Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 25, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஐ.தே.க.-மு.கா.கூட்டை ஆதரித்தால் புலிகளிடம் வட,கிழக்கு ஐ.ம.சு.மு.வுக்கு வாக்களித்தால் பிள்ளையான் முதலமைச்சர்
[25 - April - 2008] [Font Size - A - A - A]
* இந்தியா வளங்களை சூறையாட வழி வகுக்கும்; ஜே.வி.பி.எச்சரிக்கை

-ரொஷான் நாகலிங்கம்-

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தால் வடக்கு, கிழக்கு மீண்டும் இணைக்கப்பட்டு அப்பிராந்தியம் புலிகளின் கைகளுக்கு சென்றுவிடுமெனவும் அதேபோல், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஆதரித்தால் இந்தியாவின் முகவராக செயற்படும் பிள்ளையானிடம் நிர்வாகம் சென்று இந்தியா கிழக்கு வளங்களை சூறையாட வழியேற்படும் எனவும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) நேற்று வியாழக்கிழமை கடுமையாக எச்சரித்தது.

கொழும்பிலுள்ள தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற ஜே.வி.பி.யின் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய அக்கட்சி எம்.பி.அநுர குமார திசாநாயக்கா, சிகிரியாக் குன்றிலிருந்து கல்லொன்று வீழ்ந்ததைப் போன்றதே விமல் வீரவன்சவின் நிலமையெனவும் ஒரு கல் வீழ்ந்ததால் மலை உடைந்து விட்டதாக கூற முடியாது. அது போலவே ஜே.வி.பி.யின் நிலமையும் எனவும் மக்கள் தமது கட்சி மீது உறுதியான நம்பிக்கை வைத்திருப்பதாகவும் கூறினார்.

அவர் தமதுரையில் மேலும் கூறியதாவது;

மாகாண சபை உருவாக்கப்பட்டு வடக்கு கிழக்கை பிரித்து படையினர் கிழக்கை மீட்டதன் பின்னர் அதாவது 1989 இற்குப் பின்னர் தற்போது மாகாண சபை தேர்தல் இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி, அரசியல் அங்கம் கட்சிகளின் கூட்டமைப்பு எமது கட்சியென நாட்டின் முக்கிய மூன்று தேசிய கட்சிகள் இதில் போட்டியிடுகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுகின்ற அதேநேரம், அரசாங்கம் அதாவுல்லா, பேரியல் அஷ்ரப், ஹிஸ்புல்லா, ஹெல உறுமய மற்றும் பிள்ளையானுடன் பாரிய கூட்டணி அமைத்து தேர்தலில் களம் இறங்கியுள்ள நிலையில் கிழக்கு வளங்களை பாதுகாப்பதற்கு நாமும் போட்டியிடுகின்றோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் போட்டியிடுகின்றார். அரசாங்கம் தவிர்ந்த வடக்கு, கிழக்கு இணைப்பை ஆதரிக்கின்ற தனிப்பட்ட நபரொருவராக விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தம் செய்தவர் ரவூப் ஹக்கீம்,இவருக்கு வாக்களிப்பின் கிழக்கு வடக்குடன் இணைக்கப்பட்டு புலிகளின் கைகளுக்கு செல்வதற்கே வழிவகுக்கும்.

அதுபோல் அரசின் பாரிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பின் பிள்ளையானே முதலமைச்சராக வருவார். இவர் இந்தியாவின் முகவராக தொழிற்படுவார். கிழக்கு வளம் நிறைந்த பூமி. இந்நிலையில் அவ்வளங்களை சூறையாடுவதற்கு இந்தியா பிள்ளையானை முதலமைச்சராக்கப் பார்க்கின்றது.

கிழக்கின் சம்பூருக்கு எவரும் செல்லமுடியாது. அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் உட்பட அமைச்சர்கள் கூட அங்கு செல்ல முடியாத நிலையுள்ளது. ஏனெனில், இது இந்தியாவுக்கு கையளிக்கப்பட்டுள்ளதேயாகும். அதுபோல் கந்தளாய் சீனி தொழிற்சாலையுட்பட 500 ஏக்கர் நிலப்பரப்பு, சீனக்குடா இறங்குதுறை உட்பட பெருமளவான நிலப்பரப்பு இந்தியாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் போன்று எவரும் பங்குபற்றாத நிலையில் அரசாங்கம் தனக்கு அதிர்ஷ்ட லாபம் ஏற்படுமென நினைத்து இதனை நடத்த முன்வந்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு வளங்களை கொடுப்பதே நோக்கமாகும்.

இந்த இரு கட்சிகளின் நோக்கத்தை முறியடித்து கிழக்கு மக்கள் தமது வளங்களையும் உரிமைகளையும் பாதுகாத்து தமக்கு சேவைசெய்யக் கூடியவரை தெரிவு செய்ய இதற்கு சந்தர்ப்பம் வழங்கு முகமாகவே இத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். கிழக்கை படையினர் பயங்கரவாதிகளிடமிருந்து மரணங்கள், காயங்கள் உட்பட பல்வேறு கஷ்டங்களின் மத்தியில் விடுவித்த நிலையில் அதனை இந்தியாவிடம் கையளிக்க முயல்வது எந்த வகையில் நியாயமானது. இதனை ஒருபோதும் ஏற்க முடியாது.

எமது கட்சியின் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜயசேகர நியாயமற்ற வகையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்பெறப்பட்டுள்ளது.

அரசாங்க தரப்பினர் திருகோணமலைக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக செல்ல முடியாத நிலையில், அங்குள்ள மக்களுக்காக அவர் அங்கிருந்து குரல் கொடுத்தவர். பாராளுமன்றத்தில் அம்மக்களுடைய பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்த அவருடைய பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதன் மூலம் ஜே.வி.பி.யின் தேர்தல் பிரசாரத்தை அரசு தடை செய்யப் பார்க்கிறது.

ஜயந்த விஜயசேகரவை வாகனங்களை கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் கைது செய்தனர். அவர் எமது கட்சிக்குரிய வாகனத்தையே எடுத்தேன் என திரும்பத் திரும்ப தெரிவித்தும் குற்றத்துக்கான காரணமின்றி தடுத்து வைத்தனர்.

அவரை வேண்டுமென்றே புதுவருடப் பிறப்பின் பின்னர் பிணையில் செல்ல அனுமதித்துள்ளதுடன், அவரது பாதுகாப்புக்கு வழங்கப்பட்டவர்களையும் அவரது ஜீப்பையும் அரசாங்கம் வாபஸ் பெற்றுள்ளது.

எமது உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு படையினரை அரசிடம் நாம் கோராத நிலையில் பயங்கரவாதிகள் ஏற்கனவே தாக்குதல் நடத்தி அவரது உயிருக்கு அச்சுறுத்தலாக செயற்பட்டதன் காரணமாக அவருக்கு பாதுகாப்பு வழங்கும்படி அரசிடம் கோரினோம்.இதன் பின்னர் இவருக்கு பாதுகாப்பு வழங்குவதில் இழுபறியிருந்த நிலையில் பாராளுமன்றத்தில் தெரிவித்து சபாநாயகர் மூலம் பாதுகாப்பை பெற்ற நிலையில் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசாங்கம் அவரது பாதுகாப்பையும் ஜீப்பையும் வாபஸ் பெற்றதன் மூலம் அவரது வாழ்க்கையுடன் விளையாட முற்பட்டுள்ளது. அவரது உயிருக்கு ஏதேனும் நேரும் பட்சத்தில் அரசாங்கமும் ஜனாதிபதியும் பதில் சொல்ல வேண்டும்.

Email this page Your Opinion Print this page
சிக்குன்குன்யா, டெங்கு, எலிக்காய்ச்சல் 20 ஆயிரம் பேர் இதுவரை பாதிப்பு
கிளாலி, முகமாலை சமரில் இராணுவத்துக்கு பின்னடைவு இல்லை; வழமையான மோதலே
மாங்குளத்தில் கடும் விமானத்தாக்குதல் கரும்புலிகளின் பயிற்சி முகாம் அழிப்பு
வவுனியா செட்டிகுளம் பகுதியில் சுட்டும் வெட்டியும் இருவர் படுகொலை
கிழக்கு மாகாணத் தேர்தலில் ஐ.தே.க.வின் வெற்றிக்காக கொழும்பில் தமிழ்கூட்டமைப்பு புலிகள் முக்கிய சந்திப்பு
முகமாலை, கிளாலி மோதலில் பலியான படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு
3 யுவதிகள் உட்பட 6 பேரின் உடல்கள் யாழ். ஆஸ்பத்திரியில் கையளிப்பு
28 சடலங்கள் ஐ.சி.ஆர்.சி.யூடாக படையினரிடம் புலிகள் ஒப்படைப்பு
மன்னாரில் இருநாள் மோதல்களில் படையினருக்கு அதிக இழப்புகள்
இந்தியாவை தலையிட வைக்க மூன்றாம் தரப்பு தேவையில்லை
சர்வமத அமைப்புக்களின் கோரிக்கையையடுத்து மடு தேவாலயப் பகுதியிலிருந்து புலிகள் வெளியேற்றம்
பகவதி குழுவின் அறிக்கை தொடர்பாக ஜெனீவா மாநாட்டில் அரசு முறையிடும்
ஜூன் முதல் தனியார் துறைக்கு 20% சம்பள அதிகரிப்பு
ஐ.தே.க.-மு.கா.கூட்டை ஆதரித்தால் புலிகளிடம் வட,கிழக்கு ஐ.ம.சு.மு.வுக்கு வாக்களித்தால் பிள்ளையான் முதலமைச்சர்
இலங்கையில் நடக்கவுள்ள கிழக்கு மாகாணசபை தேர்தலை தடுக்க இந்திய அரசை வலியுறுத்துங்கள்
அமைச்சர்கள் , அதிகாரிகளுக்கு தேவை ஏற்பட்டாலே பொருட்களுக்கு விலைகுறைப்பு
கருணாரட்ணம் அடிகளாரின் கொலையை கண்டித்து ஐரோப்பிய பாராளுமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம்
மன்னாரில் நெல் வயல்களை படையினர் நாசப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் புகார்
மணலாறில் மோதல் படைவீரர் பலி
3 தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு
தம்புத்தேகம விபத்தில் இளைஞன் பலி
கடத்தப்பட்டு காணாமல்போனவரையே தாருஸ்ஸலாம் கட்டிடத்தில் தேடினோம்
மீசாலையில் படையினர் மீது புதனிரவு துப்பாக்கிச் சூடு
பத்திரிகை ஒழுக்கக் கோவை மீளமைப்புக்கு அனைத்து ஊடக அமைப்புகளும் பூரண ஆதரவு
பஹ்ரெய்னில் இலங்கையருக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ள உடன்படிக்கை கைச்சாத்து
நூலக ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப கிழக்கு கல்வித் திணைக்களம் நடவடிக்கை
பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் புதிய நியமனம்
508 கிராம சேவையாளர் பிரிவுகளில் 677 மில்லியன் ரூபாவில் அபிவிருத்தி
ஆட்சிமாற்றத்தை மக்கள் எதிர்பார்ப்பதாக கூறுகிறது ஜே.வி.பி
வாக்குமூலப் பிரதிக்கும் மொழிபெயர்ப்புக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள்
இரத்தினபுரியில் வேகமாகப் பரவும் புதுவித வைரஸ் காய்ச்சல்; பெருமளவானோர் பாதிப்பு
தம்புள்ள நகரில் தேடுதல் தமிழ் இளைஞர் கைது
ஐந்து கொள்ளையர்கள் செட்டிகுளத்தில் கைது
நகைக் கொள்ளையர்கள் இருவருக்கும் நகைகளை வாங்கியவருக்கும் விளக்கமறியல்
புத்தளத்தில் இன்று கண்டனப் பேரணி
மகனைக் காணவில்லையென தாயார் பிரதியமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் முறையீடு
கோதாபாய கொலைமுயற்சி வழக்கு விசாரணை
கூடிய விலையில் அரிசி விற்பனை 1 1/2 லட்சம் ரூபா அபராதம்
மோசமான மனித உரிமை மீறல்களின் எதிர்விளைவே சுயாதீன மாண்பு மிக்கோர் குழுவின் வெளியேற்றம்
சிறுபான்மையினங்களுக்கு இன்றுள்ள பாரிய அச்சுறுத்தல் அரச பயங்கரவாதம்
மலையக ஆசிரியர்கள், தொழிலாளர்கள் இணைந்து நானு ஓயாவில் மேதின ஊர்வலம் நடாத்த ஏற்பாடு
கடிதங்களை விநியோகிக்காது மறைத்து வைத்திருந்த தபால் ஊழியர் கைது
தேர்தல் காலத்தில் வன்முறைகள் இடம்பெறாமல் உறுதிப்படுத்துவது உயரதிகாரிகளின் பொறுப்பு
கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸின் ஐக்கியத்தை குழப்ப பலர் முயற்சி
ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் போது முழுமையாக சமுகமளித்திராமல் அறிக்கையை வெளியிடுவது எவ்வாறு?
வடக்கு மாகாண சபை அலுவலகங்கள் அடுத்த மாதம் முதல் வவுனியாவில் இயங்கும்
சட்ட உதவி நிலையம் அமைக்க வாழைச்சேனை மாவட்ட நீதிபதி முயற்சி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com