ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கிளாலி மற்றும் முகமாலை மோதல்களில் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் இராணுவ வீரர்களைப் பார்வையிட்டு அவர்களின் சுகநலன் குறித்தும் விசாரித்தறிந்துள்ளார்.
சிங்கப்பூர் சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்க நேற்று சனிக்கிழமை நாடு திரும்பினார்.
விமான நிலையத்திலிருந்து நேரடியாக வைத்தியசாலைக்குச் சென்றார். அவர் கடந்த சில தினங்களில் புலிகளுடனான மோதலில் காயமடைந்து சிகிச்சை பெறும் இராணுவ வீரர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், அவர்களின் நலன்கள் குறித்தும் விசாரித்தறிந்துள்ளார்.
இங்கு ஊடகவியலாளர்களிடம் கருத்துத் வெளியிட்ட ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்காக சேவையாற்றிய ராணுவத்தினரின் நலன் குறித்து விசாரிக்கவே தான் வைத்தியசாலை வந்ததாகக் அவர் குறிப்பிட்டார்.
ரணில் விக்கிரமசிங்க வைத்தியசாலை சென்றிருந்த வேளையில் அவருடன் ஐ.தே.க. எம்.பி. களான ரவி கருணாநாயக்க, டாக்டர் ஜயலத் ஜெயவர்தன ஆகியோரும் சென்றிருந்தனர்.