Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 22, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
இளம் குடும்பஸ்தரான முச்சக்கரவண்டி சாரதி வெள்ளை வானில் வந்தோரால் கடத்தப்பட்டார்
[22 - April - 2008] [Font Size - A - A - A]
மோதரையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பிள்ளையின் தந்தையான முச்சக்கரவண்டி சாரதியை வெள்ளைவானில் சிவில் உடையில் வந்தவர்கள் கடத்திச் சென்றுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திலும், வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்ப பயிற்சி பிரதி அமைச்சருமான பெ. இராதாகிருஷ்ணனிடமும் குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கைதடியை பிறப்பிடமாக கொண்ட 26 வயதுடைய தம்பிராஜா கார்த்தீபன் என்ற இளம் குடும்பஸ்தரே கடந்த 19 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணியளவில் புதுச்செட்டித்தெருவில் வைத்து கடத்தப்பட்டுள்ளார்.

இவர் கடத்தப்பட்டது தொடர்பாக மனைவியான கார்த்தீபன் சுஜிதா பிரதி அமைச்சரிடம் தெரிவித்ததாவது;

1997 ஆம் ஆண்டு கொழும்புக்கு வந்த எனது கணவரை 2003 ஆம் ஆண்டு நான் திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஒரு குழந்தையுண்டு. எனது கணவருடன் அளுத்மாவத்தை 702/6, என்ற விலாசத்தில் வசித்து வருகின்றேன்.

சம்பவ தினம் எனது கணவர் இரவு 10 மணியாகியும் வீடு திரும்பாத நிலையில் கொட்டாஞ்சேனை பொலிஸார் எமது வீட்டைத் தேடிவந்து எனது கணவரது முச்சக்கரவண்டி புதுச்செட்டித்தெருவில் நிறுத்தப்பட்டிருப்பதாகவும், பொதுமக்களின் தகவலையடுத்து முச்சக்கரவண்டியை கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதாகவும், தெரிவித்து, எனது கணவரைப் பற்றி விசாரித்தார்கள். அதைத் தொடர்ந்து கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்கு சென்று கணவர் காணாமல் போனது தொடர்பாக புகார் செய்தேன். அத்துடன், சம்பவம் நடந்த இடத்திலிருந்தவர்கள் தெரிவித்த தகவலின்படி சனிக்கிழமை மாலை 6 மணியளவில் முச்சக்கரவண்டியில் புதுச்செட்டித் தெருவுக்கு சென்றுகொண்டிருந்த எனது கணவரை பின்தொடர்ந்த வெள்ளை வான் அவரை இடைமறித்து முச்சக்கரவண்டியை நிறுத்தி பலவந்தமாக சிவில் உடையில் வந்தவர்கள் ஏற்றிச் சென்றதாக தெரிவித்தனர்.

எனக்கோ, எனது கணவருக்கோ எதுவிதமான அநாவசிய தொடர்புகள் எவருடனும் இருந்ததில்லை. நிரபராதியான எனது கணவரை கண்டுபிடித்து தாருங்கள் என்று தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் என்.கே. இலங்ககோனிடம் பிரதி அமைச்சர் புகார் செய்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
மின்விநியோக பரிமாற்றத்துக்கு இலங்கை, இந்தியா நடவடிக்கை
`அரிசி' கோரிக்கைக்கு இந்தியா காலை வாரிவிடும் அறிகுறி
கிழக்கில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிப்பு வன்முறைகளும் மோசமாக அதிகரிப்பு
கருணாரட்ணம் அடிகளின் படுகொலை மனித உரிமை ஆர்வலர்களை நசுக்கும் முயற்சி
இலங்கையின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் ஆட்சேபனை
எலிக்காய்ச்சலால் இதுவரை 41 பேர் மரணம்
கருணாரட்ணம் அடிகள் படுகொலைக்கு விடுதலைப் புலிகள் கடும் கண்டனம்
வடக்கில் பல இடங்களில் மோதல் 5 இராணுவம், 28 புலிகள் பலி
கிழக்கு மாகாண சபை தேர்தலில் 22,412 தபால் மூல வாக்குகள்
முல்லைத்தீவுக் கடலில் புலிகளின் படகுகள் மீது `கிபீர்' தாக்குதல்
இளம் குடும்பஸ்தரான முச்சக்கரவண்டி சாரதி வெள்ளை வானில் வந்தோரால் கடத்தப்பட்டார்
ஆட்டோ - பஸ் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் ஸ்தலத்தில் பலி; ஒருவர் படுகாயம்
தலவாக்கலையில் பனிக்கட்டி மழை வீடுகள் சேதம்; மரங்கள் முறிந்தன
யால காட்டில் காணாமல் போன மூவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்பு
நிராயுதபாணிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது மனித உயிருக்கான கேவல நிலையை காட்டுகிறது
தமிழக அகதி முகாம்களிலிருப்போருக்கு பிரஜாவுரிமை சான்றிதழ் வழங்க ஏற்பாடு
ஆலங்குடா கடற்கரையில் மீனவரின் சடலம் மீட்பு
மோட்டார் சைக்கிள் - கார் மோதி இருவர் பலி; அவிசாவளையில் சம்பவம்
6 மாதங்களில் 4 ஆயிரம் மகப்பேறுகள் மகப்பேற்று வைத்திய நிபுணரின் சாதனை
இடம்பெயர்ந்த ஆசிரியர்கள் தொடர்ந்தும் 4 மாதங்கள் சேவையாற்ற அனுமதி
பிரசார நடவடிக்கைகளை ஆராய 4 அமைச்சர்கள் கிழக்கிற்கு விஜயம்
பரீட்சை மோசடிக்கான தண்டனையை இரட்டிப்பாக்க திணைக்களம் நடவடிக்கை
பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ரயில் சேவையை அதிகரிக்க கோரிக்கை
விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கு அதிகூடிய உத்தரவாத விலையை அறிவிக்காதது ஏன்?
இம்முறை ஜே.வி.பி.யின் மேதின ஊர்வலம் இல்லை பொதுக் கூட்டத்தை மட்டுமே நடத்த முடிவு
மானிய அடிப்படையில் உணவுப் பொருட்களை வழங்குமாறு தொழிற்சங்கங்கள் கோரிக்கை
தேசிய மாநாட்டிலேயே கட்சிக்கான புதிய நியமனங்கள்; ஜே.வி.பி. தெரிவிப்பு
மௌலவி நியமனம் வழங்கி உலமாக்களை கௌரவித்த ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த வேண்டும்
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவை அதிகரிக்க கோரிக்கை
முகாமையாளரை இடமாற்றக் கோரி ஊட்டுவள்ளித் தோட்ட தொழிலாளர் வேலை நிறுத்தம்
மனித உரிமை மீறல் அதிகரிப்பின் எதிரொலி இலங்கைமீது தடைகளை விதிக்க வலியுறுத்தல்
சமய அறிவைப் பெறும் சமூகம் சீரும் சிறப்புமாக மிளிரும்
அல்லைப்பிட்டியிலிருந்து வெளியேறிய 350 குடும்பங்களில் ஒரு தொகுதி மக்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு சென்றனர்
ஒப்பீட்டளவில் சமுர்த்தி நிறுவனம் மாத்திரமே யாழ் மக்களுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருகின்றது
அரசில் மீண்டும் இணையுமாறு சிலர் வற்புறுத்தினாலும் ஐ.தே.க.வைவிட்டு நான் ஒரு போதும் செல்லமாட்டேன்
முன்பள்ளியின் அவசியத்தை புரிந்து கொள்ள முடியாத நிலையில் மலையகத்தில் 70 சதவீதமான பெற்றோர்கள்
இரத்தினபுரி மாவட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் தளபாடம் பற்றாக்குறை
பெரும்பான்மை மக்கள் அனுபவிக்கும் உரிமைகள் பெருந்தோட்ட மக்களை சென்றடையவேண்டும்
அட்டன் கல்விப் பணிமனையில் தனிச் சிங்களத்தில் படிவங்கள்
கல்முனையில் முதலாவது பிரசாரக் கூட்டம்
மட்டு. மாவட்ட ஐ.ம.சு.மு.தேர்தல் இணைப்பாளராக றவூப் மஜீட் நியமனம்
கிழக்கில் சமாதானம் ஏற்பட்டுள்ளதாக நிரூபிக்க பேரினவாத அரசு வேடம் போடுகின்றது
அரசியல் அதிகாரத்தை வைத்திருப்போருக்கு எதிரான தளம் உருவாக்கப்படுவது அவசியம்
1988 இல் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் 17 ஆசனங்களை பெற்றது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com