Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 22, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அல்லைப்பிட்டியிலிருந்து வெளியேறிய 350 குடும்பங்களில் ஒரு தொகுதி மக்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு சென்றனர்
[22 - April - 2008] [Font Size - A - A - A]
2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி யாழ். குடாநாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளினால் அல்லைப்பிட்டிப் பகுதியிலிருந்து வெளியேறிய 350 குடும்பங்களில் ஒரு தொகுதி மக்கள் நேற்று திங்கட்கிழமை மீளக் குடியமர்ந்துள்ளனர்.

இடம்பெயர்ந்த நாளிலிருந்து பல்வேறு இன்னல்களை எதிர் நோக்கிய இந்த மக்கள் தங்களைச் சொந்த இடத்தில் மீளக்குடியமர்த்துமாறு தொடர்ச்சியாக அரசாங்க அதிபருக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கமையவே இம் மக்களின் மீள் குடியேற்றம் அமைந்திருக்கிறது.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை யுத்தம் இல்லாத நிலையில் பாதுகாப்பு நடைமுறைகளென்பது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகவே உள்ளதென்று இந்த மக்கள் தெரிவிக்கின்றனர். கஞ்சியைக் குடித்தாலும் பனம்பழத்தைச் சுட்டுச் சாப்பிட்டாலும் சொந்த இடத்தில் இருப்பதைப் போல் வராதென்று கூறுகின்றனர்.

நாவாந்துறை சென். நிக்கிலஸ் தேவாலயத்திலிருந்து 50 குடும்பங்களும் யாழ்ப்பாணம் ஓ.எல்.ஆர். தேவாலயத்திலிருந்த 5 குடும்பங்களும் மற்றும் உறவினர் வீடுகளிலிருந்த 10 குடும்பங்களுமாக 65 குடும்பங்கள் நேற்று மீளக் குடியமர்த்தப்பட்டன.

நேற்றுக் காலை முதல் மிக பரபரப்பாகக் காணப்பட்ட இந்த மக்கள் காலை 8 மணியளவில் அரச செயலகத்தால் அனுப்பப்பட்ட லொறிகளில் தமது உடைமைகளை ஏற்றியதோடு தாம் தங்கியிருந்த காலத்தில் தமக்குப் பல்வேறு வழிகளிலும் உதவிகளை வழங்கிய ஊரவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

முற்பகல் 9.30 மணியளவில் சென்.நிக்கிலஸ் தேவாலயத்திற்கு வந்த யாழ். அரச அதிபர் க. கணேஷ் திட்டமிடல் பணிப்பாளர் ம.பிரதீபன் உள்ளிட்ட அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலின் போது அரச அதிபர் உரையாற்றுகையில்;

" நீண்ட காலக் கஷ்டங்களின் பின்னர் நீங்கள் இன்று உங்களது சொந்த இடத்தில் குடியேறச் செல்கிறீர்கள். குடாநாட்டிலுள்ள நிறுவனங்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஒத்துழைப்புடன் உங்களுக்கான அடிப்படை வசதிகள் படிப்படியாக ஏற்படுத்தித் தரப்படும். உங்களுக்கான மீள் குடியமர்வுக் கொடுப்பனவோடு நிவாரணம் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அல்லைப்பிட்டிக் கடற்படை அதிகாரியுடன் கதைத்த போது அவர் உங்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கியுள்ளார். எஞ்சியவர்களையும் மீளக் குடியமர்த்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுடைய நலனில் மாவட்டச் செயலகம் தொடர்ந்து அக்கறையுடன் இருக்கும்.

உங்கள் மீளக் குடியமர்வும், வாழ்வும் நல்லபடியாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து திட்டமிடல் பணிப்பபாளர் பிரதீபன் மற்றும் அல்லைப்பிட்டி கிராம சேவையாளர் உட்பட மாவட்டச் செயலக அதிகாரிகள் மக்களை அல்லைப்பிட்டிக்கு அழைத்துச் சென்றனர்.

தங்களுடைய மீளக் குடியமர்வு தொடர்பாக அல்லைப்பிட்டி சென். பிலிப்ஸ் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஜி. அலன் கருத்துத் தெரிவிக்கையில்;

"எமது மக்களுக்கு இங்கு சரியான கஷ்டம். தொடர்ந்தும் முகாம் வாழ்க்கை வாழ முடியாது. கடந்த 20 மாதங்களாக நாங்கள் இங்கு கஷ்டப்படுகின்றோம். எங்களை எவரும் வற்புறுத்த வில்லை. எங்கள் சுய விருப்பின் பேரிலேயே எங்களுடைய இடங்களுக்குச் செல்கின்றோம்.

எமது சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதோடு வீடு இல்லாதவர்களுக்கு தற்காலிக வீடுகளை அமைத்துத் தருவதற்கு வேர்ல்ட் விஷன் (உலக தரிசனம்) நிறுவனம் முன் வந்துள்ளது. சோ- ஆ நிறுவனம் கிணறுகளையும் மலசல கூடங்களையும் சுத்தப்படுத்தித் தந்துள்ளது. ஹரிட்டாஸ் நிறுவனம் வலைகளை வழங்கியதால் அல்லைப்பிட்டி வடபகுதியில் நாம் தொழில் செய்யக் கூடியதாக உள்ளது. தற்போது 48 பேர் தொழில் செய்கின்றோம்.

இடம் பெயர்ந்திருக்கின்ற மேலும் 58 குடும்பங்கள் மீளக் குடியமர விருப்பம் தெரிவித்து கடிதங்களை வழங்கியுள்ளன. இது தொடர்பாக அரச அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
மின்விநியோக பரிமாற்றத்துக்கு இலங்கை, இந்தியா நடவடிக்கை
`அரிசி' கோரிக்கைக்கு இந்தியா காலை வாரிவிடும் அறிகுறி
கிழக்கில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிப்பு வன்முறைகளும் மோசமாக அதிகரிப்பு
கருணாரட்ணம் அடிகளின் படுகொலை மனித உரிமை ஆர்வலர்களை நசுக்கும் முயற்சி
இலங்கையின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் ஆட்சேபனை
எலிக்காய்ச்சலால் இதுவரை 41 பேர் மரணம்
கருணாரட்ணம் அடிகள் படுகொலைக்கு விடுதலைப் புலிகள் கடும் கண்டனம்
வடக்கில் பல இடங்களில் மோதல் 5 இராணுவம், 28 புலிகள் பலி
கிழக்கு மாகாண சபை தேர்தலில் 22,412 தபால் மூல வாக்குகள்
முல்லைத்தீவுக் கடலில் புலிகளின் படகுகள் மீது `கிபீர்' தாக்குதல்
இளம் குடும்பஸ்தரான முச்சக்கரவண்டி சாரதி வெள்ளை வானில் வந்தோரால் கடத்தப்பட்டார்
ஆட்டோ - பஸ் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் ஸ்தலத்தில் பலி; ஒருவர் படுகாயம்
தலவாக்கலையில் பனிக்கட்டி மழை வீடுகள் சேதம்; மரங்கள் முறிந்தன
யால காட்டில் காணாமல் போன மூவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்பு
நிராயுதபாணிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது மனித உயிருக்கான கேவல நிலையை காட்டுகிறது
தமிழக அகதி முகாம்களிலிருப்போருக்கு பிரஜாவுரிமை சான்றிதழ் வழங்க ஏற்பாடு
ஆலங்குடா கடற்கரையில் மீனவரின் சடலம் மீட்பு
மோட்டார் சைக்கிள் - கார் மோதி இருவர் பலி; அவிசாவளையில் சம்பவம்
6 மாதங்களில் 4 ஆயிரம் மகப்பேறுகள் மகப்பேற்று வைத்திய நிபுணரின் சாதனை
இடம்பெயர்ந்த ஆசிரியர்கள் தொடர்ந்தும் 4 மாதங்கள் சேவையாற்ற அனுமதி
பிரசார நடவடிக்கைகளை ஆராய 4 அமைச்சர்கள் கிழக்கிற்கு விஜயம்
பரீட்சை மோசடிக்கான தண்டனையை இரட்டிப்பாக்க திணைக்களம் நடவடிக்கை
பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ரயில் சேவையை அதிகரிக்க கோரிக்கை
விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கு அதிகூடிய உத்தரவாத விலையை அறிவிக்காதது ஏன்?
இம்முறை ஜே.வி.பி.யின் மேதின ஊர்வலம் இல்லை பொதுக் கூட்டத்தை மட்டுமே நடத்த முடிவு
மானிய அடிப்படையில் உணவுப் பொருட்களை வழங்குமாறு தொழிற்சங்கங்கள் கோரிக்கை
தேசிய மாநாட்டிலேயே கட்சிக்கான புதிய நியமனங்கள்; ஜே.வி.பி. தெரிவிப்பு
மௌலவி நியமனம் வழங்கி உலமாக்களை கௌரவித்த ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த வேண்டும்
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவை அதிகரிக்க கோரிக்கை
முகாமையாளரை இடமாற்றக் கோரி ஊட்டுவள்ளித் தோட்ட தொழிலாளர் வேலை நிறுத்தம்
மனித உரிமை மீறல் அதிகரிப்பின் எதிரொலி இலங்கைமீது தடைகளை விதிக்க வலியுறுத்தல்
சமய அறிவைப் பெறும் சமூகம் சீரும் சிறப்புமாக மிளிரும்
அல்லைப்பிட்டியிலிருந்து வெளியேறிய 350 குடும்பங்களில் ஒரு தொகுதி மக்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு சென்றனர்
ஒப்பீட்டளவில் சமுர்த்தி நிறுவனம் மாத்திரமே யாழ் மக்களுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருகின்றது
அரசில் மீண்டும் இணையுமாறு சிலர் வற்புறுத்தினாலும் ஐ.தே.க.வைவிட்டு நான் ஒரு போதும் செல்லமாட்டேன்
முன்பள்ளியின் அவசியத்தை புரிந்து கொள்ள முடியாத நிலையில் மலையகத்தில் 70 சதவீதமான பெற்றோர்கள்
இரத்தினபுரி மாவட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் தளபாடம் பற்றாக்குறை
பெரும்பான்மை மக்கள் அனுபவிக்கும் உரிமைகள் பெருந்தோட்ட மக்களை சென்றடையவேண்டும்
அட்டன் கல்விப் பணிமனையில் தனிச் சிங்களத்தில் படிவங்கள்
கல்முனையில் முதலாவது பிரசாரக் கூட்டம்
மட்டு. மாவட்ட ஐ.ம.சு.மு.தேர்தல் இணைப்பாளராக றவூப் மஜீட் நியமனம்
கிழக்கில் சமாதானம் ஏற்பட்டுள்ளதாக நிரூபிக்க பேரினவாத அரசு வேடம் போடுகின்றது
அரசியல் அதிகாரத்தை வைத்திருப்போருக்கு எதிரான தளம் உருவாக்கப்படுவது அவசியம்
1988 இல் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் 17 ஆசனங்களை பெற்றது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com