Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கொழும்பில் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு வெளியிடங்களிலிருந்து லொறிகள் வரவில்லை
[23 - April - 2008] [Font Size - A - A - A]
*வெறுங்கையுடன் திரும்பும் சில்லறை வர்த்தகர்கள்

எம்.ஏ.எம். நிலாம்

கொழும்பு புறக்கோட்டை அரிசி வர்த்தகமையத்தில் எந்தவொரு மொத்த விற்பனை நிலையங்களிலும் அரிசி விற்பனைக்கு இருக்கவில்லை. வெளியூர்களிலிருந்து வந்த சில்லறை வர்த்தகர்கள் வெறுங்கையுடன் திரும்பும் நிலையே காணப்பட்டது.

வெளி மாவட்டங்களிலிருந்து நேற்று அரிசி லொறிகள் எதுவுமே வரவில்லை. மொத்த வியாபாரிகள் தமது கடைகளை திறந்து வைத்திருந்த போதிலும் அங்கு அரிசி காணப்படவில்லை. எந்தவொரு கடையிலும் ஒரு கிலோ அரிசியைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலையே காணப்பட்டது.

இந்த நிலைமை காரணமாக கொழும்பிலுள்ள ஹோட்டல்கள், உணவகங்களின் உரிமையாளர்கள் சாப்பாட்டுக்காக அரிசியை தேடி அலையும் நிலை தோன்றியுள்ளது. இன்று நெல் ஆலைகளிலிருந்து மொத்த வியாபாரிகளுக்கு அரிசி வரவில்லையென்றால் சாப்பாட்டுக் கடைகள், ஹோட்டல்களில் "சோறு" இல்லை என்ற வாசக அட்டைகளை தொங்கவிட வேண்டிய நிலை ஏற்படுமென்று உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரதான நெல் ஆலைகள் இருக்கும் அநுராதபுரம், பொலநறுவை, கெக்கிராவை போன்ற இடங்களிலிருந்து நேற்றைய தினம் ஒரு லொறி கூட கொழும்புக்கு வரவில்லை.

நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படும் வரை நெல் குற்றும் பணி இடை நிறுத்தப்பட்டிருப்பதாக ஆலை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். நெல்லின் உத்தரவாத விலையை தீர்மானிக்கும் பொறுப்பை நெல் ஆலை உரிமையாளர்களிடமும் மொத்த வியாபாரிகளிடமும் அரசாங்கம் விட்டதன் காரணமாக உத்தரவாத விலையைத் தீர்மானிப்பதில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.

தமிழ், சிங்கள புதுவருடத்துக்குப் பின்னர் நெல் ஆலைகளிலிருந்து அரிசியை ஏற்றிக் கொண்டு ஒரு லொறி கூட கொழும்புக்கு வரவில்லை. ஏற்கனவே இருந்த கையிருப்பு கடந்த திங்கட்கிழமையுடன் முடிவடைந்துவிட்டதாகவும் இனிமேல் நெல் ஆலைகளிலிருந்து அரிசி வந்தால் மட்டுமே சில்லறை வர்த்தகர்களுக்கு அரிசியை வழங்க முடியுமென மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

இன்று நெல் ஆலைகளிலிருந்து கொழும்புக்கு அரிசி லொறிகள் வராவிட்டால் மொத்த விற்பனை நிலையங்களை மூட வேண்டி ஏற்படலாமென மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர் மாநாட்டை நடத்திய பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, நாட்டில் அரிசிக்கு பெருந்தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன மக்களை ஏமாற்றுவதற்காக அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை என்று கூறுகிறார் என்று தெரிவித்தார்.

இந்நிலை இன்னும் ஒரு சில வாரங்களுக்குத் தொடருமானால் நாடு பட்டினிச் சாவை எதிர்நோக்கும் அபாயம் காணப்படுவதாகவும் உணவுப் பார்சல்களை தட்டிப் பறிக்கும் நிலை ஏற்படலாமெனவும் ரவிகருணாநாயக்க தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடமிருந்து வெளிப்படையான தீர்வை எதிர்பார்க்க முடியாது
தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்களுடன் அமெரிக்க உயரதிகாரி திடீர் சந்திப்பு
கொழும்பில் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு வெளியிடங்களிலிருந்து லொறிகள் வரவில்லை
கருணாரட்ணம் அடிகள் படுகொலைக்கு நோர்வே அரசு கடும் கண்டனம்
மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகத்திடம் எடுத்துச்செல்வதில் பெரும் பங்களிப்பு வழங்கியவர்
முகமாலையில் கவசப்படையணி முன்னேற முயற்சி முறியடித்ததாக விடுதலைப் புலிகள் தெரிவிப்பு
ஆனைவிழுந்தான் பகுதியில் கிளைமோர் தாக்குதல் பூநகரி ப.நோ.கூ.ச. பணியாளர் இருவர் காயம்
இராணுவத்திலிருந்து தப்பியோடியோருக்கு அரசாங்கம் மீண்டும் பொதுமன்னிப்பு
ஈரான் ஜனாதிபதியின் தெற்காசிய விஜயம் அமெரிக்கா முன்வைக்கும் `நிபந்தனைகள்'
நிதி உதவிக்காக ஈரான், சீனா பக்கம் கவனத்தை திருப்பியுள்ள இலங்கை
அரசின் மனித உரிமை மீறல்கள் உலகிற்கு தெரியவருவதை தடுக்கவே கருணாரட்ணம் அடிகள் கொல்லப்பட்டார்
முல்லைத்தீவில் விமானத் தாக்குதலில் இளைஞன் பலி; 2 சிறுமிகள் உட்பட 8 பேர் காயம்
மனைவியை பிரிந்து வாழும் மனநோயாளியை காணவில்லை ; சகோதரி பிரதியமைச்சரிடம் புகார்
வங்கி ஊழியர் சங்கம், வர்த்தக ஊழியர் சங்கத்துடன் இணைந்து ஐ.தொ. சம்மேளனத்தின் மே தின நிகழ்வுகள்
வர்த்தகர் வீட்டில் கைக்குண்டு மீட்பு
கருணாரட்ணம் அடிகளாரின் படுகொலைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனம்
தேயிலை கொழுந்துகளை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி மயங்கி விழுந்து மரணம்
கிழக்கில் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணி இன்று ஆரம்பம்
கடத்தப்பட்ட இருவர் குறித்து நடவடிக்கையெடுக்குமாறு உத்தரவு
இராணுவ வீரர் கத்திக் குத்துக்கு பலி
ஆயுதங்கள் சகிதம் ஐந்து கொள்ளையர் செட்டிகுளத்தில் பொலிஸாரால் கைது
பட்டவத்தை ஆட்டோ விபத்தில் ஒருவர் பலி, ஐவர் படுகாயம்
தமிழ் பேசும் சமூகத்தின் ஒற்றுமைக்காக அர்ப்பணித்திருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றியடைவது நிச்சயம்
தரமான தேயிலையை உற்பத்தி செய்யாத தொழிற்சாலைகளின் அனுமதி ரத்து செய்யப்படும்
பிரிட்டிஷ் பிரஜை கடலில் மூழ்கி மரணம்
"எமது சமூக அமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் மூத்தோர் பராமரிப்பு பாரிய சுமையாக மாறி வருகின்றது"
அரிசி விலைப் பட்டியல் காட்சிப்படுத்தப்படாமையினால் பாவனையாளர்களுக்கு பெரும் இடையூறு
நாடுபூராவும் ஜனநாயக சூழலை உருவாக்கும் நடவடிக்கையையே ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்
வழிகாட்டல் முறையாக முன்னெடுக்கப்படுமாயின் ஒவ்வொரு குடும்பமும் சமாதானத்தை அனுபவிக்க முடியும்
22 வருடங்கள் நரிகளாக இருப்பதை விட 2 ஆண்டுகள் சிங்கமாக இருக்க விரும்புகிறேன்
வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலமே முஸ்லிம் முதலமைச்சரை பெற்றுக் கொள்ள முடியும்
வங்குரோத்தான அரசியல் கட்சிகளை நம்பி ஏமாறாமல் ஐ.ம.சு. முன்னணியையே மக்கள் ஆதரிக்க வேண்டும்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எந்த இனம் வெற்றி பெற்றாலும் மற்ற இனத்தின் உதவியுடனேயே ஆட்சியமைக்க முடியும்
தமது மண்ணை பேரினவாதிகளின் கெடுபிடிகளிலிருந்து மீட்பதற்காக தமிழ் மக்களும் இம்முறை ஐ.தே.க.வுக்கே வாக்களிக்க முடிவு
சக இன மக்களின் நிலங்களை சுவீகரிப்பது கூட்டான ஆட்சிமுறைக்கு விரோதமானது
இம்முறை மேதின ஒன்றுகூடல்கள் எவையுமில்லை
கல்விமாணி கற்கைநெறி பரீட்சை நேர சூசியில் ஏற்பட்ட மாற்றத்தினால் மாணவர் பாதிப்பு
அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை உலகிற்கு வெளிப்படுத்தியவர் கருணாரட்ணம் அடிகள்
படுகொலை செய்யப்பட்டோரின் உடல்களை காகங்கள் குதறிய வண்ணம் இருந்ததை கண்டேன்
சாய்ந்தமருது நெடுஞ்சாலை புனரமைப்பு பணியை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com