Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 27, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சகலரையும் புலிகளாக எண்ணி அரசு ஒட்டுமொத்தமாக தமிழர்மீது தாக்குதல்
[27 - April - 2008] [Font Size - A - A - A]
* அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன்

இலங்கை அரசின் போர் நடவடிக்கைகளுக்கு வடபோர் முனையிலும் மன்னார் களமுனைகளிலும் எம்மால் தகுந்த பதிலடி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பதிலடி இலங்கையரசையும் அதன் இராணுவத்தையும் ஆட்டம்காணவைத்துள்ளதென விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த நடேசன் மேலும் கூறியதாவது;

"இலங்கை அரசைப் பொறுத்த வரையில் இன்று எல்லோரையுமே புலிகளாக எண்ணி விமானத் தாக்குதலை நடத்தி வருகிறது.

இலங்கை அரசுக்கு புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான வேறுபாட்டைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. புலிகளாக எண்ணி தாக்குதலை ஒட்டுமொத்தமாக தமிழர்கள் மீது நடத்தும் இலங்கை அரசுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய நிலையில் உள்ளோம்.

விடுதலைப் போராட்டம் என்பது ஆயுதப் பயன்பாட்டில் மட்டும் தங்கியிருப்பது அல்ல. மக்கள் என்ற மாபெரும் சக்தியிலேயே தங்கியுள்ளது. உலகில் மக்கள் ஆதரவுமிகுந்த விடுதலைப் போராட்டங்கள்தான் விடுதலை பெற்று நாடுகளை அமைத்துள்ளன. நாமும் வல்லரசுகளின் துணையுடன் எமக்கு எதிராக போர் புரிந்துகொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கின்றோம்.

இலங்கை அரசு இளைய தலைமுறையை அழித்து தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க வேண்டும் என்பதில் கங்கணம் கட்டி செயற்பட்டு வருகின்றது. அதன் வெளிப்பாடுகளாகவே பல முனைகளில் எம் மண் மீது வன்பறிப்புப் போரைத் தொடுத்துள்ளது.

அரசின் கொடிய போரை கைகளைக் கட்டிக்கொண்டு தமிழராகிய நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தமிழர்களுக்கு எதிராக போரைத் தொடுப்பதற்கு ஆசிரியர்களும் ஏன் பௌத்த பிக்குகளும் படைகளுக்கு ஆட்களைத் திரட்டுகின்றனர்.

இந்தநிலையில் தமிழர்கள் நாம் ஓரணியில் திரண்டு போராட வேண்டிய நிலையில் உள்ளோம். எமக்குப் பெரிய பலம் மாணவர் சக்தி தான். உலகிலேயே பல விடுதலைப் போராட்டங்களில், புரட்சிகள் நடைபெற்ற தேசங்களில் மாணவர்களே போராட்டங்களை முன்னின்று நடத்தி வெற்றியும் பெற்றிருக்கின்றனர்.

இந்தநிலையில் மாணவர் சக்தியை கொடிய போரைத் திணித்துள்ள அரசின் செயற்பாட்டிற்கு எதிராக பயன்படுத்த வேண்டும். அரசின் போர் நடவடிக்கைகளுக்கு வடபோர் முனையிலும் மன்னார் களமுனைகளிலும் தகுந்த பதிலடி வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பதிலடி அரசை ஆட்டம் காண வைத்துள்ளது.

எமது தலைவரின் தலைமையில் தமிழர்களின் வீரமரபு போர்க்களங்களில் வெளிப்பட்டு வருகின்றன. போரைத் திணித்துள்ள அரசுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடி சகல அடக்குமுறைகளையும் உடைத்து எறிய வேண்டும்".

Email this page Your Opinion Print this page
சகலரையும் புலிகளாக எண்ணி அரசு ஒட்டுமொத்தமாக தமிழர்மீது தாக்குதல்
மடுவை அமைதி வலயமாக்க இறை ஆசி வேண்டி கத்தோலிக்க ஆலயங்களில் விசேட வழிபாடுகள்
மணலாறில் முன்னேற படையினர் முயற்சி
கிழக்குத் தேர்தலின் பின் வடமேல் மாகாண சபைக்கு வாக்களிப்பு நடத்த திட்டம்
சிக்குன்குனியா, டெங்கு நோயாளரால் நிரம்பி வழியும் ஆஸ்பத்திரிகள்
கிழக்கில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டிவிட அரசு முயற்சி
இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்ட நாய்க்குட்டி கடித்த மூவருக்கு விசர்நாய்க்கடி சிகிச்சை
ஈரான் ஜனாதிபதி நாளை விஜயம்
தேவை அதிகரிப்பு, விநியோகத்தில் இறுக்கம் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம்
உணவு, எரிபொருள், மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில் தாமதம்
யாழ். மாவட்ட இராணுவத் தளபதியுடன் மாவை சேனாதிராஜா சந்திப்பு
`இலங்கை மோதல்கள், தொடர்பாக கனடா விழித்தெழ வேண்டியது அவசியம்'
பஸ் மரத்துடன் மோதியதில் 11 பயணிகள் காயம்
மன்னாரில் ஒருவர் சுட்டுக் கொலை
மடுமாதா திருச்சொரூபத்தை கொலு வைப்பது உடனடியாக சாத்தியம் இல்லை என்கிறார் ஆயர்
ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க காயமடைந்து சிகிச்சை பெறும் படையினருடன் சந்திப்பு
`போர் நடவடிக்கைகள் மூலம் ஒருபோதும் எந்தவொரு தீர்வையும் எவரும் காணமுடியாது'
சிலாபம் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் காயம்
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடன் சந்திப்பு
குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை பிரதமர் ரட்ணசிறி நேரில் சென்று பார்வை
மயிலம்பாவெளியில் இளைஞர் சுட்டுக்கொலை
தோட்டத் தொழிலாளர்களுக்கும் 20 சதவீத சம்பளவுயர்வை வழங்க அரசு முன்வர வேண்டும்
ஐ.தே.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு கட்சியை சார்ந்தவர்கள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்
திருமலையில் மலேரியா காய்ச்சல் பரவாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தமிழ் பேசும் சமூகங்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி குளிர்காய நினைப்போருக்கு பாடம் புகட்ட வேண்டும்
தெற்கில் மினிசூறாவளி, இடிமின்னல், மழை ஒருவர் பலி, வீடுகள் சேதம், மின்சாரம் துண்டிப்பு
போலி கடவுச்சீட்டுக்களுடன் 11 பேர் சென்னை விமான நிலையத்தில் தடுத்து வைப்பு
ஐரோப்பியரிடம் இழந்த உரிமையை வென்றெடுக்க அனைத்து தமிழர்களும் ஒருமித்து பாடுபட வேண்டும்
காணாமல்போன பெண் சடலமாக காட்டில் மீட்பு
தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்
மதுரங்குளம் பகுதியில் ஐந்து தமிழர்கள் கைது
வட்டவளை கரோலினா தோட்ட வாகன விபத்தில் இருவர் படுகாயம்
அம்புலன்ஸ் விபத்தில் சிக்கி பயணம் செய்த பெண் பலி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com