்புவதற்குத் தயாரானபோது விமான நிலையத்துக்கு வாகனத்தை வாடகைக்கு அமர்த்தவும் கையில் பணம் இருக்கவில்லை. ஆகவே அதற்கும் அந்த இளைஞர், பெற்றோரையே நாடவேண்டியிருந்தது.
இத்தகைய இளைஞர்கள் தம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு உதவுகிறார்களா? உபத்திரவம் கொடுக்கிறார்களா?