இஸ்ரேல் பலஸ்தீனத்தின் மீது மேற்கொண்டுவருகின்ற கண் மூடித்தனமான தாக்குதல் சம்பவங்களை கண்டித்து புத்தளத்தில் இன்று வெள்ளிக்கிழமை கண்டனப் பேரணியொன்று இடம்பெறவுள்ளது.
புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைமையில் ஏற்பாடு செய்துள்ள இந்த கண்டனப் பேரணி, புத்தளம் நகர மையத்தில் இடம்பெறவுள்ளது. ஜூம்ஆ தொழுகையினையடுத்து இடம்பெறும் பேரணியில் அமைப்புகள் பலவும் கலந்துகொள்ளவுள்ளன.
அதேவேளை, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பிரதேச மக்களிடத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ள பலஸ்தீனத்து மக்களுக்கு உதவிகளை வழங்கும் வகையில் நிதி சேகரிப்பு இடம்பெறவுள்ளது.
திங்கட்கிழமை நகர மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து விசேட துஆப் பிரார்த்தனைகளை மேற்கொள்ளவுள்ளதாக புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் எஸ்.ஆர்.எம்.முசம்மில் தெரிவித்தார்.