Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 28, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
ஆப்கான் ஜனாதிபதி அமெரிக்கா, பிரிட்டன் மீது கடும் குற்றச்சாட்டு
[28 - April - 2008] [Font Size - A - A - A]
அமெரிக்காவும் பிரிட்டனும் ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்துள்ளது போல் நடந்து கொள்வதுடன், அரசை நிர்மூலமாக்கி அவர்களது கொள்கைகளை எங்கள் மீது திணிக்க முயற்சிக்கின்றன என அந்நாட்டு ஜனாதிபதி ஹமீட் கார்சாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நியூயோர்க் ரைம்ஸ் நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் இதில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

சந்தேகத்திற்கிடமான தீவிரவாதிகள் என்று கூறி அப்பாவிகளை கைது செய்வதை அமெரிக்கப் படைகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். தலிபான்களைத் தேடுவதாகக் கூறி மக்களை துன்புறுத்தி வருகிறது அமெரிக்கா.

தலிபான்களும், அல்-ஹைடா தீவிரவாதிகளும் பாகிஸ்தானில் தான் உள்ளனர். தீவிரவாதிகளைக் கண்டுபிடிப்பதாகக் கூறி ஆப்கானிஸ்தான் கிராமங்களை அமெரிக்கப் படைகள் சேதப்படுத்தி வருகிறது. உண்மையான தலிபான்கள் கிராமங்களில் இல்லை. அவர்கள் பாகிஸ்தானில்தான் பதுங்கியுள்ளனர்.

தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடத்தை அமெரிக்கப் படைகளால் நெருங்கவே முடியவில்லை. தீவிரவாதத்தை ஒழிப்பதாகக் கூறி பாகிஸ்தானில் அமைதியைத் தேட வைத்து விட்டது அமெரிக்கா. அடுத்ததாக ஆப்கானிஸ்தானிலும் அமைதியை ஏற்படுத்துவதாகக் கூறி தனது வேலையை ஆரம்பித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
சிம்பாப்வே ஜனாதிபதிமுகாபே தோல்வியை தழுவும் நிலை
கொலை முயற்சியிலிருந்து காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார் ஆப்கான் ஜனாதிபதி
ஆப்கான் ஜனாதிபதி அமெரிக்கா, பிரிட்டன் மீது கடும் குற்றச்சாட்டு
பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்புடன் எவ்வித பிரச்சினையுமில்லை என்கிறார் பிரதமர் கிலானி
மொரோக்கோவில் தீ விபத்து 55 பேர் பலி12 பேர் படுகாயம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com