Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 25, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சிக்குன்குன்யா, டெங்கு, எலிக்காய்ச்சல் 20 ஆயிரம் பேர் இதுவரை பாதிப்பு
[25 - April - 2008] [Font Size - A - A - A]
* பெரும் பீதியில் தென்னிலங்கை

சிக்குன்குன்யா, டெங்கு, எலிக்காய்ச்சல் மற்றும் அடையாளம் காணப்படாத வைரஸ் காய்ச்சல் ஆகியன இலங்கையை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்ததுடன் 20 ஆயிரம் பேர் இவற்றின் தாக்கத்திற்குட்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

தென்னிலங்கையைப் பீதியில் ஆழ்த்தியுள்ள இக்காய்ச்சலினைக் கட்டுப்படுத்த அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களில் மாத்திரம் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு 8 பேர் பலியாகியுள்ளதுடன், 2 ஆயிரத்து 359 பேர் இதன் தாக்கத்திற்கு உட்பட்டும் உள்ளனர்.

எலிக் காய்ச்சலினால் 40 பேர் பலியாகியுள்ளதுடன், ஆயிரக் கணக்கானவர்கள் இதன் தாக்கத்திற்கும் உட்பட்டு தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறே சிக்குன் குன்யா மற்றும் அடையாளம் காணப்படாத வைரஸ் காய்ச்சல் என்பனவற்றினாலும் சிலர் பலியாகியுள்ளதுடன், பல ஆயிரக் கணக்கானவர்கள் இதன் தாக்கத்திற்குட்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதுபற்றி அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கூறுகையில்;

இரத்தினபுரி மாவட்டத்தில் பல்வகை காய்ச்சலுக்கு உட்பட்டு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை ஆராய்ந்து, நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர சிறப்பு வைத்தியர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக மருந்துப் பொருட்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள காய்ச்சலினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது. இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும் என்றார்.

இதேவேளை, அண்மையில் பெய்த மழை காரணமாகவே நுளம்புகள் பெருக்கெடுத்து காய்ச்சலுக்கு காரணமாக அமைந்ததாக தெரிவித்த சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் நிஹால் அபயசிங்க நுளம்பு பரவும் சூழலை தடுப்பதே இவற்றின் தாக்கத்திலிருந்து மீளும் வழியெனவும், பொது மக்களை இதுகுறித்து அறிவூட்ட ஊடகங்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டதுடன், தமது உடலில் மாறுபட்ட தன்மை அல்லது அறிகுறிகளை உணருபவர்கள் அருகிலுள்ள வைத்தியரை நாடுவது அவசியமெனவும் இல்லையேல் அது உயிருக்கு பாதகமாக அமையுமெனவும் குறிப்பிட்டார்.

Email this page Your Opinion Print this page
சிக்குன்குன்யா, டெங்கு, எலிக்காய்ச்சல் 20 ஆயிரம் பேர் இதுவரை பாதிப்பு
கிளாலி, முகமாலை சமரில் இராணுவத்துக்கு பின்னடைவு இல்லை; வழமையான மோதலே
மாங்குளத்தில் கடும் விமானத்தாக்குதல் கரும்புலிகளின் பயிற்சி முகாம் அழிப்பு
வவுனியா செட்டிகுளம் பகுதியில் சுட்டும் வெட்டியும் இருவர் படுகொலை
கிழக்கு மாகாணத் தேர்தலில் ஐ.தே.க.வின் வெற்றிக்காக கொழும்பில் தமிழ்கூட்டமைப்பு புலிகள் முக்கிய சந்திப்பு
முகமாலை, கிளாலி மோதலில் பலியான படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு
3 யுவதிகள் உட்பட 6 பேரின் உடல்கள் யாழ். ஆஸ்பத்திரியில் கையளிப்பு
28 சடலங்கள் ஐ.சி.ஆர்.சி.யூடாக படையினரிடம் புலிகள் ஒப்படைப்பு
மன்னாரில் இருநாள் மோதல்களில் படையினருக்கு அதிக இழப்புகள்
இந்தியாவை தலையிட வைக்க மூன்றாம் தரப்பு தேவையில்லை
சர்வமத அமைப்புக்களின் கோரிக்கையையடுத்து மடு தேவாலயப் பகுதியிலிருந்து புலிகள் வெளியேற்றம்
பகவதி குழுவின் அறிக்கை தொடர்பாக ஜெனீவா மாநாட்டில் அரசு முறையிடும்
ஜூன் முதல் தனியார் துறைக்கு 20% சம்பள அதிகரிப்பு
ஐ.தே.க.-மு.கா.கூட்டை ஆதரித்தால் புலிகளிடம் வட,கிழக்கு ஐ.ம.சு.மு.வுக்கு வாக்களித்தால் பிள்ளையான் முதலமைச்சர்
இலங்கையில் நடக்கவுள்ள கிழக்கு மாகாணசபை தேர்தலை தடுக்க இந்திய அரசை வலியுறுத்துங்கள்
அமைச்சர்கள் , அதிகாரிகளுக்கு தேவை ஏற்பட்டாலே பொருட்களுக்கு விலைகுறைப்பு
கருணாரட்ணம் அடிகளாரின் கொலையை கண்டித்து ஐரோப்பிய பாராளுமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம்
மன்னாரில் நெல் வயல்களை படையினர் நாசப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் புகார்
மணலாறில் மோதல் படைவீரர் பலி
3 தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு
தம்புத்தேகம விபத்தில் இளைஞன் பலி
கடத்தப்பட்டு காணாமல்போனவரையே தாருஸ்ஸலாம் கட்டிடத்தில் தேடினோம்
மீசாலையில் படையினர் மீது புதனிரவு துப்பாக்கிச் சூடு
பத்திரிகை ஒழுக்கக் கோவை மீளமைப்புக்கு அனைத்து ஊடக அமைப்புகளும் பூரண ஆதரவு
பஹ்ரெய்னில் இலங்கையருக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ள உடன்படிக்கை கைச்சாத்து
நூலக ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப கிழக்கு கல்வித் திணைக்களம் நடவடிக்கை
பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் புதிய நியமனம்
508 கிராம சேவையாளர் பிரிவுகளில் 677 மில்லியன் ரூபாவில் அபிவிருத்தி
ஆட்சிமாற்றத்தை மக்கள் எதிர்பார்ப்பதாக கூறுகிறது ஜே.வி.பி
வாக்குமூலப் பிரதிக்கும் மொழிபெயர்ப்புக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள்
இரத்தினபுரியில் வேகமாகப் பரவும் புதுவித வைரஸ் காய்ச்சல்; பெருமளவானோர் பாதிப்பு
தம்புள்ள நகரில் தேடுதல் தமிழ் இளைஞர் கைது
ஐந்து கொள்ளையர்கள் செட்டிகுளத்தில் கைது
நகைக் கொள்ளையர்கள் இருவருக்கும் நகைகளை வாங்கியவருக்கும் விளக்கமறியல்
புத்தளத்தில் இன்று கண்டனப் பேரணி
மகனைக் காணவில்லையென தாயார் பிரதியமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் முறையீடு
கோதாபாய கொலைமுயற்சி வழக்கு விசாரணை
கூடிய விலையில் அரிசி விற்பனை 1 1/2 லட்சம் ரூபா அபராதம்
மோசமான மனித உரிமை மீறல்களின் எதிர்விளைவே சுயாதீன மாண்பு மிக்கோர் குழுவின் வெளியேற்றம்
சிறுபான்மையினங்களுக்கு இன்றுள்ள பாரிய அச்சுறுத்தல் அரச பயங்கரவாதம்
மலையக ஆசிரியர்கள், தொழிலாளர்கள் இணைந்து நானு ஓயாவில் மேதின ஊர்வலம் நடாத்த ஏற்பாடு
கடிதங்களை விநியோகிக்காது மறைத்து வைத்திருந்த தபால் ஊழியர் கைது
தேர்தல் காலத்தில் வன்முறைகள் இடம்பெறாமல் உறுதிப்படுத்துவது உயரதிகாரிகளின் பொறுப்பு
கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸின் ஐக்கியத்தை குழப்ப பலர் முயற்சி
ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் போது முழுமையாக சமுகமளித்திராமல் அறிக்கையை வெளியிடுவது எவ்வாறு?
வடக்கு மாகாண சபை அலுவலகங்கள் அடுத்த மாதம் முதல் வவுனியாவில் இயங்கும்
சட்ட உதவி நிலையம் அமைக்க வாழைச்சேனை மாவட்ட நீதிபதி முயற்சி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com