பிறந்தின வைபவமொன்றிற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த ஆட்டோ பாதையை விட்ட விலகி 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் பட்டவத்தை தோட்ட டூமோ என்ற இடத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் எஸ்.மயில்வாகனம் (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார்.
பசறை அம்மனிவத்தை என்ற இடத்தில் விட்டு பிறந்த தின வைபவமொன்றில் கலந்துகொண்டு, ஆட்டோவொன்றில் சாரதியுடன் ஏழுபேர் பட்டவத்தைக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே, ஆட்டோ விபத்திற்குள்ளாகியுள்ளது.
ஆட்டோவில் சென்ற ஏழுபேரில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
இதில் இருவர் பதுளை அரசினர் மருத்துவமனையிலும் மூவர் மெட்டிகாதன்னை அரசினர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில், பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையிலிருப்பதாக தெரியவருகின்றது. இது தொடர்பான விசாரணைகளை மடுல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.