*பிரசாரக் கூட்டத்தில் ஹிஸ்புல்லாஹ்
தமிழர்களின் உரிமைகளில் எதுவும் மறுக்கப்படமாட்டாது எந்த ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகளும் இருக்காது, இலக்கத்தகடுகள் இன்றி எந்த வாகனமும் ஓடமுடியாது என்ற உத்தரவாதத்தை எம்மால் வழங்க முடியும் என்று முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாண சபைத் தேர்தல் முதன்மை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நான் முதலமைச்சராக தெரிவானால் மேற்படி நடவடிக்கைகளை அமுல்படுத்துவேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கின்றேன்.
கிழக்கின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி தமிழ் - முஸ்லிம் சிங்கள மக்களின் அபிப்பிராயங்களைப் பெற்று பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை உடனடியாக அமுல்படுத்துவேன்.
தமிழ் - முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காக இரு சமூக தலைவர்களுக்கும் உரிய கௌரவத்தை அளித்து இன உறவை கட்டியெழுப்பவும் முழுமையாக என்னை அர்ப்பணித்து செயல்படுவேன் என்றும் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.