Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 27, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மடுமாதா திருச்சொரூபத்தை கொலு வைப்பது உடனடியாக சாத்தியம் இல்லை என்கிறார் ஆயர்
[27 - April - 2008] [Font Size - A - A - A]
மடு மாதா தேவாலயப்பகுதி படையினர் வசமிருந்தாலும் அங்கு மடுமாதாவின் திருச் சொரூபத்தை மீண்டும் கொண்டு சென்று கொலு வைப்பதற்கு உடனடியாகச் செல்லமாட்டோம் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி.வண. இராயப்பு யோசப் ஆண்டகை சர்வதேச ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் மடு மாதா தேவாலயப்பகுதியில் இருந்து நான்கு திசைகளிலும் இரண்டு கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் நிற்க வேண்டும் என்றும் அப்படி நின்று கொண்டு உள்ளே வரமாட்டோம் என்றும் உள்ளே நின்றோ அல்லது வெளியே நின்றோ எந்தவிதமான இராணுவ நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டோம் எனவும் உத்தரவாதம் தரவேண்டும்.

அத்துடன், மடுமாதா திருச் சொரூபத்தை மீண்டும் மடு மாதா ஆலயத்துக்குள் கொண்டு வந்து கொலு வைப்பதற்கு ஆட்சேபம் இல்லை என்றும் உத்தரவாதம் தரப்பட வேண்டும்.

அதனைத் தொடர்ந்தே மாதாவின் திருச் சொரூபத்தை மீண்டும் மடுக் கோவிலுக்குக் கொண்டு வரமுடியும் அவ்வாறு உத்தரவு தரப்படாவிட்டால் மீண்டும் மடுக்கோவிலில் இருந்து நாம் இடம்பெயர வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் ஆயர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக இரு தரப்பினரிடமிருந்து உறுதி மொழிகளை நாம் எதிர்பார்த்திருக்கின்றோம்.

மடு மாதா தேவாலயத்துக்கு நான்கு பகுதிகளிலும் இருந்து வீதிகள் வந்து சந்திக்கின்றன. அந்த வீதிகளைப் பயன்படுத்துவதற்கு சகலருக்கும் உரிமையுண்டு அதை நாம் தடை செய்ய முடியாது.

அதனால், யுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த வீதிகளின் ஊடாக மடுத்திருத்தல வட்டாரத்துக்குள் வரவோ அல்லது அப்பகுதிகளில் இருந்து நடவடிக்கை எடுக்கவோ நாம் அனுமதிக்கமாட்டோம்.

எனவே, இவ்வாறான ஒரு சூழலை தாங்களாகவே எமக்கு உருவாக்கித் தர வேண்டும் என்று வாக்குறுதி அளித்தால் நாம் மடுமாதாவின் திருச் சொரூபத்தை மீண்டும் இங்கு கொண்டு வரக்கூடியதாக இருக்கும்.

இரு தரப்பினரும் இதற்கு ஒத்துழைப்புத் தருவார்கள் என்றே நம்புகிறோம் தர வேண்டும் அப்படித் தராவிட்டால் மடுமாதாவின் திருச் சொரூபத்தை மீண்டும் ஆலயத்துக்குக் கொண்டு வந்து ஆராதானைகளை நடத்த முடியத நிலைமையே ஏற்படும்.

இந்த ஆலயத்துக்கு அருகில் உள்ள திருஇருதய ஆண்டவர் ஆலயம் ஷெல் தாக்குதல்களால் சேதமடைந்தாக எமக்குத் தகவல் கிடைத்தது எனவும் ஆயர் குறிப்பிட்டார்.

வேறு அழிவுகள், சேதங்கள் பற்றி எதுவித தகவல்களும் எமக்குக் கிடைக்கவில்லை என ஆயர் மேலும் கூறினார்.

Email this page Your Opinion Print this page
சகலரையும் புலிகளாக எண்ணி அரசு ஒட்டுமொத்தமாக தமிழர்மீது தாக்குதல்
மடுவை அமைதி வலயமாக்க இறை ஆசி வேண்டி கத்தோலிக்க ஆலயங்களில் விசேட வழிபாடுகள்
மணலாறில் முன்னேற படையினர் முயற்சி
கிழக்குத் தேர்தலின் பின் வடமேல் மாகாண சபைக்கு வாக்களிப்பு நடத்த திட்டம்
சிக்குன்குனியா, டெங்கு நோயாளரால் நிரம்பி வழியும் ஆஸ்பத்திரிகள்
கிழக்கில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டிவிட அரசு முயற்சி
இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்ட நாய்க்குட்டி கடித்த மூவருக்கு விசர்நாய்க்கடி சிகிச்சை
ஈரான் ஜனாதிபதி நாளை விஜயம்
தேவை அதிகரிப்பு, விநியோகத்தில் இறுக்கம் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம்
உணவு, எரிபொருள், மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில் தாமதம்
யாழ். மாவட்ட இராணுவத் தளபதியுடன் மாவை சேனாதிராஜா சந்திப்பு
`இலங்கை மோதல்கள், தொடர்பாக கனடா விழித்தெழ வேண்டியது அவசியம்'
பஸ் மரத்துடன் மோதியதில் 11 பயணிகள் காயம்
மன்னாரில் ஒருவர் சுட்டுக் கொலை
மடுமாதா திருச்சொரூபத்தை கொலு வைப்பது உடனடியாக சாத்தியம் இல்லை என்கிறார் ஆயர்
ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க காயமடைந்து சிகிச்சை பெறும் படையினருடன் சந்திப்பு
`போர் நடவடிக்கைகள் மூலம் ஒருபோதும் எந்தவொரு தீர்வையும் எவரும் காணமுடியாது'
சிலாபம் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் காயம்
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடன் சந்திப்பு
குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை பிரதமர் ரட்ணசிறி நேரில் சென்று பார்வை
மயிலம்பாவெளியில் இளைஞர் சுட்டுக்கொலை
தோட்டத் தொழிலாளர்களுக்கும் 20 சதவீத சம்பளவுயர்வை வழங்க அரசு முன்வர வேண்டும்
ஐ.தே.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு கட்சியை சார்ந்தவர்கள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்
திருமலையில் மலேரியா காய்ச்சல் பரவாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தமிழ் பேசும் சமூகங்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி குளிர்காய நினைப்போருக்கு பாடம் புகட்ட வேண்டும்
தெற்கில் மினிசூறாவளி, இடிமின்னல், மழை ஒருவர் பலி, வீடுகள் சேதம், மின்சாரம் துண்டிப்பு
போலி கடவுச்சீட்டுக்களுடன் 11 பேர் சென்னை விமான நிலையத்தில் தடுத்து வைப்பு
ஐரோப்பியரிடம் இழந்த உரிமையை வென்றெடுக்க அனைத்து தமிழர்களும் ஒருமித்து பாடுபட வேண்டும்
காணாமல்போன பெண் சடலமாக காட்டில் மீட்பு
தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்
மதுரங்குளம் பகுதியில் ஐந்து தமிழர்கள் கைது
வட்டவளை கரோலினா தோட்ட வாகன விபத்தில் இருவர் படுகாயம்
அம்புலன்ஸ் விபத்தில் சிக்கி பயணம் செய்த பெண் பலி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com