Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 26, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கிழக்கில் ஆயுதக் குழுக்களால் சுதந்திரமான வாக்களிப்புக்கு பெரும் அச்சுறுத்தல்
[26 - April - 2008] [Font Size - A - A - A]
*வன்முறைகள் அதிகரிக்கும் அபாயம்; எச்சரிக்கிறது பவ்ரல்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வன்முறைகள் அதிகரிக்கும் அபாயமிருப்பதாக எச்சரித்த பவ்ரல் அமைப்பு மாகாணத்தில் செயற்படும் ஆயுதக் குழுக்கள் நீதியான தேர்தலுக்கும், மக்களின் சுதந்திரமான வாக்களிப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு மருதானையிலுள்ள சமூக, சமய நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பவ்ரலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கிங்ஸ்லி ரொட்றிகோ இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,

நீண்ட காலத்திற்குப்பின் கிழக்கில் நடைபெறும் தேர்தலானது பல எதிர்பார்ப்புகளை தோற்றுவித்துள்ளது. இதற்குப் பல காரணங்கள் உண்டு.

தேர்தலில் பல அரசியல் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளமையாலும், அரச வளம் அதிகமாக உபயோகிக்கப்படுவதாலும் ஆயுதக் குழுக்களின் நடமாட்டத்தாலும் அங்கு வன்முறைகள் அதிகரிக்கும் அபாயமுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் செயற்படும் ஆயுதக் குழுக்களின் செயற்பாடானது நீதியான தேர்தலுக்கும், மக்களின் சுதந்திரமான வாக்களிப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும். இது குறித்து உரிய தரப்பினர் அவதானம் செலுத்துவது அவசியமாகும்.

அரசியலமைப்புப் பேரவை செயற்படுமாயின் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு மூலம் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலை எம்மால் எதிர்பார்க்க முடியும். முறைகேடுகளில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன்நிறுத்தி வாக்களிப்பைக் கூட ரத்துசெய்ய முடியும்.

எனினும், சுயாதீன தேர்தல் ஆணைக்குழு இயங்காமையால் தேர்தல் ஆணையாளர் அதிகாரமற்று விளங்குகிறார். அரசியல் கட்சிகள் இதுபற்றி அலட்சியப்போக்குடன் செயற்படுகின்றமையே ஆணைக்குழு நிறுவப்படாமைக்கு பிரதான காரணமாகும்.

இதேசமயம், கிழக்கு தேர்தலில் அரசாங்கத் திணைக்களம் மற்றும் சபைகளின் வாகனங்களும் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. இதுவும் தேர்தல் அத்துமீறலாகவே கருதப்படும்.

கிழக்குத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவு வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.`பவ்ரல்' எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு நல்காது. எமது அமைப்பினை ஒரு அரசியல் கட்சியுடன் தொடர்புபடுத்தி வெளியாகிய பத்திரிகைச் செய்தி ஆதாரமற்றது. அதனை நிராகரிக்கிறேன் என்றார்.

இவ்வூடகவியலாளர் மாநாட்டில் தேசிய சமாதானப் பேரவைப் பணிப்பாளர் ஜெகான் பெரேரா `பவ்ரலின்' உதவி நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹனி ஹெட்டியாராச்சி உள்ளிட்டோருடன் வெளிநாட்டுத் தேர்தல் கண்காணிப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

Email this page Your Opinion Print this page
வடக்கு இழப்பை முழு உலகும் அறியும் உண்மையை மூடி மறைக்கிறது அரசு
மோதல்கள் இடம்பெறாமல் மடுமாதா தேவாலயம் படையினர் வசம்
முகமாலையில் பலியான படையினர் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு
இந்தியாவுக்கு எதிராக ஜே.வி.பி.யின் `வாய்வழித் தாக்குதல்' மேலும் அதிகரிப்பு
இரணைமடு பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
ஆசியாவில் அரிசிக்கு திண்டாட்டம் உலகில் பட்டினி அபாயம் அதிகரிப்பு
வாதி, பிரதிவாதி தரப்பினரின் வழக்கறிஞர் போன்று சமகாலத்தில் செயற்படும் சட்டமா அதிபர் திணைக்களம்
`சமயத்தினூடாக சமாதானம்' சர்வதேச மாநாடு நாளை மறுதினம் கண்டியில் ஆரம்பம்
கிழக்கில் ஆயுதக் குழுக்களால் சுதந்திரமான வாக்களிப்புக்கு பெரும் அச்சுறுத்தல்
வவுனியாவில் மின்னல் தாக்கி கான்ஸ்டபிள் பலி; இருவர் காயம்
க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கு இலவச இந்துநாகரிக பாட நூல்
இலங்கை பிரச்சினையில் மத்திய அரசின் கொள்கையே தமது கொள்கையென தமிழக அரசு இருக்கக் கூடாது
அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியின் 2008 க்கான கற்கைநெறி ஜூலையில் ஆரம்பம்
கலவான ஹோர்ட்டன் தோட்டத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட போதும் தொழிலாளர் திரும்பிச் செல்ல மறுப்பு
மட்டக்களப்பில் இன்று அனர்த்த ஆபத்து குறைப்பு ஒத்திகை பார்த்தல் பயிற்சி வேலைத் திட்டம்
டெங்கு நோய் பரவுதலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்
வவுனியாவில் கடத்தப்பட்ட மாணவனை விடுவிக்குமாறு பெற்றோர் கோரிக்கை
28 சிறார்களை த.ம.வி.பு.விடுவிப்பு சாதகமான சமிக்ஞை என்கிறது யுனிசெப்
வத்தளைக்கு ஆட்டோவில் சென்ற இரு வாலிபர்கள் வெள்ளை வானில் வந்தோரால் தாக்கப்பட்டு கடத்தல்
சவளக்கடை துவக்கு சூட்டில் ஒருவர் பலி
நேரியகுளம் முதியவர் படுகொலையின் சூத்திரதாரிகள் கொள்ளையரே
ஆலி-எலை இலங்கை வங்கி கிளையில் 4 1/2 கோடி ரூபா பெறுமதியான நகை,பணம் கொள்ளை
சுட்டுக்கொல்லப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்
அக்கிரமம் செய்யும் அரசுடன் மோதுவதற்கே யானையின் அங்குசத்தை கையிலெடுத்தோம்
கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டதையடுத்து தோட்டப் பகுதிகளில் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு
வீட்டுரிமையாளருக்கும் எனக்குமிடையிலான பிரச்சினையாலேயே என் மனைவி கடத்தப்பட்டார்
`அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வினால் அவதியுறும் தொழிலாளர்களின் அவல நிலைக்கு அரசே காரணம்'
யுத்தத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவராவிட்டால் ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் அழிந்துபோகும்
அரசில் அங்கம் வகிக்கும் 18 முஸ்லிம் அமைச்சர்களுக்கும் முஸ்லிம்களுக்கெதிரான அநீதியை தடுக்க திராணியில்லை
முஸ்லிம்களின் உரிமையையும் இருப்பையும் உறுதிப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்
சாய்ந்தமருது தனிப்பிரதேசசபை கோரிக்கையை எந்த முஸ்லிம் கட்சித் தலைவரும் நிறைவேற்றவில்லை
இளைஞர்களுக்கான சமாதான விதைப்பு முகாம்
முஸ்லிம் காங்கிரஸ் தலைமைச் செயலக தேடுதல் ஜனநாயக விழுமியங்களை அசிங்கப்படுத்தும் செயல்
முஸ்லிம்கள் - தமிழர்கள் பிரிந்து வாழமுடியாத சூழலையே கிழக்கின் பிரதேச வாழ்விடநிலைமைகள் கொண்டுள்ளன
தமிழ் மக்களை சிறுபான்மையாக்க முயற்சிக்கும் அரசின் நடவடிக்கையை தோற்கடிக்க வேண்டும்
ஐ.தே.கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மட்டக்களப்பில் தீவிர தேர்தல் பிரசாரம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எமது கட்சி 15 உறுப்பினர்களை வெற்றிகொள்ளும்
`அதிகரித்துவரும் அரசியல் தலைமைத்துவங்களே முஸ்லிம்களுக்கு சாபக்கேடாக அமைந்துவிட்டது'
யாழ். குடா நாட்டில் மீண்டும் பாதீனியச் செடிகள் 76 ஹெக்டயர் நிலப்பரப்பில் வளர்ச்சி
வடக்கு, கிழக்கு மாவட்டங்களின் வரலாறு உருமாறிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது
தாதிமார் வேலைப் பகிஷ்கரிப்பு வவுனியாவில் நோயாளர்கள் பாதிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com