Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 25, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
ஹொக்கி அணியில் வீரர்களை சேர்க்க இலஞ்சம்? கடும் நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்து
[25 - April - 2008] [Font Size - A - A - A]
இந்திய ஹொக்கி அணியில் வீரர்களைச் சேர்ப்பதற்கு இலஞ்சம் வாங்கிய புகார் குறித்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தை, சர்வதேச ஹொக்கி சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சர்வதேச ஹொக்கி சம்மேளனத்தின் தலைவர் எல்ஸ் வேன் பிரெடா வெரிஸ்மென் கடிதம் அனுப்பியுள்ளார்.

`ஆஜ் தக்' தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில், இந்திய ஹொக்கி அணியில் வீரர்களைச் சேர்ப்பதற்கு இந்திய ஹொக்கி சம்மேளனத்தின் பொதுச் செயலர் ஜோதிகுமரனிடம் இலஞ்சம் கொடுப்பதுபோன்ற காட்சி பதிவானது. இது தொடர்பாக அவர் மறுப்பு தெரிவித்ததுடன் தனது பதவியையும் இராஜிநாமா செய்தார்.

இலஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை இந்திய ஹொக்கி சம்மேளனம் நியமித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.எம்.என்.நடராஜன், தமிழ்நாடு பொலிஸின் முன்னாள் தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம், இந்திய ஹொக்கி சம்மேளனத்தின் செயலர் ராஜீவ் மேதா ஆகியோர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சியில் பதிவான அனைத்து அம்சங்கள் குறித்தும் இந்தக் குழு விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமென்று இந்திய ஹொக்கி சம்மேளனத்தின் தலைவர் கே.பி.எஸ்.கில் தெரிவித்தார்.

இதற்கிடையில் இலஞ்ச விவகாரம் தொடர்பாக இந்திய ஹொக்கி சம்மேளனத்தின் தலைவர் கே.பி.எஸ். கில்லும் தனது பதவியை இராஜிநாமா செய்ய வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் இந்திய ஒலிம்பிக் சங்கக் கூட்டத்தில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முடிவு காணப்பட்டுவிடும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் தெரிவித்தார். இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு கே.பி.எஸ்.கில்லுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
கடைசிநேர பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சுப்பகிங்ஸ் மும்பை இந்தியன்சை 6 ஓட்டங்களால் தோற்கடித்தது
சேப்பாக்கத்தில் கொண்டாட்டம்
சச்சின் விரும்பும் வரை அவரை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும்
ஹொக்கி அணியில் வீரர்களை சேர்க்க இலஞ்சம்? கடும் நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்து
பொண்டிங் தூண்டினால் பதிலடி இஷாந்த் சர்மா கூறுகின்றார்
ரட்ணம் கழகம் 7-1 கோல்களினால் பூட்டான் அணியை இலகுவாக வென்றது
ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கும் மேற்கிந்திய வீரர்கள் நாடு திரும்புகின்றனர்
அவுஸ்திரேலியாவில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com