Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 24, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சமூகத்தின் நலன்காக்க உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கட்சிக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டுள்ளது
[24 - April - 2008] [Font Size - A - A - A]
*ஜனாதிபதியின் ஆலோசகர் அஸ்வர்

"ஐ.தே.க. என்ற வாகனத்திற்கு ரணில் என்ற சாரதி இருக்கும் வரை முஸ்லிம் காங்கிரஸ் அந்த வாகனத்தில் ஏறாது" என்று சூளுரைத்தவர் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவருடைய பாசறையிலேயே வளர்ந்ததாகக் கூறிக்கொள்ளும் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அந்த ஐ.தே.க. என்ற வாகனத்திலேயே சவாரி செய்துகொண்டிருக்கின்றார். இது அவரது மறைந்த தலைவருக்குச் செய்யும் செஞ்சோற்றுக் கடனா? எனக் கேள்வி எழுப்பினார் ஜனாதிபதியின் ஆலோசகரும், ஊடக ஆலாட்சி அதிகாரியுமான ஏ.எச்.எம். அஸ்வர்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கிண்ணியாப் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். அங்கு அஸ்வர் மேலும் உரையாற்றுகையில்;

மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் முஸ்லிம் சமூகத்தின் உரிமை காத்து, சமூகத்தின் நலன்காக்க உருவாக்கிய கட்சியின் தனித்துவச் சின்னமான மரத்தை அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் ஐ.தே.க.வுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டார்.

சர்வதேச வல்லரசுகள் விரித்துள்ள சதிவலையில் முஸ்லிம்களையும் சிக்கவைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் துணைபோயிருக்கின்றார். ஐ.தே.க.வுடன் அவர் கூட்டுச் சேர்ந்ததன் உண்மையான நோக்கமும் இதுவே. இந்த சதிவலைக்குள் முஸ்லிம்கள் குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் அகப்பட்டுவிடக்கூடாது என்பதுதான் எனது வேண்டுகோள்.

உமா ஓயா, ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றுக்கு வழங்கும் நன்கொடைகளுக்குப் புறம்பாக, மேலும் 2000 மில்லியன் டொலர்களை வீடமைப்புக்காக தருவதாக ஈரான் உறுதியளித்துள்ளது. இதனை கிழக்கு மாகாண வீடமைப்புக்கே செலவிடப்போவதாக ஜனாதிபதி தெரிவித்திருப்பது எம்மைப் பூரிப்படையச் செய்கிறது. இது சர்வதேச இஸ்லாமிய உலகம் எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நல்லாட்சிக்கு வழங்கியுள்ள அங்கீகாரத்தையே குறிக்கிறது.

இதேபோன்று சவுதி அரசின் உதவியோடு கிண்ணியா மக்களின் மிக நீண்டகால அவலம் நீக்கப்படவுள்ளது. கிண்ணியாப் பாலம் கட்டி முடிக்கப்பட்டதும் மக்கள் குளு குளு பஸ்வண்டிகளில் நேராகவே கிண்ணியாவுக்கும் ஏனைய பிரதேசங்களுக்கும் செல்வதற்கு வசதியாக இருக்கும். இதனை உங்களின் பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான என்.ஏ. அப்துல் மஜீத் மேற்பார்வை செய்துவருகின்றார்.

அத்துடன், இறக்கக்கண்டி, புல்மோட்டை, புடவைக்கட்டு, குச்சவெளி போன்ற இடங்களிலும் பாலங்கள் கட்டும் பணிகள் மிகத் துரிதமாக இடம்பெற்றுவருகின்றன என்றும் அஸ்வர் மேலும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீன், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் நஜீப் ஏ. மஜீத், வேட்பாளர்களான மௌலவி எஸ்.எல்.எம். ஹஸன் (அல் - அஸ்ஹரி). ஆரியவதி கலப்பதி, டாக்டர் திடீர் தௌபீக், டாக்டர் ஏ.எம். லாபீர், கே.எம். முஜீப், இலங்கை கனிப்பொருள் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாபிர் நஸார், மாப்பிள்ளை ஆப்தீன் உட்பட பலரும் உரை நிகழ்த்தினர்.

Email this page Your Opinion Print this page
இலங்கை மோதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தியாவின் தலையீட்டை வலியுறுத்தி தமிழக சட்ட சபையில் தீர்மானம்
ஐ.நா.செயலாளர் நாயகத்தை வைகோ சந்திப்பது இலங்கைக்கு முக்கியம் அல்ல
மனித உரிமைகள் விவகாரத்தில் முன்னேற்றத்தை வெளிப்படுத்துமாறு அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்
மு.கா.தலைமையகத்திற்குள் பொலிஸார் திடீரென பிரவேசித்து தீவிர தேடுதல்
பட்டினி சுனாமி உலகை காவு கொள்ளும் பேராபத்து
ஜானக பெரேரா உட்பட இரு முன்னாள் இராணுவ அதிகாரிகள் படைமுகாம்களுக்கு செல்லத் தடை
தேர்தலுக்கு முன் த.ம.வி.பு.வை நிராயுதபாணிகளாக்க வலியுறுத்தி தீர்மானம்
உத்தரவாத விலையை மீறி அரிசி விற்ற 60 வர்த்தகர்கள் கைது
நானாட்டான் அச்சம்குளம் பகுதியில் 2 கடற்றொழிலாளர் சுட்டுக்கொலை
கலவானவில் பெரும்பான்மையினக் கோஷ்டி தாக்குதல் 15 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் வெளியேற்றம்
இராணுவ வீரரின் வீட்டில் வெடி பொருட்கள், ஆயுதங்கள் மீட்பு
கிண்ணியாவில் ஆயுதங்கள் மீட்பு
கடத்தப்பட்ட குடும்பப் பெண் விடுவிக்கப்படவில்லை
கம்பஹாவில் தேடுதல் 38 பேர் கைது
இரத்தினபுரியில் மீண்டும் சிக்குன்குனியா விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள்
கெக்கிராவ வைத்தியசாலை வைத்தியர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு
பிரிட்டிஷ் தமிழ்மன்றம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் லண்டன் மேயர் கலந்துகொண்டதால் சர்ச்சை
கிழக்கில் இதுவரை 19 தேர்தல் வன்முறைகள் அரச வளங்கள் ஆளுந்தரப்பால் துஷ்பிரயோகம்
சர்வதேச நிபுணர் குழுவின் செயற்பாட்டில் சந்தேகம் எழுப்புகிறார் அமைச்சர் சமரசிங்க
பரீட்சை மீள் திருத்த முடிவு அறிவிக்கப்படாததால் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம்
முச்சக்கரவண்டி - டிப்பர் வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயம்
மாத்தளை மாவட்டத்தில் எலிக்காய்ச்சலால் 180 பேர் பாதிப்பு; நான்கு பேர் உயிரிழப்பு
வீட்டுக் கூரையை பிரித்து நகைகள் கொள்ளை
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டபோதும் சில்லறை கடைகளில் அதிக விலைக்கே விற்பனை
மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 15 குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு
ஒருவருக்கு வழங்க வேண்டிய ஊ.சே.நிதியை மற்றொருவருக்கு வழங்கியது தொடர்பாக முறைப்பாடு
வவுனியா அரச வைத்தியசாலை தாதிமார் இன்று இருமணி நேர வேலைநிறுத்தம்
317.2 மில்லியன் டொலராக வர்த்தக நிலுவை அதிகரிப்பு
வாக்காளர்கள் அட்டைகள் விநியோகம் ஆரம்பம்
பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் இருந்தால் கல்வித்துறை சீரழிவதுடன் பிரச்சினைகளும் ஏற்படும்
வடமேல் மாகாணத்தில் பஸ் வண்டிகளுக்கான வீதி அனுமதிப்பத்திரம் வழங்குதல் இடைநிறுத்தம்
ஜனவரி - ஏப்ரல் வரை எலிக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு தம்புள்ளையில் அனுமதிக்கப்பட்ட 91 பேரில் நால்வர் மரணம்
ருவன்வெல்லவில் போலியான மதுபான நிலையம் கண்டுபிடிப்பு
கைவிடப்பட்ட வீட்டிலிருந்து வெடி பொருட்கள் மீட்பு
இடைவிலகிய மாணவர்களை மீண்டும் இணைக்க நடவடிக்கை
தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது
வீரத்தளபதியாக சர்வதேசமே போற்றும் ஜனாதிபதிக்கு நன்றியுடையோராக இருப்போம்
சமூகத்தின் நலன்காக்க உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கட்சிக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டுள்ளது
முஸ்லிம்களுக்கு விமோசனமளித்தது எமது அரசே மாகாண சபைத்தேர்தலில் நாம் வெற்றி பெறுவது உறுதி
ஜே.வி.பி.எம்.பி பிணையில் செல்ல அனுமதி
`திருமணமாகாமை பற்றிய சான்றிதழ் இனிமேல் வழங்கப்படமாட்டாது'
டாக்டர் விக்கிரமசிங்கவின் ஆலோசனைகளை செயற்படுத்தியிருந்தால் யுத்தம் ஏற்பட்டிருக்காது
`ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தில் இணைவதனால் இளைப்பாறியோர் நன்மைகளை பெறமுடியும்'
உரப்பசளைகளையும் கிருமிநாசினிகளையும் பயன்படுத்துவதால் மண்வளம் அழிவதாக கவலை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com