Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 27, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கிழக்கில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டிவிட அரசு முயற்சி
[27 - April - 2008] [Font Size - A - A - A]
* தமிழ் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் குற்றச்சாட்டு

கிழக்கு மாகாணத்தில் தமிழ்,முஸ்லிம் சமூகங்களை தூண்டிவிட்டு மோதவிடுகின்ற பிரித்தாளும் தந்திரத்தை அரசாங்கம் மேற்கொள்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸும் குற்றஞ்சாட்டியுள்ளன.

பிள்ளையானும், ஹிஸ்புல்லாவும் முதலமைச்சர் பதவியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு இனத்துவேசம் கக்குவதாகவும், எனவே தமிழ்பேசும் சமூகம் ஒன்றுபட்டு இனவாதச் சக்திகளை தோற்கடிக்க முன்வர வேண்டுமெனவும் அவை அழைப்பு விடுத்துள்ளன.

இதுகுறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட எம்.பி.கே.துரைரெட்ணசிங்கம் கூறுகையில்,

தமிழர் மற்றும் முஸ்லிம்களின் தாயகப் பகுதியே கிழக்கு மாகாணமாகும். இரு சமூகங்களும் இங்கு ஒற்றுமையாக வாழ்கின்றன.

பிள்ளையானும், ஹிஸ்புல்லாவும் தாம் முதலமைச்சர்களாக வரவேண்டுமென்பதற்காக தமது பகுதிகளில் மிகமோசமான இனவாதப் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். இரு சமூகங்களுக்கு எதிராக மாறிமாறி கருத்துக்களை முன்வைக்கின்றனர். முதலமைச்சர் பதவியைச் சொல்லியே துவேசம் கக்குகின்றனர்.

இன்றைய ஜனாதிபதி கிழக்கில் இரு சமூகங்களும் பிரிந்து வாழும் பிரித்தாளும் முயற்சியை கையாளுகிறார். இதற்கெதிராக எமது இரு சமூகங்களும் ஒன்றுபடுவது பிரதானமாகும்.

இனவாதச் சக்திகளை தோற்கடிக்க இத்தேர்தலை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். இதற்கு இரு சமூகங்களும் ஒன்றுபடுவது அவசியமாகும். அரசாங்கத் தரப்பின் இனவாதப் பிரசாரங்களுக்கு எவ்வகையிலும் துணைபோக வேண்டாமெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கிறது.

இதுகுறித்து முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹஸன் அலி கூறுகையில்,

இவ்வரசாங்கம் இனவாத சக்திகளின் ஆளுகைக்குட்பட்டுள்ளது. தமிழ், முஸ்லிம் சமூகங்களை தூண்டிவிட்டு மோதவிட்டு அதில் குளிர்காய இனவாதச் சக்திகள் காத்திருக்கின்றன. இரு சமூகங்களிலுமுள்ள சிலர் இனவாதத்தை கக்குவதன் மூலம் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்குகளை குவிக்கலாமென அரசாங்கம் திட்டமிடுகிறது.

இதற்காக கிழக்கில் இரத்தக் களரியை ஏற்படுத்தவும் இவர்கள் தயாராயுள்ளனர். இனவாதம் மூலமே தேர்தலில் வெற்றியடையலாம் என்ற சிந்தனையை தோற்கடிக்கவும், உரிமையை நிலைநாட்டவும் இரு சமூகங்களும் ஒற்றுமை எனும் தியாகத்திற்கு முன்வரவேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் பொறுப்புடன் அழைப்பு விடுக்கிறது.

Email this page Your Opinion Print this page
சகலரையும் புலிகளாக எண்ணி அரசு ஒட்டுமொத்தமாக தமிழர்மீது தாக்குதல்
மடுவை அமைதி வலயமாக்க இறை ஆசி வேண்டி கத்தோலிக்க ஆலயங்களில் விசேட வழிபாடுகள்
மணலாறில் முன்னேற படையினர் முயற்சி
கிழக்குத் தேர்தலின் பின் வடமேல் மாகாண சபைக்கு வாக்களிப்பு நடத்த திட்டம்
சிக்குன்குனியா, டெங்கு நோயாளரால் நிரம்பி வழியும் ஆஸ்பத்திரிகள்
கிழக்கில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டிவிட அரசு முயற்சி
இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்ட நாய்க்குட்டி கடித்த மூவருக்கு விசர்நாய்க்கடி சிகிச்சை
ஈரான் ஜனாதிபதி நாளை விஜயம்
தேவை அதிகரிப்பு, விநியோகத்தில் இறுக்கம் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம்
உணவு, எரிபொருள், மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில் தாமதம்
யாழ். மாவட்ட இராணுவத் தளபதியுடன் மாவை சேனாதிராஜா சந்திப்பு
`இலங்கை மோதல்கள், தொடர்பாக கனடா விழித்தெழ வேண்டியது அவசியம்'
பஸ் மரத்துடன் மோதியதில் 11 பயணிகள் காயம்
மன்னாரில் ஒருவர் சுட்டுக் கொலை
மடுமாதா திருச்சொரூபத்தை கொலு வைப்பது உடனடியாக சாத்தியம் இல்லை என்கிறார் ஆயர்
ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க காயமடைந்து சிகிச்சை பெறும் படையினருடன் சந்திப்பு
`போர் நடவடிக்கைகள் மூலம் ஒருபோதும் எந்தவொரு தீர்வையும் எவரும் காணமுடியாது'
சிலாபம் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் காயம்
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடன் சந்திப்பு
குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை பிரதமர் ரட்ணசிறி நேரில் சென்று பார்வை
மயிலம்பாவெளியில் இளைஞர் சுட்டுக்கொலை
தோட்டத் தொழிலாளர்களுக்கும் 20 சதவீத சம்பளவுயர்வை வழங்க அரசு முன்வர வேண்டும்
ஐ.தே.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு கட்சியை சார்ந்தவர்கள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்
திருமலையில் மலேரியா காய்ச்சல் பரவாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தமிழ் பேசும் சமூகங்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி குளிர்காய நினைப்போருக்கு பாடம் புகட்ட வேண்டும்
தெற்கில் மினிசூறாவளி, இடிமின்னல், மழை ஒருவர் பலி, வீடுகள் சேதம், மின்சாரம் துண்டிப்பு
போலி கடவுச்சீட்டுக்களுடன் 11 பேர் சென்னை விமான நிலையத்தில் தடுத்து வைப்பு
ஐரோப்பியரிடம் இழந்த உரிமையை வென்றெடுக்க அனைத்து தமிழர்களும் ஒருமித்து பாடுபட வேண்டும்
காணாமல்போன பெண் சடலமாக காட்டில் மீட்பு
தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்
மதுரங்குளம் பகுதியில் ஐந்து தமிழர்கள் கைது
வட்டவளை கரோலினா தோட்ட வாகன விபத்தில் இருவர் படுகாயம்
அம்புலன்ஸ் விபத்தில் சிக்கி பயணம் செய்த பெண் பலி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com