இலங்கையில் முதல் தடவையாக நடைபெறும் ஆசிய தலைவர் கிண்ணத்துக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் இலங்கையின் சார்பாகப் பங்குபற்றும் ரட்ணம் கழகம் அரை இறுதி ஆட்டத்துக்கு தெரிவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இச்சுற்றுப் போட்டியில் ரட்ணம் கழகம் பங்குபற்றிய 1 ஆவx போட்டியில் பூட்டான் ரான்ஸ் போட் யுனைட்டெட் கழகத்தை மிக இலகுவாக 7-1 கோல்களினால் வெற்றி பெற்றது. கடந்த வருடம் நடைபெற்ற மேற்படி சுற்றுப் போட்டியிலும் ரட்ணம் கழகம் பூட்டான் அணியை 6-0 கோல்களினால் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
ரட்ணம் கழகம் தனது 2 ஆவது போட்டியில் மியன்மார் அணியை நிச்சயம் வெற்றி கொள்ளும் என்று அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.
இன்று 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ரட்ணம் கழகம் துர்மெனிஸ்தான் அணியைச் சந்திக்கின்றது. துர்மெனிஸ்தான் அணி தனது 1 ஆவது போட்டியில் மியன்மார் அணியிடம் 1-0 கோலினால் தோல்வி அடைந்தது. இதன் அடிப்படையில் துர்மெனிஸ்தான் அணியை ரட்ணம் கழகம் இலகுவாக வெற்றிபெறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று 4 மணிக்கு நடைபெற இருக்கும் மற்றொரு ஆட்டத்தில் மியன்மார் அணி பூட்டான் அணியைச் சந்திக்கின்றது.
இச்சுற்றுப் போட்டியில் வெற்றிபெறும் அணியும் கூடிய புள்ளிகளைப் பெறும் 2 ஆவது அணியுமே அரை இறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.