Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 28, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல் வர்த்தகர்களால் பதுக்கி வைக்கப்படுவதாக முறையீடு
[28 - April - 2008] [Font Size - A - A - A]
நெல் ஆலை முதலாளிமார் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யும் நெல்லைத் தமது களஞ்சிய சாலைகளின்றி நெல்லை விற்பனை செய்யும் விவசாயிகளின் வீடுகளிலும் அவர்களின் களஞ்சிய அறைகளிலும் பதுக்கி வைத்திருப்பதாக கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தாம் முதலாளிமார்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாகி தமது வீடுகளிலும் தமது உறவினர்களது வீடுகளிலும் விற்பனை செய்யப்பட்ட நெல்லைக் களஞ்சியப் படுத்த நெல் ஆலை முதலாளிகளுக்கு விவசாயிகள் உடந்தையாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

நெல் ஆலை முதலாளிமார் விவசாயிகளிடம் கொள்வனவு செய்யும் நெல்லை விவசாயிகளிடமே களஞ்சியப் படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் நெல்லைப் பதுக்கும் நடவடிக்கைகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திடீர் பரிசோதனைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் விவசாயிகளின் வீடுகளைப் பரிசோதிக்க வருவதில்லை. அவ்வாறு வந்தாலும் அவை தமது வயல்களில் விளைந்த நெல் எனவும் அதனை தமது வீட்டில் களஞ்சியப்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

விவசாய நடவடிக்கைகளின் பொருட்டு விவசாயிகளுக்கு ஆரம்பச் செலவுகளையும் வழங்கி அதன் பின்னர் அறுவடை செலவுகளையும் நெல் ஆலை முதலாளிகள் வழங்கிவருகின்றனர்.

அவர்களது வேறு செலவிற்கென கடனாகவும் பணம் கொடுக்கின்றனர். இதனால் விவசாயிகள் நெல்ஆலை முதலாளிமாருக்கு பதுக்கல் விடயத்தில் ஒத்துழைத்தல் என்பது தவிர்க்க முடியாததெனவும் கூறப்படுகிறது.

இதே வேளையில் தம்புள்ள பிரதேசத்து நெல் ஆலை உரிமையாளர்கள் தமது களஞ்சியசாலைகளில் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான நெல் மூட்டைகளைப் பதுக்கி வைத்திருந்தமையை நுகர்வோர் பாதுகாப்புக் குழுவினர் பாதுகாப்புப் படையினர் சிலரின் ஒத்துழைப்புடன் அண்மையில் கண்டறிந்தனர்.

குறித்த நெல் மூடைகளை அரிசியாக்கி இரண்டு மாதகாலத்தினுள் விற்பனைக்கு விடப்பட வேண்டும் என்ற காலக்கெடு விதிக்கப்பட்டமையும், நிபந்தனை விதிக்கப்பட்டு ஆலை உரிமையாளர்கள் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Email this page Your Opinion Print this page
இலங்கை, ஈரான் ஜனாதிபதிகள் இன்று இரவு இருதரப்பு பேச்சு
யுத்தத்துக்கு இந்தியா 1100 கோடிரூபா இலங்கை அரசாங்கத்திற்கு நிதி உதவி
8 இராணுவத்தினர், 35 புலிகள் மணலாறு மோதலில் பலி; 45 பேர் படுகாயம்
கட்டுநாயக்காவில் தேடுதல் 24 பேர் கைது
10 இலட்சம் மக்கள் கடும் பஞ்சத்தை எதிர்கொள்ளும் அவலம்
மேற்குலகை சாடுகிறார் கலாநிதி ஹோகண
மன்னார் குரு முதல்வர் மடுவுக்கு சென்றார்
பயணிகள் பஸ் மீதான குண்டுத்தாக்குதலை தடுத்து நிறுத்துவது குறித்து உயர்மட்ட மாநாடு
சமாதானப் பேச்சுவார்த்தை முறிவடைந்த 2 1/2 வருடங்களில் 9 ஆயிரம் படையினர் பலி
அமைச்சர் ஜெயராஜ் படுகொலைச் சம்பவம் சிங்களவர்களுக்கும் தொடர்புள்ளதாக தெரிவிப்பு
கட்டானை தொகுதி சு.க. மத்திய குழு தலைவியாக ஜெயராஜின் மனைவி
இலங்கை - இந்திய ஒப்பந்தம் முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்டுள்ள அடிமைச்சாசனம்
தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி மேதினமன்று தோட்டங்களில் பிரார்த்தனை நடத்துவதற்கு ஏற்பாடு
ஐ.தே.க. வேட்பாளர்களை ஆதரிக்கும் பிரசாரம் கிழக்கில் சூடுபிடிப்பு
விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல் வர்த்தகர்களால் பதுக்கி வைக்கப்படுவதாக முறையீடு
இரத்தினபுரி மாவட்டத்தில் சிக்குன் குன்யாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள்
டாக்டர்கள், தாதிமாருக்கு வைரஸ் காய்ச்சல்
மஸ்கெலியாவில் திடீர் சுற்றிவளைப்பு; மூவர் கைது
கல்முனை மாநகராட்சி மன்றத்தின் புதிய உறுப்பினர்களாக ஐவர் பதவியேற்பு
இராணுவ வீரரின் வீட்டில் யன்னல் உடைத்து கொள்ளை
யக்கலை சந்தையில் இளைஞர் சுட்டுக்கொலை
குளவி கொட்டியதில் அறுவர் படுகாயம்
மகியங்கனை வாகன விபத்தில் மூவர் படுகாயம்
கதிர்காமம் முருகன் ஆலய திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு
ஏழு சடலங்கள் வன்னிக்கு அனுப்பிவைப்பு
பிலியந்தல பஸ் குண்டுவெடிப்பு சம்பவம் 19 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை
ஓட்டுமடத்தில் உடல் கருகியநிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு
அமைச்சர் ஜெயராஜ் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை அர்ப்பணிப்புடன் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வேன்
மடுத்தேவாலய பிரதேசத்திற்கு நேற்று அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ விஜயம்
திருகோணமலை நகரில் கிளைமோர் குண்டு மீட்பு
சர்வதேச இளைஞர்கள் தினம் - 2008 சான்றிதழ் வழங்குவதற்கான விபரம் கோரல்
அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் எழுச்சிப் பேராளர் மாநாடு
அப்புத்தளை வர்த்தகரினால் தாக்குதலுக்குள்ளான இரு தோட்டத் தொழிலாளர் வைத்தியசாலையில் அனுமதி
விரும்பாத தேர்தல் முடிவை முஸ்லிம் சமூகத்தின் மீது திணிக்க சதி நடப்பதாக கூறுகிறார் ஹசன் அலி
இலங்கை பிரச்சினை தொடர்பான தமிழக சட்டசபையின் தீர்மானம் காலத்தின் கட்டாயம்
வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு மாவட்ட நீதிவான் பாராட்டி கௌரவிப்பு
இறங்குதுறைப்பக்கமாகவிருந்து இராணுவத்தினர் சுட்டவாறு வந்தனர் அக் ஷன்பாம் ஊழியரை எம்மோடு வருமாறு கேட்டபோதும் வரவில்லை
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கட்சி வெற்றியை எவராலும் தடுக்க முடியாது
முஸ்லிம் தலைமைகள் பதவிமோகத்தை கைவிட்டு ஜனாதிபதியின் தலைமையின் கீழ் அணிதிரள வேண்டும்
அரச அதிபரால் நடத்தப்பட்ட கிழக்கு தேர்தல் தொடர்பான உயர்மட்ட மாநாடு
`முஸ்லிம் சமூகத்தை பிளவுபடுத்தும் முயற்சியிலேயே இன்றைய அரசு மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றது
கிழக்கு மாகாண முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரை நியமிக்க அனைவரும் ஒன்றுபட்டு வாக்களிக்க வேண்டும்
கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான தபால் வாக்களிப்பு இன்று ஆரம்பம்
சாரதியின் கழுத்தை வெட்டி காயப்படுத்தி முச்சக்கர வண்டியை கடத்த முயற்சி
கோணமொட்டாவ தோட்டத்தில் வெட்டப்படும் மரங்களால் தொழிலாளர்கள் தொழிலை இழக்கும் அபாயம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com