வெள்ளைவான் ஆயுததாரிகளால் கடந்த மார்ச் 3 ஆம் திகதி கடத்தி செல்லப்பட்ட 16 வயது நிரம்பிய நற்குணம் புஷ்பராணி என்பவர் தொடர்பாக உடனடியாக விசாரணைநடத்தி கடத்திய ஆயுததாரிகளை கைது செய்யுமாறு மேலதிக அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறும் கல்குடா பொலிஸாருக்கு வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக மட்டக்களப்பு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேநேரம் மார்ச் 4 ஆம் திகதி கடத்தி செல்லப்பட்ட 15 வயது நிரம்பிய யோகநாதன் யசோதா தொடர்பாகவும் பிரதி பொலிஸ் மா அதிபரின் நடவடிக்கைக்கும், அறிக்கைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொலிஸார் குற்றச்சாட்டுகளை பயங்கர ஆயுதங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழும், தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 354 இலும் வழக்கை தாக்கல் செய்துள்ளார்கள்.