Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 25, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கிளாலி, முகமாலை சமரில் இராணுவத்துக்கு பின்னடைவு இல்லை; வழமையான மோதலே
[25 - April - 2008] [Font Size - A - A - A]
* புலிகளின் முதலாவது காவல் நிலை படையினர் வசம்; ஹெகலிய தெரிவிப்பு

எம்.ஏ.எம்.நிலாம்

கிளாலி, முகமாலைச் சமரில் இராணுவம் பின்னடைவைச் சந்திக்கவில்லை எனவும் சில சக்திகள் இதனைத் தவறாக பிரசாரப்படுத்த முனைவதாகவும் தெரிவித்த தேசிய பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல முகமாலையில் புலிகளின் முதலாவது முன்னரங்க காவல் நிலையத்தை படைத்தரப்பு தம்வசப்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற மோதலில் புலிகள் தரப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் 196 புலிகள் காயமடைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு நிலைவரம் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இத்தகவல்களை அமைச்சர் ரம்புக்வெல்ல வெளியிட்டார்.

அவர் மேலும் விளக்கமளிகையில் கூறியதாவது:செவ்வாய்க்கிழமை இரவு முகமாலை, கிளாலி பகுதியில் இடம்பெற்ற மோதல்கள் வழமையானது. இதில் பெரிதுபடுத்திக் கூறுவதற்கு எதுவும் கிடையாது. இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்னர் பல தடவைகள் இடம்பெற்றுள்ளன. இத்தாக்குதல்களின் போது புலிகள் தரப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இவர்களில் 81 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், 196 பேர் காயமடைந்துள்ளனர்.

அதேசமயம் இராணுவத் தரப்பில் 43 பேர் பலியானதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 38 பேர் காணாமல் போயிருந்தனர். பின்னர் அவர்களில் 5 பேர் திரும்பி முகாம்களுக்கு வந்து சேர்ந்தனர். 33 பேர் மட்டுமே தற்போது காணாமல் போயுள்ளனர். அத்துடன் இராணுவத்தரப்பில் 160 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 32 பேர் சிறிய காயங்களுக்காக சிகிச்சை பெற்றுக் கொண்டு படை முகாமுக்குத் திரும்பி விட்டனர்.

சில ஊடகங்கள் தெரிவித்திருப்பது போன்று இந்த மோதலில் இராணுவம் பின்னடைவைக் காணவில்லை. புலிகள் படைத்தரப்பின் மீது கடுமையாக தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஆனால், படையினரின் பதிலடியும் காத்திரமானதாகவே இருந்ததால் இறுதியில் புலிகள் பின்வாங்கினர். இச் சந்தர்ப்பத்தில் புலிகளின் முதலாவது முன்னரங்க காவல் நிலையத்தை இராணுவம் தம்வசப்படுத்தியது. புலிகள் இரண்டாவது முன்னரங்க காவல் நிலையத்துக்கப்பால் விரட்டப்பட்டுள்ளனர் எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
சிக்குன்குன்யா, டெங்கு, எலிக்காய்ச்சல் 20 ஆயிரம் பேர் இதுவரை பாதிப்பு
கிளாலி, முகமாலை சமரில் இராணுவத்துக்கு பின்னடைவு இல்லை; வழமையான மோதலே
மாங்குளத்தில் கடும் விமானத்தாக்குதல் கரும்புலிகளின் பயிற்சி முகாம் அழிப்பு
வவுனியா செட்டிகுளம் பகுதியில் சுட்டும் வெட்டியும் இருவர் படுகொலை
கிழக்கு மாகாணத் தேர்தலில் ஐ.தே.க.வின் வெற்றிக்காக கொழும்பில் தமிழ்கூட்டமைப்பு புலிகள் முக்கிய சந்திப்பு
முகமாலை, கிளாலி மோதலில் பலியான படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு
3 யுவதிகள் உட்பட 6 பேரின் உடல்கள் யாழ். ஆஸ்பத்திரியில் கையளிப்பு
28 சடலங்கள் ஐ.சி.ஆர்.சி.யூடாக படையினரிடம் புலிகள் ஒப்படைப்பு
மன்னாரில் இருநாள் மோதல்களில் படையினருக்கு அதிக இழப்புகள்
இந்தியாவை தலையிட வைக்க மூன்றாம் தரப்பு தேவையில்லை
சர்வமத அமைப்புக்களின் கோரிக்கையையடுத்து மடு தேவாலயப் பகுதியிலிருந்து புலிகள் வெளியேற்றம்
பகவதி குழுவின் அறிக்கை தொடர்பாக ஜெனீவா மாநாட்டில் அரசு முறையிடும்
ஜூன் முதல் தனியார் துறைக்கு 20% சம்பள அதிகரிப்பு
ஐ.தே.க.-மு.கா.கூட்டை ஆதரித்தால் புலிகளிடம் வட,கிழக்கு ஐ.ம.சு.மு.வுக்கு வாக்களித்தால் பிள்ளையான் முதலமைச்சர்
இலங்கையில் நடக்கவுள்ள கிழக்கு மாகாணசபை தேர்தலை தடுக்க இந்திய அரசை வலியுறுத்துங்கள்
அமைச்சர்கள் , அதிகாரிகளுக்கு தேவை ஏற்பட்டாலே பொருட்களுக்கு விலைகுறைப்பு
கருணாரட்ணம் அடிகளாரின் கொலையை கண்டித்து ஐரோப்பிய பாராளுமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம்
மன்னாரில் நெல் வயல்களை படையினர் நாசப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் புகார்
மணலாறில் மோதல் படைவீரர் பலி
3 தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு
தம்புத்தேகம விபத்தில் இளைஞன் பலி
கடத்தப்பட்டு காணாமல்போனவரையே தாருஸ்ஸலாம் கட்டிடத்தில் தேடினோம்
மீசாலையில் படையினர் மீது புதனிரவு துப்பாக்கிச் சூடு
பத்திரிகை ஒழுக்கக் கோவை மீளமைப்புக்கு அனைத்து ஊடக அமைப்புகளும் பூரண ஆதரவு
பஹ்ரெய்னில் இலங்கையருக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ள உடன்படிக்கை கைச்சாத்து
நூலக ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப கிழக்கு கல்வித் திணைக்களம் நடவடிக்கை
பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் புதிய நியமனம்
508 கிராம சேவையாளர் பிரிவுகளில் 677 மில்லியன் ரூபாவில் அபிவிருத்தி
ஆட்சிமாற்றத்தை மக்கள் எதிர்பார்ப்பதாக கூறுகிறது ஜே.வி.பி
வாக்குமூலப் பிரதிக்கும் மொழிபெயர்ப்புக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள்
இரத்தினபுரியில் வேகமாகப் பரவும் புதுவித வைரஸ் காய்ச்சல்; பெருமளவானோர் பாதிப்பு
தம்புள்ள நகரில் தேடுதல் தமிழ் இளைஞர் கைது
ஐந்து கொள்ளையர்கள் செட்டிகுளத்தில் கைது
நகைக் கொள்ளையர்கள் இருவருக்கும் நகைகளை வாங்கியவருக்கும் விளக்கமறியல்
புத்தளத்தில் இன்று கண்டனப் பேரணி
மகனைக் காணவில்லையென தாயார் பிரதியமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் முறையீடு
கோதாபாய கொலைமுயற்சி வழக்கு விசாரணை
கூடிய விலையில் அரிசி விற்பனை 1 1/2 லட்சம் ரூபா அபராதம்
மோசமான மனித உரிமை மீறல்களின் எதிர்விளைவே சுயாதீன மாண்பு மிக்கோர் குழுவின் வெளியேற்றம்
சிறுபான்மையினங்களுக்கு இன்றுள்ள பாரிய அச்சுறுத்தல் அரச பயங்கரவாதம்
மலையக ஆசிரியர்கள், தொழிலாளர்கள் இணைந்து நானு ஓயாவில் மேதின ஊர்வலம் நடாத்த ஏற்பாடு
கடிதங்களை விநியோகிக்காது மறைத்து வைத்திருந்த தபால் ஊழியர் கைது
தேர்தல் காலத்தில் வன்முறைகள் இடம்பெறாமல் உறுதிப்படுத்துவது உயரதிகாரிகளின் பொறுப்பு
கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸின் ஐக்கியத்தை குழப்ப பலர் முயற்சி
ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் போது முழுமையாக சமுகமளித்திராமல் அறிக்கையை வெளியிடுவது எவ்வாறு?
வடக்கு மாகாண சபை அலுவலகங்கள் அடுத்த மாதம் முதல் வவுனியாவில் இயங்கும்
சட்ட உதவி நிலையம் அமைக்க வாழைச்சேனை மாவட்ட நீதிபதி முயற்சி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com