Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 24, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
டாக்டர் விக்கிரமசிங்கவின் ஆலோசனைகளை செயற்படுத்தியிருந்தால் யுத்தம் ஏற்பட்டிருக்காது
[24 - April - 2008] [Font Size - A - A - A]
*107 ஆவது ஜனன தின வைபவத்தில் தேரர்

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான அமரர் டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்துக்களையும் பிரேரணைகளையும் அன்று செயற்படுத்தியிருந்தால் இன்று நாட்டில் இனப்பிரச்சினையோ, யுத்தமோ ஏற்பட்டிருக்காது என மாத்தறை பொல்ஹேன பழைய விகாராதிபதியான சங். பண்டிதர் அஹலப்பே யத்திரதீன தேரர் கூறினார்.

டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்கவின் 107 ஆவது ஜனன தின வைபவத்தில் உரையாற்றும்போதே தேரர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்;

"டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க சட்ட நிரூபண சபையிலும் பாராளுமன்றத்திலும் பல கருத்துக்களையும் பிரேரணைகளையும் முன்வைத்தார். சில யோசனைகளையும் கூறினார். ஆனால், அன்றைய ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் அவற்றைக் கேட்கவில்லை.

இந்த அரசியல்வாதிகளால் முன்னெடுத்துச் செல்லப்படும் செயற்திட்டங்களால் நாட்டில் எதிர்காலத்தில் இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்று தீர்க்கதரிசனமாகக் கூறியதுடன் இவ்வாறான செயற்பாடுகளை கைவிடுங்கள் எனவும் ஆணித்தரமாக துணிச்சலுடன் எடுத்துக் கூறிய ஒரு நேர்மையான அரசியல்வாதியே டாக்டர் விக்கிரமசிங்க.

நாட்டில் இன்று என்ன நடைபெறுகிறது என்பதை சகலரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். டாக்டர் விக்கிரமசிங்கவின் ஆலோசனைகளின்படி செயற்பட்டிருந்தால் இன்று இலங்கை எதுவித பிரச்சினைகளுமற்ற உலகிலேயே ஒரு சிறந்த நாடாக மிளர்ந்திருக்கும்" என்றார்.

அமைச்சர் கஜதீர

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தமது உரையில்; "டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க ஒரு நேர்மையான சிறந்த அரசியல்வாதி. சகல இன மக்களாலும் நேசிக்கபப்ட்டவர்.

அவரது பாசறையில் பயிற்சி பெற்றவர்கள்தான் டீ.வை.துடாவை, டியூ.குணசேகர, கந்தசாமி போன்ற போராளிகள்.

டாக்டர் விக்கிரமசிங்க தனக்காக வாழாமல் தன் வாழ்நாள் முழுவதையும் ஏழை மக்களுக்காகவே செலவிட்டார். ஏழை மக்களின் விமோசனத்துக்காக தன்னை அர்ப்பணித்தார்.சகல இன மக்களாலும் சகோதரா என்றே அழைக்கப்பட்டார்.

தன்னிடமுள்ள சொத்துக்களை மக்களுக்காகவே செலவிட்டார். ஏனைய அரசியல்வாதிகளைப் போல சொத்துச் சேர்க்கவில்லை. இவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள இந்த நாட்டிலிருந்து மட்டுமல்ல உலக நாடுகளிலிலுமிருந்தும் பல தலைவர்கள் வந்திருந்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அ.அமிர்தலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தர் கல்யாண சுந்தரம் போன்றவர்களின் இரங்கலுரைகளில் இருந்து டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க ஒரு இனவாதியல்ல எனவும் முழு உலகமும் மதிக்கும் சிறந்த அரசியல்வாதி எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது" என்றார். கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் மாத்தறை ஹக்மனை சந்தியிலுள்ள மறைந்த தலைவரின் உருவச் சிலைக்கு மலர் வளையங்களை வைத்து மரியாதை செலுத்தினர்.

Email this page Your Opinion Print this page
இலங்கை மோதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தியாவின் தலையீட்டை வலியுறுத்தி தமிழக சட்ட சபையில் தீர்மானம்
ஐ.நா.செயலாளர் நாயகத்தை வைகோ சந்திப்பது இலங்கைக்கு முக்கியம் அல்ல
மனித உரிமைகள் விவகாரத்தில் முன்னேற்றத்தை வெளிப்படுத்துமாறு அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்
மு.கா.தலைமையகத்திற்குள் பொலிஸார் திடீரென பிரவேசித்து தீவிர தேடுதல்
பட்டினி சுனாமி உலகை காவு கொள்ளும் பேராபத்து
ஜானக பெரேரா உட்பட இரு முன்னாள் இராணுவ அதிகாரிகள் படைமுகாம்களுக்கு செல்லத் தடை
தேர்தலுக்கு முன் த.ம.வி.பு.வை நிராயுதபாணிகளாக்க வலியுறுத்தி தீர்மானம்
உத்தரவாத விலையை மீறி அரிசி விற்ற 60 வர்த்தகர்கள் கைது
நானாட்டான் அச்சம்குளம் பகுதியில் 2 கடற்றொழிலாளர் சுட்டுக்கொலை
கலவானவில் பெரும்பான்மையினக் கோஷ்டி தாக்குதல் 15 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் வெளியேற்றம்
இராணுவ வீரரின் வீட்டில் வெடி பொருட்கள், ஆயுதங்கள் மீட்பு
கிண்ணியாவில் ஆயுதங்கள் மீட்பு
கடத்தப்பட்ட குடும்பப் பெண் விடுவிக்கப்படவில்லை
கம்பஹாவில் தேடுதல் 38 பேர் கைது
இரத்தினபுரியில் மீண்டும் சிக்குன்குனியா விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள்
கெக்கிராவ வைத்தியசாலை வைத்தியர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு
பிரிட்டிஷ் தமிழ்மன்றம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் லண்டன் மேயர் கலந்துகொண்டதால் சர்ச்சை
கிழக்கில் இதுவரை 19 தேர்தல் வன்முறைகள் அரச வளங்கள் ஆளுந்தரப்பால் துஷ்பிரயோகம்
சர்வதேச நிபுணர் குழுவின் செயற்பாட்டில் சந்தேகம் எழுப்புகிறார் அமைச்சர் சமரசிங்க
பரீட்சை மீள் திருத்த முடிவு அறிவிக்கப்படாததால் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம்
முச்சக்கரவண்டி - டிப்பர் வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயம்
மாத்தளை மாவட்டத்தில் எலிக்காய்ச்சலால் 180 பேர் பாதிப்பு; நான்கு பேர் உயிரிழப்பு
வீட்டுக் கூரையை பிரித்து நகைகள் கொள்ளை
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டபோதும் சில்லறை கடைகளில் அதிக விலைக்கே விற்பனை
மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 15 குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு
ஒருவருக்கு வழங்க வேண்டிய ஊ.சே.நிதியை மற்றொருவருக்கு வழங்கியது தொடர்பாக முறைப்பாடு
வவுனியா அரச வைத்தியசாலை தாதிமார் இன்று இருமணி நேர வேலைநிறுத்தம்
317.2 மில்லியன் டொலராக வர்த்தக நிலுவை அதிகரிப்பு
வாக்காளர்கள் அட்டைகள் விநியோகம் ஆரம்பம்
பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் இருந்தால் கல்வித்துறை சீரழிவதுடன் பிரச்சினைகளும் ஏற்படும்
வடமேல் மாகாணத்தில் பஸ் வண்டிகளுக்கான வீதி அனுமதிப்பத்திரம் வழங்குதல் இடைநிறுத்தம்
ஜனவரி - ஏப்ரல் வரை எலிக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு தம்புள்ளையில் அனுமதிக்கப்பட்ட 91 பேரில் நால்வர் மரணம்
ருவன்வெல்லவில் போலியான மதுபான நிலையம் கண்டுபிடிப்பு
கைவிடப்பட்ட வீட்டிலிருந்து வெடி பொருட்கள் மீட்பு
இடைவிலகிய மாணவர்களை மீண்டும் இணைக்க நடவடிக்கை
தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது
வீரத்தளபதியாக சர்வதேசமே போற்றும் ஜனாதிபதிக்கு நன்றியுடையோராக இருப்போம்
சமூகத்தின் நலன்காக்க உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கட்சிக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டுள்ளது
முஸ்லிம்களுக்கு விமோசனமளித்தது எமது அரசே மாகாண சபைத்தேர்தலில் நாம் வெற்றி பெறுவது உறுதி
ஜே.வி.பி.எம்.பி பிணையில் செல்ல அனுமதி
`திருமணமாகாமை பற்றிய சான்றிதழ் இனிமேல் வழங்கப்படமாட்டாது'
டாக்டர் விக்கிரமசிங்கவின் ஆலோசனைகளை செயற்படுத்தியிருந்தால் யுத்தம் ஏற்பட்டிருக்காது
`ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தில் இணைவதனால் இளைப்பாறியோர் நன்மைகளை பெறமுடியும்'
உரப்பசளைகளையும் கிருமிநாசினிகளையும் பயன்படுத்துவதால் மண்வளம் அழிவதாக கவலை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com