Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 24, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
`ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தில் இணைவதனால் இளைப்பாறியோர் நன்மைகளை பெறமுடியும்'
[24 - April - 2008] [Font Size - A - A - A]
`அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தில் அரச சேவை ஓய்வூதியர்கள் அங்கத்துவம் பெறுவதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.'

இவ்வாறு யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் மரியதாசன் ஜெகூ இந்த நிதியத்தின் யாழ்ப்பாண பிரதேச சங்கத்தின் வருடாந்த கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போது கூறினார்.

இந்த நிதியத்தின் தலைவர் வி.சக்திவேல் தலைமையில் யாழ்.புனிதர் சாள்ஸ் மகா வித்தியாலய மண்டபத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் தமது உரையில் மேலும் கூறியதாவது;

அங்கத்தவர்களின் மரணக் கொடையாக அவர் செலுத்திவந்த சந்தாப் பணத்தின் பத்துமடங்கு அவருடைய பின் உரித்தாளருக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதனைவிட உயர்கல்வி பயில்கின்ற ஒரு பிள்ளைக்கு மாத்திரம் வருடாந்தம் 3,000 ரூபா வீதம் புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றது.

ஆகக்கூடிய கடன் தொகையாக 10,000 ரூபா வழங்கி வருகின்றனர். வைத்தியசாலையில் இருக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் நாளொன்றுக்கு 150 ரூபா வீதம் ஆகக்கூடிய தொகை 1,500 ரூபா கொடுப்பனவைப் பெறமுடியும்.

மூளை, இருதயம், சிறுநீரகம், புற்றுநோய் சத்திரசிகிச்சைக்கு 5,000 ரூபா கிடைக்கும். கண் சிகிச்சைக்கும் நிதி வழங்குகின்றார்கள். இத்தனை வசதிகளையும் ஒட்டுமொத்தமாகப் பெறுவதற்கு சங்கத்தில் ஓய்வூதியர்கள் அங்கத்துவம் பெறவேண்டும்.

ஒவ்வொரு அமைப்பும் சிறப்பாக செயல்படுவதற்கு முக்கிய காரணகர்த்தாவாக விளங்குபவர்கள், அதன் நிர்வாகிகள் தான். இவ்வமைப்பில் இதுவரை 275 உறுப்பினர்கள் இணைந்து நன்மைகளைப் பெற்றுவருவது நிர்வாகிகளின் தன்னலமற்ற சேவையைக் காட்டுகின்றது.

இன்றைய வருடாந்த கூட்டத்திலும் ஆற்றலும் ஆளுமையுமுள்ள நிர்வாக சபையை தெரிவுசெய்து சங்கத்துக்கு வலுவான கட்டமைப்பை ஏற்படுத்துமாறு வேண்டுகிறேன் என்றார்.

நிகழ்வுக்கு தலைமை தாங்கிய சங்கத்தின் தலைவர் வி.சக்திவேல் தமது தலைமையுரையில் தெரிவித்ததாவது; சங்கத்தில் அங்கத்துவம் பெற்றோருக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். யாழ்ப்பாணப் பிரதேசத்தில் எமது சங்கத்தில் பலர் இணைந்து நன்மைகளைப் பெறாதிருப்பது வேதனை தரும் விடயமாகும். எல்லோரும் இணைந்து எமது சங்கத்தை பலம்பொருந்திய அமைப்பாக மாற்றுவதன் மூலம் தாய்ச் சங்கத்தில் எமது கிளை வலுவுள்ள குரல் கொடுக்கும் அமைப்பாக விளங்கவேண்டுமெனவும் வேண்டினார்.

வருடாந்த பொதுக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக பின்வருவோர் தெரிவாகினர். தலைவர் வி.சக்திவேல், செயலாளர் இ.தவராசா, உபசெயலாளர் க.கணேசலிங்கம், பொருளாளர் எஸ்.ஆர்.யோகநாதன், நிர்வாக சபை உறுப்பினர்களாக இ.செல்வரத்தினம், ஏ.ஆனந்தராஜா, எம்.பஞ்சலிங்கம் ஆகியோரும் தெரிவாகினர்.

Email this page Your Opinion Print this page
இலங்கை மோதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தியாவின் தலையீட்டை வலியுறுத்தி தமிழக சட்ட சபையில் தீர்மானம்
ஐ.நா.செயலாளர் நாயகத்தை வைகோ சந்திப்பது இலங்கைக்கு முக்கியம் அல்ல
மனித உரிமைகள் விவகாரத்தில் முன்னேற்றத்தை வெளிப்படுத்துமாறு அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்
மு.கா.தலைமையகத்திற்குள் பொலிஸார் திடீரென பிரவேசித்து தீவிர தேடுதல்
பட்டினி சுனாமி உலகை காவு கொள்ளும் பேராபத்து
ஜானக பெரேரா உட்பட இரு முன்னாள் இராணுவ அதிகாரிகள் படைமுகாம்களுக்கு செல்லத் தடை
தேர்தலுக்கு முன் த.ம.வி.பு.வை நிராயுதபாணிகளாக்க வலியுறுத்தி தீர்மானம்
உத்தரவாத விலையை மீறி அரிசி விற்ற 60 வர்த்தகர்கள் கைது
நானாட்டான் அச்சம்குளம் பகுதியில் 2 கடற்றொழிலாளர் சுட்டுக்கொலை
கலவானவில் பெரும்பான்மையினக் கோஷ்டி தாக்குதல் 15 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் வெளியேற்றம்
இராணுவ வீரரின் வீட்டில் வெடி பொருட்கள், ஆயுதங்கள் மீட்பு
கிண்ணியாவில் ஆயுதங்கள் மீட்பு
கடத்தப்பட்ட குடும்பப் பெண் விடுவிக்கப்படவில்லை
கம்பஹாவில் தேடுதல் 38 பேர் கைது
இரத்தினபுரியில் மீண்டும் சிக்குன்குனியா விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள்
கெக்கிராவ வைத்தியசாலை வைத்தியர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு
பிரிட்டிஷ் தமிழ்மன்றம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் லண்டன் மேயர் கலந்துகொண்டதால் சர்ச்சை
கிழக்கில் இதுவரை 19 தேர்தல் வன்முறைகள் அரச வளங்கள் ஆளுந்தரப்பால் துஷ்பிரயோகம்
சர்வதேச நிபுணர் குழுவின் செயற்பாட்டில் சந்தேகம் எழுப்புகிறார் அமைச்சர் சமரசிங்க
பரீட்சை மீள் திருத்த முடிவு அறிவிக்கப்படாததால் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம்
முச்சக்கரவண்டி - டிப்பர் வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயம்
மாத்தளை மாவட்டத்தில் எலிக்காய்ச்சலால் 180 பேர் பாதிப்பு; நான்கு பேர் உயிரிழப்பு
வீட்டுக் கூரையை பிரித்து நகைகள் கொள்ளை
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டபோதும் சில்லறை கடைகளில் அதிக விலைக்கே விற்பனை
மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 15 குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு
ஒருவருக்கு வழங்க வேண்டிய ஊ.சே.நிதியை மற்றொருவருக்கு வழங்கியது தொடர்பாக முறைப்பாடு
வவுனியா அரச வைத்தியசாலை தாதிமார் இன்று இருமணி நேர வேலைநிறுத்தம்
317.2 மில்லியன் டொலராக வர்த்தக நிலுவை அதிகரிப்பு
வாக்காளர்கள் அட்டைகள் விநியோகம் ஆரம்பம்
பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் இருந்தால் கல்வித்துறை சீரழிவதுடன் பிரச்சினைகளும் ஏற்படும்
வடமேல் மாகாணத்தில் பஸ் வண்டிகளுக்கான வீதி அனுமதிப்பத்திரம் வழங்குதல் இடைநிறுத்தம்
ஜனவரி - ஏப்ரல் வரை எலிக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு தம்புள்ளையில் அனுமதிக்கப்பட்ட 91 பேரில் நால்வர் மரணம்
ருவன்வெல்லவில் போலியான மதுபான நிலையம் கண்டுபிடிப்பு
கைவிடப்பட்ட வீட்டிலிருந்து வெடி பொருட்கள் மீட்பு
இடைவிலகிய மாணவர்களை மீண்டும் இணைக்க நடவடிக்கை
தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது
வீரத்தளபதியாக சர்வதேசமே போற்றும் ஜனாதிபதிக்கு நன்றியுடையோராக இருப்போம்
சமூகத்தின் நலன்காக்க உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கட்சிக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டுள்ளது
முஸ்லிம்களுக்கு விமோசனமளித்தது எமது அரசே மாகாண சபைத்தேர்தலில் நாம் வெற்றி பெறுவது உறுதி
ஜே.வி.பி.எம்.பி பிணையில் செல்ல அனுமதி
`திருமணமாகாமை பற்றிய சான்றிதழ் இனிமேல் வழங்கப்படமாட்டாது'
டாக்டர் விக்கிரமசிங்கவின் ஆலோசனைகளை செயற்படுத்தியிருந்தால் யுத்தம் ஏற்பட்டிருக்காது
`ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தில் இணைவதனால் இளைப்பாறியோர் நன்மைகளை பெறமுடியும்'
உரப்பசளைகளையும் கிருமிநாசினிகளையும் பயன்படுத்துவதால் மண்வளம் அழிவதாக கவலை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com