Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடமிருந்து வெளிப்படையான தீர்வை எதிர்பார்க்க முடியாது
[23 - April - 2008] [Font Size - A - A - A]
*நம்பிக்கையில்லை; வெளியேறிய சர்வதேச சுயாதீன நிபுணர்கள் தெரிவிப்பு

யோ.நிமல்ராஜ்

பாரதூரமான 16 மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளை அவதானித்து வழிகாட்டல்களை மேற்கொள்வதற்காக வருகை தந்து தமது பணியை இடைநிறுத்தி வெளியேறியிருக்கும் சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழு,ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் வெளிப்படையான தீர்வொன்றை முன்வைக்க முடியுமென்ற நம்பிக்கை தமக்கில்லையென அதிருப்தியும் கவலையும் தெரிவித்துள்ளது.

அத்துடன் தமது வெளியேற்றத்திற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை தொடர்பான விசாரணைகள் மிகவும் தாமதமாக முன்னெடுக்கப்படுவதும் காரணமென நிபுணர் குழு சாடியுள்ளது.

சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழுவின் வெளியேற்றம் தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவ்வமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.

இலங்கையின் பாரதூரமான மனித உரிமை மீறல்களின் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை கண்காணிப்பதற்கும் சுயாதீனமான விசாரணைகள் நடைபெறுவதற்காகவும் சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்குழு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவால் கடந்த 2007 பெப்ரவரியில் நியமிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதியின் இவ்வேண்டுகோளினைத் தொடர்ந்து அன்று தொடக்கம் பதின்மூன்று மாதங்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளைக் கண்காணிக்கும் பணியில் இச் சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழு ஈடுபட்டு வந்தது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பான 16 வழக்குகளை கண்காணித்து வந்த சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர் குழு கடந்த மாதம் முதல் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை அவதானிக்கும் பணிகளை நிறுத்திக் கொண்டது.

அவ்விடயம் தொடர்பாக அக் குழுவினரால் விடுக்கப்பட்டிருந்த அறிக்கையில்; மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கான அரசியல் துணிவு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை.

அத்துடன் இலங்கையில் மீறப்படும் மனித உரிமை மீறல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகள் வெளிப்படைத் தன்மையற்றவை.

இவ் ஜனாதிபதி ஆணைக்குழுவினரால் நடத்தப்படும் விசாரணைகள் சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டனவாக அமைந்திருக்கவும் இல்லை.

இலங்கையில் இனந்தெரியாதவர்கள் என்ற பெயரில் நடத்தப்பட்டுள்ள மனிதப் படுகொலைகள், ஆட்கடத்தல், மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளமை என்பன எந்த ரீதியிலும் நியாயப்படுத்தக் கூடிய விடயமல்ல எனவும் சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழு தனது இறுதி அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பான ஊடகவியலாளர் மாநாடொன்று நேற்று செவ்வாய்க்கிழமை சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழுத் தலைவரும் இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் பி.நற்வர்லால் பகவதி தலைமையில் கொழும்பு ஹில்டனில் நடைபெற்றது.

இச் சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழுவில் இந்தியா, பிரான்ஸ், இந்தோனேஷியா, அமெரிக்கா, நெதர்லாந்து,பங்களாதேஷ், கனடா, சைப்பிரஸ்,பிரிட்டன்,அவுஸ்திரேலியா, மற்றும் யப்பான் ஆகிய நாடுகளின் சட்டவியல் நிபுணர்கள் அங்கம் வகித்திருந்தனர்.

செய்தியாளர் மாநாட்டில் தலைவர் பி.என். பகவதியுடன் ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் யோசோ யொக்காடோ மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பேராசிரியர் நிகேல் றொட்லே ஆகியோரும் கருத்துகள் தெரிவித்திருந்தனர்.

சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழுவின் தலைவர் பி.என்.பகவதி கருத்துத் தெரிவிக்கையில்;

ஜனாதிபதியின் வேண்டுகோளைத் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளை ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை செய்யும் போது அவதானிக்கும் பணியில் எமது குழு செயற்பட்டு வந்தது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஒவ்வொரு விசாரணையின்போதும் எமது குழுவின் நிபுணர்களோ அல்லது அவர்களின் உதவியாளர்களோ அல்லது அவர்கள் இருவருமோ பிரசன்னமாகி இருப்பார்கள்.

எமது இவ்வுறுப்பினர்களின் அவதானிப்பின் கீழ்த்தான் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால், ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் சர்வதேச சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டவையாகவோ வெளிப்படையானவையாகவோ இருக்கவில்லை.

அத்துடன் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழுவினரால் விதிக்கப்பட்ட ஒழுங்கு முறைகளுக்கு உட்பட்டவையாகவும் இருக்கவில்லை.

சர்வதேச சுயாதீன நிபுணர்கள் குழுவின் சட்ட முறைகள் இலங்கையின் சட்ட முறைகளுக்கு முற்றிலும் முரணானதென்ற கருத்து இலங்கையில் உள்ள அரசியல் பிரமுகர்கள் சிலரால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அதில் எந்தவிதமான நியாயமும் இல்லை. ஏனெனில், இலங்கையின் சட்டமுறைகளும் இந்தியாவின் சட்ட முறைகளும் கிட்டத்தட்ட ஒருமித்த தன்மையுடையனவாகவே காணப்படுகின்றன.

அத்துடன், அச் சட்டமுறைகள் சர்வதேச சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டதாகவே இருக்கின்றன.

ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளிப்படையான தீர்வொன்றினை முன்வைக்க முடியுமென்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை.

அத்துடன் தற்பொழுது ஜனாதிபதி ஆணைக்குழுவினரால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் விசாரணைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்காக மட்டுமே நடத்தப்படுகின்றதே ஒழிய எமக்காக அல்ல.

இந்நிலையில் தற்போது நடைபெறும் விசாரணைகளுக்கும் எமக்கும் எதுவிதமான தொடர்புகளும் இல்லை.

அத்துடன் இந்த விசாரணைகள் இலங்கையின் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக உரிய தீர்வொன்றினை பெற்றுக் கொடுக்குமென்பதிலும் எமக்கு நம்பிக்கை இல்லை.

மேலும் சர்வதேச அளவில் மனித உரிமை மீறல்களும் வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால்,இலங்கையில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை ஏனைய நாட்டின் மனித உரிமை மீறல்களுடன் ஒப்பிட முடியாதெனத் தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவித்த இக்குழுவின் அங்கத்தவரான யப்பானைச் சேர்ந்த பேராசிரியர் யோசோ யொக்காடோ; சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழு ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டு இலங்கையில் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளது.

அது முற்றிலும் ஏற்க முடியாதவொரு கருத்தாகும். ஏனெனில், இக் குழுவில் இந்தியா, பங்களாதேஷ், சைப்பிரஸ், அமெரிக்கா,அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் நிபுணர்களும் அங்கம் வகிக்கின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில், இக்குழு ஐரோப்பாவைச் சார்ந்ததென்ற குற்றச்சாட்டை ஒரு போதும் ஏற்க முடியாது.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான 16 வழக்குகளை அவதானிப்பதற்காக எமது குழு நியமிக்கப்பட்டிருந்தது.

அதன்படி எமது குழுவின் அங்கத்தவர்கள் தவறாது ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் இம் மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகள் ஜனாதிபதி ஆணைக்குழுவினரால், மெத்தனப் போக்கினால், மேற்கொள்ளப்படுவதே எமது வெளியேற்றத்துக்குக் காரணம்.

இவ்வாறான நிலையில் எமது கண்காணிப்பு அங்கு தேவையற்றதொன்றாகவே காணப்படுகின்றது.

மேலும் நிதிப்பற்றாக்குறை காரணமாகத்தான் எமது குழு கண்காணிப்புப் பணிகளில் இருந்து விலகிக் கொள்வதாகவும் கருத்துகள் நிலவுகின்றன.

அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதொரு கருத்தாகும்.ஏனெனில், எமது குழுவின் விசாரணைகளுக்கு பெருந்தொகையான பணத்தினை நாம் செலவிட்டுள்ளோம்.

இவ்வாறான நிலையில் எம்மால் தொடர்ந்தும் கண்காணிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் ஒரு வருடத்திற்கோ அல்லது அதற்கு கூடிய காலப்பகுதிக்கோ உரித்தான செலவினைப் பொறுப்பேற்க சர்வதேச அமைப்புகள் தயாராகவே இருக்கின்றன.

எமது கண்காணிப்புப் பணிகளை தொடர்ந்தும் நாம் முன்னெடுக்கப் போவதில்லை.

சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழு ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்ததொன்றல்ல. அது ஒரு சர்வதேச ரீதியான அமைப்பாகுமெனத் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடமிருந்து வெளிப்படையான தீர்வை எதிர்பார்க்க முடியாது
தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்களுடன் அமெரிக்க உயரதிகாரி திடீர் சந்திப்பு
கொழும்பில் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு வெளியிடங்களிலிருந்து லொறிகள் வரவில்லை
கருணாரட்ணம் அடிகள் படுகொலைக்கு நோர்வே அரசு கடும் கண்டனம்
மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகத்திடம் எடுத்துச்செல்வதில் பெரும் பங்களிப்பு வழங்கியவர்
முகமாலையில் கவசப்படையணி முன்னேற முயற்சி முறியடித்ததாக விடுதலைப் புலிகள் தெரிவிப்பு
ஆனைவிழுந்தான் பகுதியில் கிளைமோர் தாக்குதல் பூநகரி ப.நோ.கூ.ச. பணியாளர் இருவர் காயம்
இராணுவத்திலிருந்து தப்பியோடியோருக்கு அரசாங்கம் மீண்டும் பொதுமன்னிப்பு
ஈரான் ஜனாதிபதியின் தெற்காசிய விஜயம் அமெரிக்கா முன்வைக்கும் `நிபந்தனைகள்'
நிதி உதவிக்காக ஈரான், சீனா பக்கம் கவனத்தை திருப்பியுள்ள இலங்கை
அரசின் மனித உரிமை மீறல்கள் உலகிற்கு தெரியவருவதை தடுக்கவே கருணாரட்ணம் அடிகள் கொல்லப்பட்டார்
முல்லைத்தீவில் விமானத் தாக்குதலில் இளைஞன் பலி; 2 சிறுமிகள் உட்பட 8 பேர் காயம்
மனைவியை பிரிந்து வாழும் மனநோயாளியை காணவில்லை ; சகோதரி பிரதியமைச்சரிடம் புகார்
வங்கி ஊழியர் சங்கம், வர்த்தக ஊழியர் சங்கத்துடன் இணைந்து ஐ.தொ. சம்மேளனத்தின் மே தின நிகழ்வுகள்
வர்த்தகர் வீட்டில் கைக்குண்டு மீட்பு
கருணாரட்ணம் அடிகளாரின் படுகொலைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனம்
தேயிலை கொழுந்துகளை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி மயங்கி விழுந்து மரணம்
கிழக்கில் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணி இன்று ஆரம்பம்
கடத்தப்பட்ட இருவர் குறித்து நடவடிக்கையெடுக்குமாறு உத்தரவு
இராணுவ வீரர் கத்திக் குத்துக்கு பலி
ஆயுதங்கள் சகிதம் ஐந்து கொள்ளையர் செட்டிகுளத்தில் பொலிஸாரால் கைது
பட்டவத்தை ஆட்டோ விபத்தில் ஒருவர் பலி, ஐவர் படுகாயம்
தமிழ் பேசும் சமூகத்தின் ஒற்றுமைக்காக அர்ப்பணித்திருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றியடைவது நிச்சயம்
தரமான தேயிலையை உற்பத்தி செய்யாத தொழிற்சாலைகளின் அனுமதி ரத்து செய்யப்படும்
பிரிட்டிஷ் பிரஜை கடலில் மூழ்கி மரணம்
"எமது சமூக அமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் மூத்தோர் பராமரிப்பு பாரிய சுமையாக மாறி வருகின்றது"
அரிசி விலைப் பட்டியல் காட்சிப்படுத்தப்படாமையினால் பாவனையாளர்களுக்கு பெரும் இடையூறு
நாடுபூராவும் ஜனநாயக சூழலை உருவாக்கும் நடவடிக்கையையே ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்
வழிகாட்டல் முறையாக முன்னெடுக்கப்படுமாயின் ஒவ்வொரு குடும்பமும் சமாதானத்தை அனுபவிக்க முடியும்
22 வருடங்கள் நரிகளாக இருப்பதை விட 2 ஆண்டுகள் சிங்கமாக இருக்க விரும்புகிறேன்
வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலமே முஸ்லிம் முதலமைச்சரை பெற்றுக் கொள்ள முடியும்
வங்குரோத்தான அரசியல் கட்சிகளை நம்பி ஏமாறாமல் ஐ.ம.சு. முன்னணியையே மக்கள் ஆதரிக்க வேண்டும்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எந்த இனம் வெற்றி பெற்றாலும் மற்ற இனத்தின் உதவியுடனேயே ஆட்சியமைக்க முடியும்
தமது மண்ணை பேரினவாதிகளின் கெடுபிடிகளிலிருந்து மீட்பதற்காக தமிழ் மக்களும் இம்முறை ஐ.தே.க.வுக்கே வாக்களிக்க முடிவு
சக இன மக்களின் நிலங்களை சுவீகரிப்பது கூட்டான ஆட்சிமுறைக்கு விரோதமானது
இம்முறை மேதின ஒன்றுகூடல்கள் எவையுமில்லை
கல்விமாணி கற்கைநெறி பரீட்சை நேர சூசியில் ஏற்பட்ட மாற்றத்தினால் மாணவர் பாதிப்பு
அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை உலகிற்கு வெளிப்படுத்தியவர் கருணாரட்ணம் அடிகள்
படுகொலை செய்யப்பட்டோரின் உடல்களை காகங்கள் குதறிய வண்ணம் இருந்ததை கண்டேன்
சாய்ந்தமருது நெடுஞ்சாலை புனரமைப்பு பணியை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com