Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 24, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
இலங்கை மோதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தியாவின் தலையீட்டை வலியுறுத்தி தமிழக சட்ட சபையில் தீர்மானம்
[24 - April - 2008] [Font Size - A - A - A]
* கருணாநிதி முன்மொழிந்தார்; காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க.வரவேற்பு

இலங்கையில் இடம்பெற்றுவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து முறையான அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு இந்திய மத்திய அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டுமெனக்கோரும் தீர்மானமொன்றை தமிழக சட்டசபை நேற்று புதன் கிழமை நிறைவேற்றியுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி முன்மொழிந்த தீர்மானத்தை காங்கிரஸ் பாட்டாளி மக்கள் கட்சி, ம.தி.மு.க. ஆகியவை வரவேற்றுள்ளன.

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஒரு சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தில் சுதர்சனம் (காங்கிரஸ்) ஜி.கே.மணி (பா.ம.க) கண்ணப்பன் (ம.தி.மு.க) ஆகியோர் உரையாற்றினர்.

இந்த விவாதத்தில் முதலமைச்சர் கருணாநிதியும் பங்கேற்று தமது கருத்துகளைத் தெரிவித்தார். அரசின் சார்பாக தீர்மானம் ஒன்றையும் கொண்டு வந்தார். அப்போது முதல்வர் கூறியதாவது;

இந்த அவையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் பரிவு உணர்வோடும் இரக்க சிந்தனையோடும் தமிழர்களுக்கு உதவிடும் பாசமனப்பான்மையோடும் கொண்டு வர வேண்டும். அதே அடிப்படையில் இதன் மீது விவாதம் நடைபெற்று இருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

ஆனால், ஜி.கே.மணி என்ன நோக்கத்தில் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வர நினைத்தாரோ அந்த நோக்கம் சிதையும் வகையில் சில வார்த்தைப் பிரயோகம் அமைந்துவிட்டதற்காக நான் வருத்தப்படுகிறேன்.

இந்தியப் பேரரசின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு நிர்வாகத்தை நாம் நடத்தி வருகிறோம். இந்த அவையில் எழுப்பப்படும் கருத்து நிறைவேற்றப்படும் தீர்மானம் அந்த ஆணிவேரை அசைத்துவிடக்கூடாது. அது தான் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகும்.

இங்கே பேசிய ம.தி.மு.க. உறுப்பினர் கண்ணப்பன் , சுதர்சனத்திற்குப் பதில் அளிக்கும் வகையில் ஒரு மாறுபட்ட கருத்தைச் சொல்ல வந்தபோது உணர்ச்சி வேகத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஒரு கருத்தைத் தெரிவித்து விட்டார். அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு வேண்டுகிறேன்.

இலங்கைப் பிரச்சினை தொடங்கிய காலம் முதல் செல்வா உள்ளிட்ட தலைவர்கள் பலரும் பல்வேறு அறவழிப் போராட்டங்கள் , கிளர்ச்சிகள் நடத்தினார்கள். அது பயனளிக்காத நிலையில் இலங்கை ஆதிக்கத்தின் கொடுமையில் இருந்து விடுதலை பெற்றே ஆக வேண்டும் என்று சிலர் போராளிகளாக மாறினார்கள்.

அவர்கள் அனைவரும் ஒரே குழுவாக ஒற்றுமையுடன் இருந்து போராட்டம் நடத்தி இருந்தால் இப்போது நேபாளத்தில் கிடைத்திருப்பது போல ஒரு வெற்றியை அவர்கள் ஈட்டியிருக்க முடியும். ஆனால், அங்குள்ள போராளி குழுக்களுக்குள்ளே நடந்த போராட்டம் தான் இன்று இந்த அவையிலே அவர்களுக்காக பரிந்துரை செய்து பேசும் நிலைமை உருவாகி உள்ளது. முன்னரும் நான் சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.

ஒரே குழுவாக இருந்து தமிழர்களுக்குரிய உரிமைகளைப் பெறும் எண்ணம் அவர்களிடம் இல்லாமல் ஒரு குழு மற்றக் குழுவினரை மாய்க்க வேண்டும் என்று வெட்டிக் கொண்டும் சுடப்பட்டும் மாய்ந்தார்கள். அமிர்தலிங்கம் போன்ற தலைவர் கொல்லப்பட வேண்டியவரா? விருந்துக்கு என்று வந்து அவரையும் அவரது தோழர்களையும் பிணமாகச் சாய்த்தார்கள்.

அதனால் தான் உலகில் பல விடுதலைப் போராட்டங்கள் வெற்றி பெற்றும் கூட இவர்களால் வெற்றி பெற முடியவில்லை. நமக்குள்ளே ஒற்றுமையின்றி பகைவருக்கு இடம் கொடுத்துவிட்டதால் தான் சிங்கள இராணுவம் நம்மீது ஏறி மிதிக்கிறது. ஆனாலும் கூட நம் குழந்தை தவறி விழும்போது தாங்கிப் பிடிக்கும் தாய் உள்ளத்துடன் நாம் செயற்படுகிறோம்.

தொப்புள்கொடி உறவு என்று சொன்னால் மட்டும் போதாது. அந்த உறவுகளை நாம் காப்பாற்ற வேண்டும். அதற்காக இங்கே ஒரு தீர்மானம் வருவதை நானும் ஆதரிக்கிறேன். அதே நேரத்தில் இந்திய அரசை குறை கூறிப் பயன் இல்லை. அவர்கள் பெரும் இழப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். எனவே, அவர்களைப் பழிசொல்லியும் குறைகூறியும் பயன் இல்லை.

அந்தக் குடும்பம் இன்னும் மனித நேயத்துடன் தான் இருக்கிறது என்பதற்கு வேலூர் சிறைச்சாலைச் சம்பவமும் சோனியா மன்னிப்பு அளித்ததும் உதாரணங்களாகும். அதன் அடிப்படையில் அவர்கள் தமிழர்களின் உயிருக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்தத் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன். நீங்கள் இதை ஆதரித்துத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறிய முதல்வர் கருணாநிதி தீர்மானத்தை வாசித்தார். அந்தத் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு;

இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அங்கு மோதலில் ஈடுபட்டு வரும் இரு பிரிவினர் இடையேயும் பேச்சுவார்த்தைக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து சுதர்சனம், ஜி.கே.மணி , கண்ணப்பன் ஆகியோர் இத்தீர்மானத்தை தங்கள் கட்சி வரவேற்பதாகத் தெரிவித்தனர்.

Email this page Your Opinion Print this page
இலங்கை மோதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தியாவின் தலையீட்டை வலியுறுத்தி தமிழக சட்ட சபையில் தீர்மானம்
ஐ.நா.செயலாளர் நாயகத்தை வைகோ சந்திப்பது இலங்கைக்கு முக்கியம் அல்ல
மனித உரிமைகள் விவகாரத்தில் முன்னேற்றத்தை வெளிப்படுத்துமாறு அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்
மு.கா.தலைமையகத்திற்குள் பொலிஸார் திடீரென பிரவேசித்து தீவிர தேடுதல்
பட்டினி சுனாமி உலகை காவு கொள்ளும் பேராபத்து
ஜானக பெரேரா உட்பட இரு முன்னாள் இராணுவ அதிகாரிகள் படைமுகாம்களுக்கு செல்லத் தடை
தேர்தலுக்கு முன் த.ம.வி.பு.வை நிராயுதபாணிகளாக்க வலியுறுத்தி தீர்மானம்
உத்தரவாத விலையை மீறி அரிசி விற்ற 60 வர்த்தகர்கள் கைது
நானாட்டான் அச்சம்குளம் பகுதியில் 2 கடற்றொழிலாளர் சுட்டுக்கொலை
கலவானவில் பெரும்பான்மையினக் கோஷ்டி தாக்குதல் 15 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் வெளியேற்றம்
இராணுவ வீரரின் வீட்டில் வெடி பொருட்கள், ஆயுதங்கள் மீட்பு
கிண்ணியாவில் ஆயுதங்கள் மீட்பு
கடத்தப்பட்ட குடும்பப் பெண் விடுவிக்கப்படவில்லை
கம்பஹாவில் தேடுதல் 38 பேர் கைது
இரத்தினபுரியில் மீண்டும் சிக்குன்குனியா விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள்
கெக்கிராவ வைத்தியசாலை வைத்தியர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு
பிரிட்டிஷ் தமிழ்மன்றம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் லண்டன் மேயர் கலந்துகொண்டதால் சர்ச்சை
கிழக்கில் இதுவரை 19 தேர்தல் வன்முறைகள் அரச வளங்கள் ஆளுந்தரப்பால் துஷ்பிரயோகம்
சர்வதேச நிபுணர் குழுவின் செயற்பாட்டில் சந்தேகம் எழுப்புகிறார் அமைச்சர் சமரசிங்க
பரீட்சை மீள் திருத்த முடிவு அறிவிக்கப்படாததால் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம்
முச்சக்கரவண்டி - டிப்பர் வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயம்
மாத்தளை மாவட்டத்தில் எலிக்காய்ச்சலால் 180 பேர் பாதிப்பு; நான்கு பேர் உயிரிழப்பு
வீட்டுக் கூரையை பிரித்து நகைகள் கொள்ளை
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டபோதும் சில்லறை கடைகளில் அதிக விலைக்கே விற்பனை
மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 15 குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு
ஒருவருக்கு வழங்க வேண்டிய ஊ.சே.நிதியை மற்றொருவருக்கு வழங்கியது தொடர்பாக முறைப்பாடு
வவுனியா அரச வைத்தியசாலை தாதிமார் இன்று இருமணி நேர வேலைநிறுத்தம்
317.2 மில்லியன் டொலராக வர்த்தக நிலுவை அதிகரிப்பு
வாக்காளர்கள் அட்டைகள் விநியோகம் ஆரம்பம்
பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் இருந்தால் கல்வித்துறை சீரழிவதுடன் பிரச்சினைகளும் ஏற்படும்
வடமேல் மாகாணத்தில் பஸ் வண்டிகளுக்கான வீதி அனுமதிப்பத்திரம் வழங்குதல் இடைநிறுத்தம்
ஜனவரி - ஏப்ரல் வரை எலிக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு தம்புள்ளையில் அனுமதிக்கப்பட்ட 91 பேரில் நால்வர் மரணம்
ருவன்வெல்லவில் போலியான மதுபான நிலையம் கண்டுபிடிப்பு
கைவிடப்பட்ட வீட்டிலிருந்து வெடி பொருட்கள் மீட்பு
இடைவிலகிய மாணவர்களை மீண்டும் இணைக்க நடவடிக்கை
தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது
வீரத்தளபதியாக சர்வதேசமே போற்றும் ஜனாதிபதிக்கு நன்றியுடையோராக இருப்போம்
சமூகத்தின் நலன்காக்க உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கட்சிக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டுள்ளது
முஸ்லிம்களுக்கு விமோசனமளித்தது எமது அரசே மாகாண சபைத்தேர்தலில் நாம் வெற்றி பெறுவது உறுதி
ஜே.வி.பி.எம்.பி பிணையில் செல்ல அனுமதி
`திருமணமாகாமை பற்றிய சான்றிதழ் இனிமேல் வழங்கப்படமாட்டாது'
டாக்டர் விக்கிரமசிங்கவின் ஆலோசனைகளை செயற்படுத்தியிருந்தால் யுத்தம் ஏற்பட்டிருக்காது
`ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தில் இணைவதனால் இளைப்பாறியோர் நன்மைகளை பெறமுடியும்'
உரப்பசளைகளையும் கிருமிநாசினிகளையும் பயன்படுத்துவதால் மண்வளம் அழிவதாக கவலை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com