கிண்ணியாவிலுள்ள வீடொன்றின் கூரையைப் பிரித்து அங்கிருந்த 19 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது;
சம்பவ தினமன்று குறித்த வீட்டுக்காரர்கள் உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர். மீண்டும் 9.30 மணியளவில் வீட்டுக்கு வந்தபோதே இந்த அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது தெரியவந்தது.
அருகிலிருந்த ஏணி மூலம் கூரையால் உள்ளே நுழைந்த திருடர் குழுவே இக்கைவரிசையைக் காட்டியுள்ளது. முன்னிரவில் அதுவும் குடிசனம் நெருக்கமாகவுள்ள மாஞ்சோலைப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை இப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.