Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 28, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
இலங்கை, ஈரான் ஜனாதிபதிகள் இன்று இரவு இருதரப்பு பேச்சு
[28 - April - 2008] [Font Size - A - A - A]
-எம்.ஏ.எம்.நிலாம்-

ஈரான் இஸ்லாமிய குடியரசு ஜனாதிபதி மஹ்மூத் அஹமத் நிஜாத் தமது ஆசியப் பயணத்தின் ஆரம்ப கட்டமாக இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை மாலை இலங்கை வருகின்றார். அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஈரானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளையில் அவரால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றே ஈரான் ஜனாதிபதி இன்று இங்கு வருகின்றார்.

இலங்கை ஜனாதிபதியின் ஈரான் விஜயத்தின்போது இரு நாடுகளுக்குமிடையில் எட்டு உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டன. உமாஓயா அபிவிருத்தித் திட்டம் இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பை அதிகரிக்கும் விதத்தில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயப்படுத்துதல், நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்தல், ஈரான் அரச வானொலி இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கிடையிலான ஒத்துழைப்பை அதிகரித்தல் , இருநாடுகளுக்குமிடையிலான கடல்வழி வர்த்தக உடன்படிக்கை என்பன இவற்றில் பிரதானமானவையாகும்.

இவற்றில் உமாஓயா அபிவிருத்தித் திட்டத்தையும் சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நவீனமயப்படுத்தும் திட்டத்தையும் ஈரான் ஜனாதிபதி அஹமத் நிஜாத் , நாளை 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கவிருக்கின்றார்.

இந்த ஆரம்ப வைபவங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பிரசன்னமாவார்.

உமா ஓயா அபிவிருத்தித் திட்டத்துக்கு ஈரான் 2500 கோடி ரூபாவை உதவியாக வழங்குகிறது.

அத்துடன் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய நவீனமயப்படுத்தலுக்கும் ஈரான் முழு அளவில் நிதியுதவி அளிக்கின்றது.

இந்த இரண்டு பிரதான நிகழ்வுகளுடன் ஈரான் ஜனாதிபதி வேறு முக்கிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவிருக்கின்றார். இவற்றில் நாளை 29 ஆம் திகதி காலை 7 மணிக்கு கொழும்பு கலதாரி ஹோட்டலில் இலங்கையிலுள்ள மத அமைப்புகளின் தலைவர்களுடனான சந்திப்பு இடம்பெறவிருக்கின்றது.

இன்று மாலை ஈரான் ஜனாதிபதி கொழும்பு வந்தடைந்ததும் இரவு 7.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனான மரியாதை நிமித்தமான சந்திப்பு இடம்பெறும் . இரவு 8 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இருதரப்புப் பேச்சுவார்த்தை இடம்பெறவிருக்கின்றது.

இரவு ஒன்பது மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இராப் போசனவிருந்து வைபவம் இடம்பெறும்.

நாளை 29 ஆம் திகதி காலை 7.30 மணிக்கு ஹோட்டல் கலதாரியில் மதத் தலைவர்களுடனான சந்திப்பு.

காலை 9 மணிக்கு சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய நவீனமயப்படுத்தும் திட்டத்தை ஆரம்பிக்கும் வைபவத்தில் கலந்து கொள்வார்.

பகல் 11 மணிக்கு உமாஓயா அபிவிருத்தித் திட்ட ஆரம்ப வைபவத்தில் கலந்து கொள்வதற்காக வெள்ளவாயவுக்கு புறப்பட்டுச் செல்வார்.

நாளை பிற்பகல் 12.45 மணிக்கு ஈரான் ஜனாதிபதி தமது இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு புதுடில்லிக்கு பயணமாவார்.

Email this page Your Opinion Print this page
இலங்கை, ஈரான் ஜனாதிபதிகள் இன்று இரவு இருதரப்பு பேச்சு
யுத்தத்துக்கு இந்தியா 1100 கோடிரூபா இலங்கை அரசாங்கத்திற்கு நிதி உதவி
8 இராணுவத்தினர், 35 புலிகள் மணலாறு மோதலில் பலி; 45 பேர் படுகாயம்
கட்டுநாயக்காவில் தேடுதல் 24 பேர் கைது
10 இலட்சம் மக்கள் கடும் பஞ்சத்தை எதிர்கொள்ளும் அவலம்
மேற்குலகை சாடுகிறார் கலாநிதி ஹோகண
மன்னார் குரு முதல்வர் மடுவுக்கு சென்றார்
பயணிகள் பஸ் மீதான குண்டுத்தாக்குதலை தடுத்து நிறுத்துவது குறித்து உயர்மட்ட மாநாடு
சமாதானப் பேச்சுவார்த்தை முறிவடைந்த 2 1/2 வருடங்களில் 9 ஆயிரம் படையினர் பலி
அமைச்சர் ஜெயராஜ் படுகொலைச் சம்பவம் சிங்களவர்களுக்கும் தொடர்புள்ளதாக தெரிவிப்பு
கட்டானை தொகுதி சு.க. மத்திய குழு தலைவியாக ஜெயராஜின் மனைவி
இலங்கை - இந்திய ஒப்பந்தம் முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்டுள்ள அடிமைச்சாசனம்
தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி மேதினமன்று தோட்டங்களில் பிரார்த்தனை நடத்துவதற்கு ஏற்பாடு
ஐ.தே.க. வேட்பாளர்களை ஆதரிக்கும் பிரசாரம் கிழக்கில் சூடுபிடிப்பு
விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல் வர்த்தகர்களால் பதுக்கி வைக்கப்படுவதாக முறையீடு
இரத்தினபுரி மாவட்டத்தில் சிக்குன் குன்யாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள்
டாக்டர்கள், தாதிமாருக்கு வைரஸ் காய்ச்சல்
மஸ்கெலியாவில் திடீர் சுற்றிவளைப்பு; மூவர் கைது
கல்முனை மாநகராட்சி மன்றத்தின் புதிய உறுப்பினர்களாக ஐவர் பதவியேற்பு
இராணுவ வீரரின் வீட்டில் யன்னல் உடைத்து கொள்ளை
யக்கலை சந்தையில் இளைஞர் சுட்டுக்கொலை
குளவி கொட்டியதில் அறுவர் படுகாயம்
மகியங்கனை வாகன விபத்தில் மூவர் படுகாயம்
கதிர்காமம் முருகன் ஆலய திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு
ஏழு சடலங்கள் வன்னிக்கு அனுப்பிவைப்பு
பிலியந்தல பஸ் குண்டுவெடிப்பு சம்பவம் 19 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை
ஓட்டுமடத்தில் உடல் கருகியநிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு
அமைச்சர் ஜெயராஜ் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை அர்ப்பணிப்புடன் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வேன்
மடுத்தேவாலய பிரதேசத்திற்கு நேற்று அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ விஜயம்
திருகோணமலை நகரில் கிளைமோர் குண்டு மீட்பு
சர்வதேச இளைஞர்கள் தினம் - 2008 சான்றிதழ் வழங்குவதற்கான விபரம் கோரல்
அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் எழுச்சிப் பேராளர் மாநாடு
அப்புத்தளை வர்த்தகரினால் தாக்குதலுக்குள்ளான இரு தோட்டத் தொழிலாளர் வைத்தியசாலையில் அனுமதி
விரும்பாத தேர்தல் முடிவை முஸ்லிம் சமூகத்தின் மீது திணிக்க சதி நடப்பதாக கூறுகிறார் ஹசன் அலி
இலங்கை பிரச்சினை தொடர்பான தமிழக சட்டசபையின் தீர்மானம் காலத்தின் கட்டாயம்
வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு மாவட்ட நீதிவான் பாராட்டி கௌரவிப்பு
இறங்குதுறைப்பக்கமாகவிருந்து இராணுவத்தினர் சுட்டவாறு வந்தனர் அக் ஷன்பாம் ஊழியரை எம்மோடு வருமாறு கேட்டபோதும் வரவில்லை
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கட்சி வெற்றியை எவராலும் தடுக்க முடியாது
முஸ்லிம் தலைமைகள் பதவிமோகத்தை கைவிட்டு ஜனாதிபதியின் தலைமையின் கீழ் அணிதிரள வேண்டும்
அரச அதிபரால் நடத்தப்பட்ட கிழக்கு தேர்தல் தொடர்பான உயர்மட்ட மாநாடு
`முஸ்லிம் சமூகத்தை பிளவுபடுத்தும் முயற்சியிலேயே இன்றைய அரசு மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றது
கிழக்கு மாகாண முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரை நியமிக்க அனைவரும் ஒன்றுபட்டு வாக்களிக்க வேண்டும்
கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான தபால் வாக்களிப்பு இன்று ஆரம்பம்
சாரதியின் கழுத்தை வெட்டி காயப்படுத்தி முச்சக்கர வண்டியை கடத்த முயற்சி
கோணமொட்டாவ தோட்டத்தில் வெட்டப்படும் மரங்களால் தொழிலாளர்கள் தொழிலை இழக்கும் அபாயம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com