பிலியந்தல குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை களுபோவில மற்றும் தேசிய வைத்தியசாலையில் பஸ் குண்டுவெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிட்டு அவர்கள் நலன் குறித்தும் விசாரித்தறிந்துள்ளார்.
அத்துடன், காயமடைந்தவர்களின் நலனில் கூடிய அக்கறை கொண்டு செயற்படுமாறும் உத்தரவிட்டுள்ள பிரதமர் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.