Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 24, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
உரப்பசளைகளையும் கிருமிநாசினிகளையும் பயன்படுத்துவதால் மண்வளம் அழிவதாக கவலை
[24 - April - 2008] [Font Size - A - A - A]
*புவிதின ஆய்வில் தெரிவிப்பு

எமது பிரதேச விவசாயிகள் தேவைக்கு அதிகமான உரப்பசளைகளையும் கிருமிநாசினிகளையும் பயன்படுத்தி வருவதால் எமது மண்ணின் உயிர்ச்சத்தும் மண்வளமும் அழிந்து வருகின்றது.

இவ்வாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விவசாய பீட, விவசாய உயிரியல் பிரிவுத்தலைவர் கலாநிதி கே.முகுந்தன் தெரிவித்தார்.

நல்லூர் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த உலக புவிதினத்தையொட்டிய ஆய்வுப்பட்டறையில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நல்லூர் பிரதேச செயலாளர் எஸ்.செந்தில்நந்தன் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் கலாநிதி முகுந்தன் மேலும் கூறியதாவது;

உணவுப்பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக மிதமிஞ்சிய கிருமிநாசினிகளைப் பயன்படுத்துவதால் சூழல் மாசடைவதுடன், உணவுப் பொருட்களும் நச்சுத்தன்மையடைகின்றன.

மரவளம் அழிக்கப்பட்டுவருவதால் பூமி வெப்பமடைவதுடன், நன்னீர் வளமும் அழிந்து அதனால் நீர் நஞ்சடைந்து வருகிறது.

இதனால்தான் எமது சந்ததியை உணவுப் பஞ்சத்துக்கு ஆளாகாமலும் உயிராபத்துகளில் இருந்தும் நோய் நொடிகளில் இருந்தும் எம்மைப் பாதுகாக்க இயற்கையைப் பேணுவோம்.

இன்றைக்கு எமக்குத்தேவை தங்கமான பூமி அழியாதிருக்கப் போராடுவதுதான்.

இன்றைக்கு யாழ்ப்பாணத்தில் மண்வளம் அழிந்துவருவதை மக்கள் உணர்ந்து வருகின்றனர். பலர் சேதனப் பசளையின் பயன்பாட்டை உணர்ந்து, அதனைப் பயன்படுத்தி மண்வளத்தை போஷாக்குள்ளதாக மாற்றிவருகின்றனர். தலைமுறை தலைமுறையாக தம்வாழ்வுக்கு உரமூட்டிய தாங்கள் நிலம் பாதுகாக்கப் படவேண்டுமென்பதில் உறுதியாகவுள்ளனர்.

அண்மையில் சுன்னாகத்தில் கத்தரிக்கன்றுகள் அனைத்தும் அழிந்தன மழை வெள்ளம் தோட்டங்களில் தேங்கி நின்றதால், மண்ணின் மூலகங்கள் அழிந்ததால் அதைத்தடுக்கமுடியாமல் வேரில் பூஞ்சணம் நோய் ஏற்பட்டதனால் முழுகத்தரிக்கன்றுகளும் அழிந்ததால் கத்தரிக்காய் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்தது.

மண்ணில் நோய் தாக்கம் ஏற்படுவதற்கு காரணம், அங்கீகாரம் இல்லாத விதைகளைப் பயன்படுத்துவதாகும். முதலில் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்ட விதை உருளைக்கிழங்குடன் அழுகல் நோயின் தன்மையைத் தரக்கூடிய கிருமிகளும் இந்த மண்ணுக்குள் ஊட்டப்பட்டதன் விளைவாக, கால்நூற்றாண்டுகளாய் எமது மண்ணில் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாதிருக்கிறது.

வலிகாமம் தென்மேற்கில் ஒருவர் ஈரானில் இருந்து பத்துக்கிலோ கோதுமை விதையை எடுத்துவந்து இப்பிரதேசத்தில் விதைத்துள்ளார். ஒரு நாட்டுக்குள் விதைகளை எடுத்துவருவற்கு நாட்டின் எவருக்கும் அரசு அதிகாரம் வழங்கவில்லை. அப்படியிருக்க சம்பந்தப்பட்டவர் எடுத்துவந்த கோதுமை விதை முளைத்து நல்லபயிராக வளர்ந்திருப்பதாகவும், அவற்றில் இருந்து விதைமணிகள் வரவில்லை என ஆதங்கப்படுவதையும் காண்கின்றோம்.

கோதுமைப்பயிர் வளர்வதற்கான சுவாத்தியநிலை, மண்வளம், எல்லாப் பகுதியிலும் இருக்குமாயின் எல்லோரும் கோதுமை விளைச்சலில் ஈடுபட்டு விடுவார்கள். கோதுமைப்பயிர் குடும்பத்தைச் சேர்ந்தது நெல்வர்க்கம். இவர்கள் எடுத்துவந்த கோதுமை விதையோடு நெல்வர்க்கத்தை பாதிக்கும் கிருமியும் எமதுவளமான பிரதேசத்தில் ஊடுருவினால் எம்வேளாண்மையும் அழியுமென்பதை மறந்து விடக்கூடாது.

இன்றைக்கு பூலோகம் வெப்பமடைந்துவருகின்றது. இதைத்தடுக்கவேண்டுமானால், மரங்களை அதிகமாக நாட்டுவோம். மரமழிவதை இயன்றளவு தடுப்போம் அரிதான மரங்களை எம் சொத்தாக மதிப்போம். சுற்றாடலுக்குத் தீங்கு ஏற்படாதவாறு அபிவிருத்திகள் திட்டமிடப்படவேண்டும். இன்றைக்கு எமக்குத் தேவை மனிதம். எதிர்காலத்துக்கே நாம் மனிதத்தை எப்படிப் பயன்படுத்தப்போகிறோம் என்பதாகும் என்றார்.

நிகழ்வில் 300 பயனாளிகளுக்கு பயன்தரும் பழமரக்கன்றுகளான மாமரம், தோடை, எலுமிச்சை, ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கான அனுசரணையை அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் வழங்கியிருந்தது.

Email this page Your Opinion Print this page
இலங்கை மோதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தியாவின் தலையீட்டை வலியுறுத்தி தமிழக சட்ட சபையில் தீர்மானம்
ஐ.நா.செயலாளர் நாயகத்தை வைகோ சந்திப்பது இலங்கைக்கு முக்கியம் அல்ல
மனித உரிமைகள் விவகாரத்தில் முன்னேற்றத்தை வெளிப்படுத்துமாறு அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்
மு.கா.தலைமையகத்திற்குள் பொலிஸார் திடீரென பிரவேசித்து தீவிர தேடுதல்
பட்டினி சுனாமி உலகை காவு கொள்ளும் பேராபத்து
ஜானக பெரேரா உட்பட இரு முன்னாள் இராணுவ அதிகாரிகள் படைமுகாம்களுக்கு செல்லத் தடை
தேர்தலுக்கு முன் த.ம.வி.பு.வை நிராயுதபாணிகளாக்க வலியுறுத்தி தீர்மானம்
உத்தரவாத விலையை மீறி அரிசி விற்ற 60 வர்த்தகர்கள் கைது
நானாட்டான் அச்சம்குளம் பகுதியில் 2 கடற்றொழிலாளர் சுட்டுக்கொலை
கலவானவில் பெரும்பான்மையினக் கோஷ்டி தாக்குதல் 15 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் வெளியேற்றம்
இராணுவ வீரரின் வீட்டில் வெடி பொருட்கள், ஆயுதங்கள் மீட்பு
கிண்ணியாவில் ஆயுதங்கள் மீட்பு
கடத்தப்பட்ட குடும்பப் பெண் விடுவிக்கப்படவில்லை
கம்பஹாவில் தேடுதல் 38 பேர் கைது
இரத்தினபுரியில் மீண்டும் சிக்குன்குனியா விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள்
கெக்கிராவ வைத்தியசாலை வைத்தியர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு
பிரிட்டிஷ் தமிழ்மன்றம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் லண்டன் மேயர் கலந்துகொண்டதால் சர்ச்சை
கிழக்கில் இதுவரை 19 தேர்தல் வன்முறைகள் அரச வளங்கள் ஆளுந்தரப்பால் துஷ்பிரயோகம்
சர்வதேச நிபுணர் குழுவின் செயற்பாட்டில் சந்தேகம் எழுப்புகிறார் அமைச்சர் சமரசிங்க
பரீட்சை மீள் திருத்த முடிவு அறிவிக்கப்படாததால் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம்
முச்சக்கரவண்டி - டிப்பர் வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயம்
மாத்தளை மாவட்டத்தில் எலிக்காய்ச்சலால் 180 பேர் பாதிப்பு; நான்கு பேர் உயிரிழப்பு
வீட்டுக் கூரையை பிரித்து நகைகள் கொள்ளை
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டபோதும் சில்லறை கடைகளில் அதிக விலைக்கே விற்பனை
மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 15 குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு
ஒருவருக்கு வழங்க வேண்டிய ஊ.சே.நிதியை மற்றொருவருக்கு வழங்கியது தொடர்பாக முறைப்பாடு
வவுனியா அரச வைத்தியசாலை தாதிமார் இன்று இருமணி நேர வேலைநிறுத்தம்
317.2 மில்லியன் டொலராக வர்த்தக நிலுவை அதிகரிப்பு
வாக்காளர்கள் அட்டைகள் விநியோகம் ஆரம்பம்
பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் இருந்தால் கல்வித்துறை சீரழிவதுடன் பிரச்சினைகளும் ஏற்படும்
வடமேல் மாகாணத்தில் பஸ் வண்டிகளுக்கான வீதி அனுமதிப்பத்திரம் வழங்குதல் இடைநிறுத்தம்
ஜனவரி - ஏப்ரல் வரை எலிக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு தம்புள்ளையில் அனுமதிக்கப்பட்ட 91 பேரில் நால்வர் மரணம்
ருவன்வெல்லவில் போலியான மதுபான நிலையம் கண்டுபிடிப்பு
கைவிடப்பட்ட வீட்டிலிருந்து வெடி பொருட்கள் மீட்பு
இடைவிலகிய மாணவர்களை மீண்டும் இணைக்க நடவடிக்கை
தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது
வீரத்தளபதியாக சர்வதேசமே போற்றும் ஜனாதிபதிக்கு நன்றியுடையோராக இருப்போம்
சமூகத்தின் நலன்காக்க உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கட்சிக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டுள்ளது
முஸ்லிம்களுக்கு விமோசனமளித்தது எமது அரசே மாகாண சபைத்தேர்தலில் நாம் வெற்றி பெறுவது உறுதி
ஜே.வி.பி.எம்.பி பிணையில் செல்ல அனுமதி
`திருமணமாகாமை பற்றிய சான்றிதழ் இனிமேல் வழங்கப்படமாட்டாது'
டாக்டர் விக்கிரமசிங்கவின் ஆலோசனைகளை செயற்படுத்தியிருந்தால் யுத்தம் ஏற்பட்டிருக்காது
`ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தில் இணைவதனால் இளைப்பாறியோர் நன்மைகளை பெறமுடியும்'
உரப்பசளைகளையும் கிருமிநாசினிகளையும் பயன்படுத்துவதால் மண்வளம் அழிவதாக கவலை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com