Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 25, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
இலங்கையில் நடக்கவுள்ள கிழக்கு மாகாணசபை தேர்தலை தடுக்க இந்திய அரசை வலியுறுத்துங்கள்
[25 - April - 2008] [Font Size - A - A - A]
* கருணாநிதியிடம் திருமாவளவன் அவசர கோரிக்கை

இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தை பிரித்து கிழக்குப் பிரதேசத்தில் தேர்தல் நடத்துவதை தடுக்க இந்திய அரசினது தலையீடு அவசியம் என்பதை இந்திய அரசுக்கு தமிழக முதல்வர் சுட்டிக்காட்ட வேண்டும் என்று தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் நேற்று வியாழக்கிழமையன்று தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தமிழக சட்டப்பேரவையின் 23.4.08 அன்று ஈழத் தமிழர் சிக்கல் தொடர்பாக சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் அரசியல் நெருக்கடிகள் நிறைந்த இந்தச் சூழலில் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது உலகத் தமிழர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மறைந்த ராஜீவ் காந்தி முயற்சியில் உருவான இந்திய-இலங்கை ஒப்பந்தப் படி இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தை ஒரு போதும் பிரிக்கக் கூடாது என உறுதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது இலங்கை அரசு இவ்வொப்பந்தத்துக்கு எதிரான வகையில் வடகிழக்கு மாகாணத்தை அரசியல் ரீதியாக இரண்டாகப் பிரித்து தனித்தனியே மாகாண சபைக்கான தேர்தல்களை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது.

பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் அஞ்சல் வழி வாக்குப் பதிவு தொடங்க உள்ளது.

இவ்வாறான சூழலில் தான் இந்திய- இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக, ராஜீவுக்கு எதிராக, இந்திய அரசுக்கு எதிராக வட கிழக்கு மாகாணத்தை பிரிக்கும் இலங்கையரின் சதியை முறியடித்திட இந்திய அரசு உடனே தலையிட வேண்டும் என்று வலியுறுத்துகிற வகையிலும் அங்கே நடைபெறவுள்ள தேர்தலை தடுப்பதற்கோ அல்லது தள்ளி வைப்பதற்கோ ஏற்ற வகையில் இந்திய அரசின் தலையீடு தேர்தல் நடைமுறை தொடங்குவதற்கு முன்னதாகவே இருந்திட வேண்டும் என்று வலியுறுத்துகிற வகையிலும் தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க-ம.தி.மு.க ஆகிய கட்சிகளின் சார்பில் ஒத்திவைப்புத் தீர்மானம் முன் மொழியப்பட்டது.

ஆனால் அதனை சட்டப்பேரவையில் ஒத்திவைப்புத் தீர்மானமாக அனுமதிக்கவில்லை என்றாலும் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானமாக விவாதிப்பதற்கு தமிழக முதல்வர் அனுமதி அளித்ததோடு இந்திய அரசின் தலையீட்டை வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதற்கு மனமார்ந்த நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிரான இலங்கை அரசின் முயற்சி தொடர்பாகவும் வடகிழக்கு மாகாணத்தை அரசியல் ரீதியாகப் பிரிப்பதை இந்திய அரசு தடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் தீர்மானத்தில் ஏதும் இல்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.

எனவே முதல்வர் கலைஞர் வடக்குக் கிழக்கை கூறுபோடும் இலங்கையரின் சதியை முறியடித்திட இந்திய அரசின் தலையீடு தவிர்க்க முடியாத தேவையாக உள்ளது என்பதை இந்திய அரசுக்கு சுட்டிக்காட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Email this page Your Opinion Print this page
சிக்குன்குன்யா, டெங்கு, எலிக்காய்ச்சல் 20 ஆயிரம் பேர் இதுவரை பாதிப்பு
கிளாலி, முகமாலை சமரில் இராணுவத்துக்கு பின்னடைவு இல்லை; வழமையான மோதலே
மாங்குளத்தில் கடும் விமானத்தாக்குதல் கரும்புலிகளின் பயிற்சி முகாம் அழிப்பு
வவுனியா செட்டிகுளம் பகுதியில் சுட்டும் வெட்டியும் இருவர் படுகொலை
கிழக்கு மாகாணத் தேர்தலில் ஐ.தே.க.வின் வெற்றிக்காக கொழும்பில் தமிழ்கூட்டமைப்பு புலிகள் முக்கிய சந்திப்பு
முகமாலை, கிளாலி மோதலில் பலியான படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு
3 யுவதிகள் உட்பட 6 பேரின் உடல்கள் யாழ். ஆஸ்பத்திரியில் கையளிப்பு
28 சடலங்கள் ஐ.சி.ஆர்.சி.யூடாக படையினரிடம் புலிகள் ஒப்படைப்பு
மன்னாரில் இருநாள் மோதல்களில் படையினருக்கு அதிக இழப்புகள்
இந்தியாவை தலையிட வைக்க மூன்றாம் தரப்பு தேவையில்லை
சர்வமத அமைப்புக்களின் கோரிக்கையையடுத்து மடு தேவாலயப் பகுதியிலிருந்து புலிகள் வெளியேற்றம்
பகவதி குழுவின் அறிக்கை தொடர்பாக ஜெனீவா மாநாட்டில் அரசு முறையிடும்
ஜூன் முதல் தனியார் துறைக்கு 20% சம்பள அதிகரிப்பு
ஐ.தே.க.-மு.கா.கூட்டை ஆதரித்தால் புலிகளிடம் வட,கிழக்கு ஐ.ம.சு.மு.வுக்கு வாக்களித்தால் பிள்ளையான் முதலமைச்சர்
இலங்கையில் நடக்கவுள்ள கிழக்கு மாகாணசபை தேர்தலை தடுக்க இந்திய அரசை வலியுறுத்துங்கள்
அமைச்சர்கள் , அதிகாரிகளுக்கு தேவை ஏற்பட்டாலே பொருட்களுக்கு விலைகுறைப்பு
கருணாரட்ணம் அடிகளாரின் கொலையை கண்டித்து ஐரோப்பிய பாராளுமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம்
மன்னாரில் நெல் வயல்களை படையினர் நாசப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் புகார்
மணலாறில் மோதல் படைவீரர் பலி
3 தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு
தம்புத்தேகம விபத்தில் இளைஞன் பலி
கடத்தப்பட்டு காணாமல்போனவரையே தாருஸ்ஸலாம் கட்டிடத்தில் தேடினோம்
மீசாலையில் படையினர் மீது புதனிரவு துப்பாக்கிச் சூடு
பத்திரிகை ஒழுக்கக் கோவை மீளமைப்புக்கு அனைத்து ஊடக அமைப்புகளும் பூரண ஆதரவு
பஹ்ரெய்னில் இலங்கையருக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ள உடன்படிக்கை கைச்சாத்து
நூலக ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப கிழக்கு கல்வித் திணைக்களம் நடவடிக்கை
பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் புதிய நியமனம்
508 கிராம சேவையாளர் பிரிவுகளில் 677 மில்லியன் ரூபாவில் அபிவிருத்தி
ஆட்சிமாற்றத்தை மக்கள் எதிர்பார்ப்பதாக கூறுகிறது ஜே.வி.பி
வாக்குமூலப் பிரதிக்கும் மொழிபெயர்ப்புக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள்
இரத்தினபுரியில் வேகமாகப் பரவும் புதுவித வைரஸ் காய்ச்சல்; பெருமளவானோர் பாதிப்பு
தம்புள்ள நகரில் தேடுதல் தமிழ் இளைஞர் கைது
ஐந்து கொள்ளையர்கள் செட்டிகுளத்தில் கைது
நகைக் கொள்ளையர்கள் இருவருக்கும் நகைகளை வாங்கியவருக்கும் விளக்கமறியல்
புத்தளத்தில் இன்று கண்டனப் பேரணி
மகனைக் காணவில்லையென தாயார் பிரதியமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் முறையீடு
கோதாபாய கொலைமுயற்சி வழக்கு விசாரணை
கூடிய விலையில் அரிசி விற்பனை 1 1/2 லட்சம் ரூபா அபராதம்
மோசமான மனித உரிமை மீறல்களின் எதிர்விளைவே சுயாதீன மாண்பு மிக்கோர் குழுவின் வெளியேற்றம்
சிறுபான்மையினங்களுக்கு இன்றுள்ள பாரிய அச்சுறுத்தல் அரச பயங்கரவாதம்
மலையக ஆசிரியர்கள், தொழிலாளர்கள் இணைந்து நானு ஓயாவில் மேதின ஊர்வலம் நடாத்த ஏற்பாடு
கடிதங்களை விநியோகிக்காது மறைத்து வைத்திருந்த தபால் ஊழியர் கைது
தேர்தல் காலத்தில் வன்முறைகள் இடம்பெறாமல் உறுதிப்படுத்துவது உயரதிகாரிகளின் பொறுப்பு
கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸின் ஐக்கியத்தை குழப்ப பலர் முயற்சி
ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் போது முழுமையாக சமுகமளித்திராமல் அறிக்கையை வெளியிடுவது எவ்வாறு?
வடக்கு மாகாண சபை அலுவலகங்கள் அடுத்த மாதம் முதல் வவுனியாவில் இயங்கும்
சட்ட உதவி நிலையம் அமைக்க வாழைச்சேனை மாவட்ட நீதிபதி முயற்சி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com