கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நேற்று திங்கட்கிழமை ஆரம்பமானது. இன்று செவ்வாய்க்கிழமையும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 136 நிலையங்களில் இடம்பெறும் தபால்மூல வாக்களிப்பிற்கு 4,427 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்குரிய வாக்குகள் ஏற்கனவே தபால் மூலம் அனுப்பப்பட்டிருந்தது.
4,865 பேர் தபால்மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பித்து இருந்தபோதும் 438 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 4,427 பேர் தபால்மூலம் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர்.
136 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறும் தபால்மூல வாக்களிப்பு நேற்றுக் காலை 8.30 மணிக்கு ஆரம்பமான நிலையில் இன்று பிற்பகல் 4 மணிக்கு நிறைவுபெறும்.