Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 28, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
10 இலட்சம் மக்கள் கடும் பஞ்சத்தை எதிர்கொள்ளும் அவலம்
[28 - April - 2008] [Font Size - A - A - A]
உணவுப் பொருள் பற்றாக்குறையாலும் அத்தியாவசியப் பாவனைப் பொருட்களின் விலை அதிகரிப்பாலும் இலங்கையில் 10 இலட்சம் பேர் கடுமையான பஞ்சத்தை எதிர்நோக்குவதாக உலக உணவுத் திட்டம் எச்சரித்திருக்கிறது.

உள்நாட்டு யுத்தத்தால் 10 இலட்சத்துக்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உலக உணவுத் திட்டத்தின் நிவாரணத்திலேயே தங்கியிருக்கின்றனர். இவர்களில் அநேகமானோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களும் அண்மையில் மீளக்குடியேற்றப்பட்டவர்களுமாவார். தற்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பகுதிகளில் இவர்கள் இடம்பெயர்ந்தும் மீளக்குடியமர்த்தப்பட்டும் உள்ளனர் என்று உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி முகமட் சாலிகீன் தெரிவித்திருக்கிறார்.

2008 இற்கான எமது நடவடிக்கைகளுக்காக 64 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் உணவு விநியோகத்திற்கான செலவினம் 50 சதவீதத்தால் அதிகரித்துவிட்டது. இதனால் கொழும்பிலுள்ள உலக உணவுத் திட்டத்தின் தலைமை அலுவலகம் பாரிய நெருக்கடியை எதிர்நோக்குகின்றது.

உணவுப் பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு மேலும் பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது. இந்தப் பிரச்சினை இலங்கைக்கு மட்டும் உரியதொன்றல்ல. முழு உலகுமே இத்தகைய மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்று வெள்ளிக்கிழமை கொழும்பில் ஊடகங்களுக்கு உலக உணவுத் திட்ட வதிவிட பிரதிநிதி முகமட் சாலிகீன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் உள்ளடங்கலாக, வடபகுதிக்கு 9200 தொன் உணவுப் பொருட்கள் தேவைப்படுகின்றன. ஆனால் 6 ஆயிரம் தொன் பொருட்களையே எம்மால் அனுப்ப முடிகிறது. தற்போதைய நெருக்கடி தொடருமானால் எமது நடவடிக்கைகளுக்கு சிக்கல்கள் ஏற்படும்.

உலக உணவுத் திட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ளனர். இவர்கள் நேரடியாகப் பாதிப்புக்குள்ளாவார்கள். ஏற்கனவே உள்நாட்டு யுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவுப் பொருட்கள் அவர்களுக்கு கிடைக்காவிடின் மோசமான பாதிப்புக்கு அவர்கள் உள்ளாவார்கள். போஷாக்கின்மையின் தாக்கம் உடனடியாக தெரியவராவிடினும் ஓரிரு வருடங்களில் அதன் பாதிப்பு வெளிவரும்.

உதவி வழங்கும் நாடுகளிடமும் சர்வதேச சமூகத்திடமும் இது தொடர்பாக நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இந்தப் பிரச்சினையின் பாரதூரத் தன்மையை புரிந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவி செய்யுமாறும் நாம் கோரிக்கை விடுத்திருக்கிறோம். அதேநேரம் உணவுப் பொருட்களுக்கு உத்தரவாத விலையை இலங்கை அரசாங்கம் அறிவித்ததை நாம் வரவேற்கிறோம். மக்களின் வருமானம் அதிகரிக்கப்படாவிடின் செலவினம் 50 சதவீதத்தால் அதிகரிக்கும். அதனால் பாரதூரமான பிரச்சினைகள் ஏற்படும். இதற்கு ஒரே வழியாக விவசாயத்துறையை மேம்படுத்தி சுயதேவையைப் பூர்த்தி செய்வதே காணப்படுகிறது. இந்த நாட்டுக்கு இது சாத்தியமானதாகும். ஏனெனில் மண் வளமும் நீர் வளமும் இங்கு தேவையான அளவுக்கு உள்ளது. அத்துடன் விவசாயிகள் தமது உற்பத்திகளை நியாய விலையில் சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகளை இலங்கை அரசாங்கம் தோற்றுவிக்க வேண்டும் என்றும் சாலிகீன் தெரிவித்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
இலங்கை, ஈரான் ஜனாதிபதிகள் இன்று இரவு இருதரப்பு பேச்சு
யுத்தத்துக்கு இந்தியா 1100 கோடிரூபா இலங்கை அரசாங்கத்திற்கு நிதி உதவி
8 இராணுவத்தினர், 35 புலிகள் மணலாறு மோதலில் பலி; 45 பேர் படுகாயம்
கட்டுநாயக்காவில் தேடுதல் 24 பேர் கைது
10 இலட்சம் மக்கள் கடும் பஞ்சத்தை எதிர்கொள்ளும் அவலம்
மேற்குலகை சாடுகிறார் கலாநிதி ஹோகண
மன்னார் குரு முதல்வர் மடுவுக்கு சென்றார்
பயணிகள் பஸ் மீதான குண்டுத்தாக்குதலை தடுத்து நிறுத்துவது குறித்து உயர்மட்ட மாநாடு
சமாதானப் பேச்சுவார்த்தை முறிவடைந்த 2 1/2 வருடங்களில் 9 ஆயிரம் படையினர் பலி
அமைச்சர் ஜெயராஜ் படுகொலைச் சம்பவம் சிங்களவர்களுக்கும் தொடர்புள்ளதாக தெரிவிப்பு
கட்டானை தொகுதி சு.க. மத்திய குழு தலைவியாக ஜெயராஜின் மனைவி
இலங்கை - இந்திய ஒப்பந்தம் முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்டுள்ள அடிமைச்சாசனம்
தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி மேதினமன்று தோட்டங்களில் பிரார்த்தனை நடத்துவதற்கு ஏற்பாடு
ஐ.தே.க. வேட்பாளர்களை ஆதரிக்கும் பிரசாரம் கிழக்கில் சூடுபிடிப்பு
விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல் வர்த்தகர்களால் பதுக்கி வைக்கப்படுவதாக முறையீடு
இரத்தினபுரி மாவட்டத்தில் சிக்குன் குன்யாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள்
டாக்டர்கள், தாதிமாருக்கு வைரஸ் காய்ச்சல்
மஸ்கெலியாவில் திடீர் சுற்றிவளைப்பு; மூவர் கைது
கல்முனை மாநகராட்சி மன்றத்தின் புதிய உறுப்பினர்களாக ஐவர் பதவியேற்பு
இராணுவ வீரரின் வீட்டில் யன்னல் உடைத்து கொள்ளை
யக்கலை சந்தையில் இளைஞர் சுட்டுக்கொலை
குளவி கொட்டியதில் அறுவர் படுகாயம்
மகியங்கனை வாகன விபத்தில் மூவர் படுகாயம்
கதிர்காமம் முருகன் ஆலய திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு
ஏழு சடலங்கள் வன்னிக்கு அனுப்பிவைப்பு
பிலியந்தல பஸ் குண்டுவெடிப்பு சம்பவம் 19 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை
ஓட்டுமடத்தில் உடல் கருகியநிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு
அமைச்சர் ஜெயராஜ் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை அர்ப்பணிப்புடன் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வேன்
மடுத்தேவாலய பிரதேசத்திற்கு நேற்று அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ விஜயம்
திருகோணமலை நகரில் கிளைமோர் குண்டு மீட்பு
சர்வதேச இளைஞர்கள் தினம் - 2008 சான்றிதழ் வழங்குவதற்கான விபரம் கோரல்
அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் எழுச்சிப் பேராளர் மாநாடு
அப்புத்தளை வர்த்தகரினால் தாக்குதலுக்குள்ளான இரு தோட்டத் தொழிலாளர் வைத்தியசாலையில் அனுமதி
விரும்பாத தேர்தல் முடிவை முஸ்லிம் சமூகத்தின் மீது திணிக்க சதி நடப்பதாக கூறுகிறார் ஹசன் அலி
இலங்கை பிரச்சினை தொடர்பான தமிழக சட்டசபையின் தீர்மானம் காலத்தின் கட்டாயம்
வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு மாவட்ட நீதிவான் பாராட்டி கௌரவிப்பு
இறங்குதுறைப்பக்கமாகவிருந்து இராணுவத்தினர் சுட்டவாறு வந்தனர் அக் ஷன்பாம் ஊழியரை எம்மோடு வருமாறு கேட்டபோதும் வரவில்லை
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கட்சி வெற்றியை எவராலும் தடுக்க முடியாது
முஸ்லிம் தலைமைகள் பதவிமோகத்தை கைவிட்டு ஜனாதிபதியின் தலைமையின் கீழ் அணிதிரள வேண்டும்
அரச அதிபரால் நடத்தப்பட்ட கிழக்கு தேர்தல் தொடர்பான உயர்மட்ட மாநாடு
`முஸ்லிம் சமூகத்தை பிளவுபடுத்தும் முயற்சியிலேயே இன்றைய அரசு மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றது
கிழக்கு மாகாண முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரை நியமிக்க அனைவரும் ஒன்றுபட்டு வாக்களிக்க வேண்டும்
கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான தபால் வாக்களிப்பு இன்று ஆரம்பம்
சாரதியின் கழுத்தை வெட்டி காயப்படுத்தி முச்சக்கர வண்டியை கடத்த முயற்சி
கோணமொட்டாவ தோட்டத்தில் வெட்டப்படும் மரங்களால் தொழிலாளர்கள் தொழிலை இழக்கும் அபாயம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com