கீவ் :உக்ரைனின் ஹெலிகொப்டரொன்று கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியாகியுள்ளனர்.
கடற்கரையோரத்தில் அமைந்துள்ள மேடைப்பகுதியொன்றில் ஹெலிகொப்டரின் வால்பகுதி மோதியமையினாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
நப்ரோகாஸ் கம்பனிக்குச் சொந்தமான மி-8 என்னும் இக் ஹெலிகொப்டரில் விபத்து இடம்பெற்ற சமயம் 20 பேர் இருந்ததாகவும் இதில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளதாகவும் இக் கம்பனியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதத்தில் உக்ரேனின் எல்லைக் காவற்படையினரின் ஹெலிகொப்டரொன்று இப்பகுதியில் விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.