Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 24, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வீரத்தளபதியாக சர்வதேசமே போற்றும் ஜனாதிபதிக்கு நன்றியுடையோராக இருப்போம்
[24 - April - 2008] [Font Size - A - A - A]
*கிழக்கு முஸ்லிம்களுக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் அறிவுரை

சர்வதேச நாடுகளே வீரத்தளபதியாகப் போற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு முஸ்லிம்கள் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீன், கிழக்கு மாகாண சபை தேர்தலில் நாம் தோல்வியடைந்தால் கூட ஜனாதிபதியை அல்லது அரசாங்கத்தையோ எதுவும் செய்து விடமுடியாதென்றும் கூறினார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் என்பது இந்தப் பிரதேசத்திலே வாழுகின்ற முஸ்லிம்களுக்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும். இந்த தேர்தலை ஏனைய தேர்தல்களைப் போன்று முஸ்லிம்கள் ஏனோதானோ என்று அலட்சியம் செய்து விடக்கூடாது. இப்பிரதேசத்திலே வாழுகின்ற முஸ்லிம்களின் எதிர்காலம், பாதுகாப்பு, அபிவிருத்தி என்பன இந்தத் தேர்தலிலே தங்கியுள்ளது என்பதால் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னமான வெற்றிலைச் சின்னத்திற்கு தமது வாக்குகளை அளிக்க வேண்டும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா ஹஸனாத் மகளிர் பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, பந்துல குணவர்தன, நஜீத் ஏ மஜீத், சுசந்த புஞ்சிநிலமே, பிரதியமைச்சர்களான ஹுசைன் ஏ பைலா, கே.ஏ.பாயிஸ், நிஹ்மல் பெரேரா மற்றும் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா., ஊடக ஆலாட்சி அதிகாரி ஏ.எச்.எம்.அஸ்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் மேலும் உரையாற்றுகையில்;

இந்த தேர்தல் முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. முஸ்லிம்கள் பிரிந்து நின்று வாக்களித்தாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே வெற்றிபெறும். முஸ்லிம்களாகிய நாம் நமது சமூகத்தைச் சேர்ந்த ஒரு முதலமைச்சரை பெறமுடியாமல் போகும். அப்படியானால் எதிர்வரும் ஐந்து வருட காலம் நாம் துன்பம் துயரம் நிறைந்த அவல வாழ்க்கையே வாழ நேரிடும். நாம் சிந்தித்து ஒற்றுமைப்பட்டு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொண்டால் எமது முஸ்லிம் சகோதரர் ஒருவரே முதலமைச்சராக வருவார்.

கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே வெற்றி பெறும் என்பது உறுதியாகிவிட்டது. முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் ஒன்றுபட்டு வாக்களித்து முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொண்டால் முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக வருவார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கிழக்கு மாகாணத்தை மீட்டுத்தந்தது மட்டுமன்றி சகல இன மக்களும் இந்த மண்ணில் சுத்திரமாகவும் நிம்மதியாகவும் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் மிகுந்த அக்கறையோடு செயற்பட்டு வருகின்றார்.

மூதூர் முஸ்லிம் மக்கள் அகதியாக்கப்பட்டபோது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அதிக அக்கறை எடுத்த காரணத்தினாலேயே விரைவில் அந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர். அவ்வாறான நிலை ஏற்படாதிருந்தால் வடமாகாண முஸ்லிம்கள் கடந்த 17 வருட காலம் அனுபவித்து வரும் நிலையே ஏற்பட்டிருக்கும். இந்த விடயத்திற்காவது முஸ்லிம்கள் ஜனாதிபதிக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கிழக்கு மண்ணை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ரணில் பிரபா ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து யாருக்கும் அச்சப்படாமல் குறுகிய நாட்களில் வெளியேற்றப்பட்ட மூதூர் முஸ்லிம்களை அந்தப்பிரதேசங்களில் மீள்குடியேற்றி வெற்றி கண்டுள்ளார். இன்று சர்வதேச நாடுகளே அவரை வீரத்தளபதியாக போற்றுமளவுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திகழ்கின்றார்.

ஜனாதிபதிக்கும் ரவூப் ஹக்கீமுக்கும் இருக்கின்ற சிறுசிறு பிரச்சினை காரணமாக இன்று அவர் முஸ்லிம்களை பலிக்கடாவாக்கப் பார்க்கின்றார். அவர் எடுத்திருப்பது பிழையான முடிவு என்பதை நிச்சயமாக எதிர்வரும் 10 ஆம் திகதி நிரூபிக்கப்போகின்றது. முஸ்லிம்களாகிய நாம் ஆழமாக சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். அவருடைய இந்த பிழையான முடிவை ஒவ்வொரு முஸ்லிம்களும் வீடுவீடாகச் சென்று மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த மண்ணிலே தேர்தல் கேட்கும் அவருக்கு முஸ்லிம் முதலமைச்சர் பெறுவதன் தேவைபற்றியோ, முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றியோ எவ்வித அக்கறையுமில்லாமல் சிறுபிள்ளைத்தனமாக எதிர்க்கட்சியாக இருக்கப்போகின்றார் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றார்.

முஸ்லிம் காங்கிரஸ் 10 அல்லது 12 ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சியோடு சேர்ந்து பெறும் எங்களுக்கு முதலமைச்சர் பதவியல்ல முக்கியம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் கிழக்கு மண்ணிலே ஜனநாயகத்தை கொண்டுவருவதற்காக வேண்டி போட்டியிடுகின்றோம் என்று தைரியமாக சொல்லுகின்றார்.

இந்தத் தேர்தலிலே வெற்றியோ தோல்வியோ எதுவந்தாலும் ஜனாதிபதியையோ, இந்த அரசாங்கத்தையோ அல்லது இந்த அமைச்சரவையோ ஒன்றும் செய்துவிட முடியாது. இந்த தேர்தலில் வெற்றியென்றால் இந்தப் பிரதேசம் வெற்றிபெறும் அவ்வாறு வெற்றியடைந்தால் இந்தப் பிரதேசம் பாதுகாக்கப்படும் அபிவிருத்தி செய்யப்படும்.

முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக எழுச்சிக்காக மர்ஹும் அஷ்ரப் கண்ட கனவை நனவாக்க, இந்த கட்சியை பாதுகாக்க, நாம் அனைவரும் ஒன்றுபடவேண்டிய தருணம் வந்துவிட்டது. எனவே முஸ்லிம்களாகிய நாம் முதலமைச்சராக முஸ்லிம் வரவேண்டுமா அல்லது வேறொருவர் வரவேண்டுமா என்பதை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

Email this page Your Opinion Print this page
இலங்கை மோதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தியாவின் தலையீட்டை வலியுறுத்தி தமிழக சட்ட சபையில் தீர்மானம்
ஐ.நா.செயலாளர் நாயகத்தை வைகோ சந்திப்பது இலங்கைக்கு முக்கியம் அல்ல
மனித உரிமைகள் விவகாரத்தில் முன்னேற்றத்தை வெளிப்படுத்துமாறு அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்
மு.கா.தலைமையகத்திற்குள் பொலிஸார் திடீரென பிரவேசித்து தீவிர தேடுதல்
பட்டினி சுனாமி உலகை காவு கொள்ளும் பேராபத்து
ஜானக பெரேரா உட்பட இரு முன்னாள் இராணுவ அதிகாரிகள் படைமுகாம்களுக்கு செல்லத் தடை
தேர்தலுக்கு முன் த.ம.வி.பு.வை நிராயுதபாணிகளாக்க வலியுறுத்தி தீர்மானம்
உத்தரவாத விலையை மீறி அரிசி விற்ற 60 வர்த்தகர்கள் கைது
நானாட்டான் அச்சம்குளம் பகுதியில் 2 கடற்றொழிலாளர் சுட்டுக்கொலை
கலவானவில் பெரும்பான்மையினக் கோஷ்டி தாக்குதல் 15 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் வெளியேற்றம்
இராணுவ வீரரின் வீட்டில் வெடி பொருட்கள், ஆயுதங்கள் மீட்பு
கிண்ணியாவில் ஆயுதங்கள் மீட்பு
கடத்தப்பட்ட குடும்பப் பெண் விடுவிக்கப்படவில்லை
கம்பஹாவில் தேடுதல் 38 பேர் கைது
இரத்தினபுரியில் மீண்டும் சிக்குன்குனியா விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள்
கெக்கிராவ வைத்தியசாலை வைத்தியர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு
பிரிட்டிஷ் தமிழ்மன்றம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் லண்டன் மேயர் கலந்துகொண்டதால் சர்ச்சை
கிழக்கில் இதுவரை 19 தேர்தல் வன்முறைகள் அரச வளங்கள் ஆளுந்தரப்பால் துஷ்பிரயோகம்
சர்வதேச நிபுணர் குழுவின் செயற்பாட்டில் சந்தேகம் எழுப்புகிறார் அமைச்சர் சமரசிங்க
பரீட்சை மீள் திருத்த முடிவு அறிவிக்கப்படாததால் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம்
முச்சக்கரவண்டி - டிப்பர் வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயம்
மாத்தளை மாவட்டத்தில் எலிக்காய்ச்சலால் 180 பேர் பாதிப்பு; நான்கு பேர் உயிரிழப்பு
வீட்டுக் கூரையை பிரித்து நகைகள் கொள்ளை
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டபோதும் சில்லறை கடைகளில் அதிக விலைக்கே விற்பனை
மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 15 குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு
ஒருவருக்கு வழங்க வேண்டிய ஊ.சே.நிதியை மற்றொருவருக்கு வழங்கியது தொடர்பாக முறைப்பாடு
வவுனியா அரச வைத்தியசாலை தாதிமார் இன்று இருமணி நேர வேலைநிறுத்தம்
317.2 மில்லியன் டொலராக வர்த்தக நிலுவை அதிகரிப்பு
வாக்காளர்கள் அட்டைகள் விநியோகம் ஆரம்பம்
பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் இருந்தால் கல்வித்துறை சீரழிவதுடன் பிரச்சினைகளும் ஏற்படும்
வடமேல் மாகாணத்தில் பஸ் வண்டிகளுக்கான வீதி அனுமதிப்பத்திரம் வழங்குதல் இடைநிறுத்தம்
ஜனவரி - ஏப்ரல் வரை எலிக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு தம்புள்ளையில் அனுமதிக்கப்பட்ட 91 பேரில் நால்வர் மரணம்
ருவன்வெல்லவில் போலியான மதுபான நிலையம் கண்டுபிடிப்பு
கைவிடப்பட்ட வீட்டிலிருந்து வெடி பொருட்கள் மீட்பு
இடைவிலகிய மாணவர்களை மீண்டும் இணைக்க நடவடிக்கை
தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது
வீரத்தளபதியாக சர்வதேசமே போற்றும் ஜனாதிபதிக்கு நன்றியுடையோராக இருப்போம்
சமூகத்தின் நலன்காக்க உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கட்சிக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டுள்ளது
முஸ்லிம்களுக்கு விமோசனமளித்தது எமது அரசே மாகாண சபைத்தேர்தலில் நாம் வெற்றி பெறுவது உறுதி
ஜே.வி.பி.எம்.பி பிணையில் செல்ல அனுமதி
`திருமணமாகாமை பற்றிய சான்றிதழ் இனிமேல் வழங்கப்படமாட்டாது'
டாக்டர் விக்கிரமசிங்கவின் ஆலோசனைகளை செயற்படுத்தியிருந்தால் யுத்தம் ஏற்பட்டிருக்காது
`ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தில் இணைவதனால் இளைப்பாறியோர் நன்மைகளை பெறமுடியும்'
உரப்பசளைகளையும் கிருமிநாசினிகளையும் பயன்படுத்துவதால் மண்வளம் அழிவதாக கவலை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com