Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 28, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
மொரோக்கோவில் தீ விபத்து 55 பேர் பலி12 பேர் படுகாயம்
[28 - April - 2008] [Font Size - A - A - A]
மொரோக்கோவின் கஸாபலன்கா நகரில் இடம்பெற்ற தீ விபத்தொன்றில் 55 பேர் பலியாகியுள்ளனர்.

இங்குள்ள மெத்தை தயாரிப்பு தொழிற்சாலையொன்றின் கீழ்த்தளத்தில் பரவிய தீயினால் மேலும் 12 பேர் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இத் தொழிற்சாலையில் இரசாயனப் பொருட்கள் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்ததன் காரணமாக விரைவில் பரவிய தீயைக் கட்டுப்படுத்தவதற்காக சுமார் நூற்றுக்கும் அதிகமான தீயணைப்புப்படை வீரர்கள் தீயுடன் போராடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

கட்டடத்தின் உட்பகுதியை சென்றடைவதற்கு தீயணைப்பு படைவீரர்களுக்கு பலமணிநேரம் எடுத்ததாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் விபத்து இடம்பெற்ற சமயம் 100 தொழிலாளர்கள் வரையில் இத்தொழிற்சாலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Email this page Your Opinion Print this page
சிம்பாப்வே ஜனாதிபதிமுகாபே தோல்வியை தழுவும் நிலை
கொலை முயற்சியிலிருந்து காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார் ஆப்கான் ஜனாதிபதி
ஆப்கான் ஜனாதிபதி அமெரிக்கா, பிரிட்டன் மீது கடும் குற்றச்சாட்டு
பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்புடன் எவ்வித பிரச்சினையுமில்லை என்கிறார் பிரதமர் கிலானி
மொரோக்கோவில் தீ விபத்து 55 பேர் பலி12 பேர் படுகாயம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com