Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 27, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஐரோப்பியரிடம் இழந்த உரிமையை வென்றெடுக்க அனைத்து தமிழர்களும் ஒருமித்து பாடுபட வேண்டும்
[27 - April - 2008] [Font Size - A - A - A]
*தந்தை செல்வா நினைவு தினத்தில் மாவை. சேனாதிராஜா

தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தமிழீழம் தான் இறுதியான தீர்வென்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் போது தந்தை செல்வநாயகம் கூறியிருந்தார். இதனால், ஐரோப்பியரிடம் இழந்த உரிமைகளை வென்றெடுப்பதற்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டுமென்று தந்தை செல்வாவின் நினைவுத் தூபியில் நின்று பகிரங்க வேண்டுகோள் விடுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தந்தை செல்வநாயகத்தின் 31 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் நடைபெற்ற போது அஞ்சலியுரையாற்றுகையிலேயே மாவை. சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்தார்.

தந்தை செல்வா நினைவு அறங்காவலர் குழுத்தலைவர் கலாநிதி சு.ஜெபநேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவை சேனாதிராஜா மேலும் உரையாற்றுகையில்;

தந்தை செல்வாவின் நினைவுச் சதுக்கத்தில் நாங்கள் இன்று கூடியிருப்பது மிகுந்த ஆறுதலைத் தருகிறது. இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வு வேண்டுமென்று தந்தை செல்வநாயகம் போராடினார். இதற்காகவே அவர் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்கவுடனும் டட்லி சேனாநாயக்கவுடனும் ஒப்பந்தங்களைச் செய்தார். அவை எதுவும் வெற்றி பெறாத நிலையில் இறுதியில் அவ்வொப்பந்தங்களெல்லாம் சிங்களத் தரப்பால் கிழித்தெறியப்பட்டன.

1972 ஆம் ஆண்டில் அரசியலமைப்பு மாற்றத்தில் கூட தமிழ் மக்களுக்கு சாதகமான திருப்பங்கள் எவையும் ஏற்படவில்லை இந்த நிலையிலேயே 1977 ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமரர்கள் ஜி.ஜி. பொன்னம்பலம், தொண்டமான் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இனப்பிரச்சினைக்குத் தமிழீழத்தைத் தவிர எமக்கு வேறு வழியில்லையென்று தந்தை செல்வா கூறியிருந்தார். அதுதான் எமக்குரிய இறுதித் தீர்வாக இருக்குமென்று இன்றும் நாங்கள் கருதுகின்றோம்.

ஐக்கிய இலங்கைக்குள் தமிழருக்கான உரிமையை வழங்குவதற்கு சிங்கள அரசு தயாராக இல்லை. இந்த நிலையில் தந்தை செல்வாவின் இலட்சியத்தை தீர்க்கதரிசனத்தை வென்றெடுக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.

எங்களிடத்தே இருக்கின்ற சோர்வையும் பிளவுகளையும் கருத்து முரண்பாடுகளையும் நீக்கி எமது இலட்சியத்தை வென்றெடுக்க எல்லோரும் பாடுபட வேண்டுமென்று தந்தை செல்வாவின் நினைவுத் தூபியில் நின்று பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றேன்.

தந்தை செல்வாவின் சமாதியும் நினைவுத் தூபியும் அமைந்துள்ள வளாகம் புனிதமானது. இங்கு ஆயுதப் படையின் நடமாட்டமும் காவலரண்களும் இருப்பதும் அப் புனிதத் தன்மையை மாசுபடுத்துகின்றதென யாழ். மாவட்ட இராணுவத் தளபதிக்குக் கூறியுள்ளேன்.

இவற்றை அகற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், கலாநிதி சு.ஜெபநேசன் ஆகியோரும் அஞ்சலியுரையாற்றினர்.

Email this page Your Opinion Print this page
சகலரையும் புலிகளாக எண்ணி அரசு ஒட்டுமொத்தமாக தமிழர்மீது தாக்குதல்
மடுவை அமைதி வலயமாக்க இறை ஆசி வேண்டி கத்தோலிக்க ஆலயங்களில் விசேட வழிபாடுகள்
மணலாறில் முன்னேற படையினர் முயற்சி
கிழக்குத் தேர்தலின் பின் வடமேல் மாகாண சபைக்கு வாக்களிப்பு நடத்த திட்டம்
சிக்குன்குனியா, டெங்கு நோயாளரால் நிரம்பி வழியும் ஆஸ்பத்திரிகள்
கிழக்கில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டிவிட அரசு முயற்சி
இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்ட நாய்க்குட்டி கடித்த மூவருக்கு விசர்நாய்க்கடி சிகிச்சை
ஈரான் ஜனாதிபதி நாளை விஜயம்
தேவை அதிகரிப்பு, விநியோகத்தில் இறுக்கம் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம்
உணவு, எரிபொருள், மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில் தாமதம்
யாழ். மாவட்ட இராணுவத் தளபதியுடன் மாவை சேனாதிராஜா சந்திப்பு
`இலங்கை மோதல்கள், தொடர்பாக கனடா விழித்தெழ வேண்டியது அவசியம்'
பஸ் மரத்துடன் மோதியதில் 11 பயணிகள் காயம்
மன்னாரில் ஒருவர் சுட்டுக் கொலை
மடுமாதா திருச்சொரூபத்தை கொலு வைப்பது உடனடியாக சாத்தியம் இல்லை என்கிறார் ஆயர்
ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க காயமடைந்து சிகிச்சை பெறும் படையினருடன் சந்திப்பு
`போர் நடவடிக்கைகள் மூலம் ஒருபோதும் எந்தவொரு தீர்வையும் எவரும் காணமுடியாது'
சிலாபம் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் காயம்
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடன் சந்திப்பு
குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை பிரதமர் ரட்ணசிறி நேரில் சென்று பார்வை
மயிலம்பாவெளியில் இளைஞர் சுட்டுக்கொலை
தோட்டத் தொழிலாளர்களுக்கும் 20 சதவீத சம்பளவுயர்வை வழங்க அரசு முன்வர வேண்டும்
ஐ.தே.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு கட்சியை சார்ந்தவர்கள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்
திருமலையில் மலேரியா காய்ச்சல் பரவாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தமிழ் பேசும் சமூகங்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி குளிர்காய நினைப்போருக்கு பாடம் புகட்ட வேண்டும்
தெற்கில் மினிசூறாவளி, இடிமின்னல், மழை ஒருவர் பலி, வீடுகள் சேதம், மின்சாரம் துண்டிப்பு
போலி கடவுச்சீட்டுக்களுடன் 11 பேர் சென்னை விமான நிலையத்தில் தடுத்து வைப்பு
ஐரோப்பியரிடம் இழந்த உரிமையை வென்றெடுக்க அனைத்து தமிழர்களும் ஒருமித்து பாடுபட வேண்டும்
காணாமல்போன பெண் சடலமாக காட்டில் மீட்பு
தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்
மதுரங்குளம் பகுதியில் ஐந்து தமிழர்கள் கைது
வட்டவளை கரோலினா தோட்ட வாகன விபத்தில் இருவர் படுகாயம்
அம்புலன்ஸ் விபத்தில் சிக்கி பயணம் செய்த பெண் பலி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com