Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 27, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்
[27 - April - 2008] [Font Size - A - A - A]
கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை திங்கட்கிழமையும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமையும் நடைபெறவுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் 9,412 பேர் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் கல்முனைத் தொகுதியில் 944 பேரும் சம்மாந்துறை தொகுதியில் 1,230 பேரும் பொத்துவில் தொகுதியில் 2,209 பேரும் அம்பாறை தொகுதியில் 5,029 பேரும் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் இவர்களுக்கான வாக்கு அட்டைகள் ஏற்கனவே திணைக்கள தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரும் உதவி தெரிவத்தாட்சி அதிகாரியுமான லக்ஸ்மேந்திர தமயந்த குமார தென்னக்கோன் தெரிவித்தார்.

இதற்கிடையில் தபால் திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் விடுமுறை மே மாதம் 10 ஆம் திகதி வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பிரதி அஞ்சல் மா அதிபர் ஆர்.டீ.பி.காமினி அறிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் 14 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக அரசியல் கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 561 பேர் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.

அம்பாறை தொகுதியில் 1,42,170 வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 153 வாக்களிப்பு நிலையங்களும் கல்முனைத் தொகுதியில் 64,316 வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 60 வாக்களிப்பு நிலையங்களும் சம்மாந்துறை தொகுதியில் 69,069 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு 77 வாக்களிப்பு நிலையங்களும் பொத்துவில் தொகுதியில் 1,33,765 பேர் வாக்களிப்பதற்கு 140 வாக்களிப்பு நிலையங்களும் நிறுவப்படவுள்ளன.

Email this page Your Opinion Print this page
சகலரையும் புலிகளாக எண்ணி அரசு ஒட்டுமொத்தமாக தமிழர்மீது தாக்குதல்
மடுவை அமைதி வலயமாக்க இறை ஆசி வேண்டி கத்தோலிக்க ஆலயங்களில் விசேட வழிபாடுகள்
மணலாறில் முன்னேற படையினர் முயற்சி
கிழக்குத் தேர்தலின் பின் வடமேல் மாகாண சபைக்கு வாக்களிப்பு நடத்த திட்டம்
சிக்குன்குனியா, டெங்கு நோயாளரால் நிரம்பி வழியும் ஆஸ்பத்திரிகள்
கிழக்கில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டிவிட அரசு முயற்சி
இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்ட நாய்க்குட்டி கடித்த மூவருக்கு விசர்நாய்க்கடி சிகிச்சை
ஈரான் ஜனாதிபதி நாளை விஜயம்
தேவை அதிகரிப்பு, விநியோகத்தில் இறுக்கம் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம்
உணவு, எரிபொருள், மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில் தாமதம்
யாழ். மாவட்ட இராணுவத் தளபதியுடன் மாவை சேனாதிராஜா சந்திப்பு
`இலங்கை மோதல்கள், தொடர்பாக கனடா விழித்தெழ வேண்டியது அவசியம்'
பஸ் மரத்துடன் மோதியதில் 11 பயணிகள் காயம்
மன்னாரில் ஒருவர் சுட்டுக் கொலை
மடுமாதா திருச்சொரூபத்தை கொலு வைப்பது உடனடியாக சாத்தியம் இல்லை என்கிறார் ஆயர்
ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க காயமடைந்து சிகிச்சை பெறும் படையினருடன் சந்திப்பு
`போர் நடவடிக்கைகள் மூலம் ஒருபோதும் எந்தவொரு தீர்வையும் எவரும் காணமுடியாது'
சிலாபம் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் காயம்
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடன் சந்திப்பு
குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை பிரதமர் ரட்ணசிறி நேரில் சென்று பார்வை
மயிலம்பாவெளியில் இளைஞர் சுட்டுக்கொலை
தோட்டத் தொழிலாளர்களுக்கும் 20 சதவீத சம்பளவுயர்வை வழங்க அரசு முன்வர வேண்டும்
ஐ.தே.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு கட்சியை சார்ந்தவர்கள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்
திருமலையில் மலேரியா காய்ச்சல் பரவாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தமிழ் பேசும் சமூகங்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி குளிர்காய நினைப்போருக்கு பாடம் புகட்ட வேண்டும்
தெற்கில் மினிசூறாவளி, இடிமின்னல், மழை ஒருவர் பலி, வீடுகள் சேதம், மின்சாரம் துண்டிப்பு
போலி கடவுச்சீட்டுக்களுடன் 11 பேர் சென்னை விமான நிலையத்தில் தடுத்து வைப்பு
ஐரோப்பியரிடம் இழந்த உரிமையை வென்றெடுக்க அனைத்து தமிழர்களும் ஒருமித்து பாடுபட வேண்டும்
காணாமல்போன பெண் சடலமாக காட்டில் மீட்பு
தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்
மதுரங்குளம் பகுதியில் ஐந்து தமிழர்கள் கைது
வட்டவளை கரோலினா தோட்ட வாகன விபத்தில் இருவர் படுகாயம்
அம்புலன்ஸ் விபத்தில் சிக்கி பயணம் செய்த பெண் பலி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com