கல்வியமைச்சினால் 2007 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்திற்கமைய க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவிரும்பும் மாணவர்களின் விண்ணப்பங்களை அடுத்த மாதம் முதல் பரீட்சைத் திணைக்களம் கோரவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்தார்.
இதேநேரம், பழைய பாடத்திட்டத்தின்படி க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் விண்ணப்பங்கள் ஜூன் மாதம் கோரப்படவுள்ளதுடன், பழைய பாடத்திட்டத்திற்கமைய பரீட்சைக்குத் தோற்றும் மாணவர் முக்கியமான 7 பாடங்களுக்கு மாத்திரமே தோற்றமுடியுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய பாடத்திட்டத்தின் கீழ் க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள், 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலுமே தோற்ற முடியும் எனவும் பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
க.பொ.த.சாதாரணப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ள நிலையில் தமிழ் மொழியும் இலக்கியமும் கட்டாய பாடத்திற்கான நூல்கள். இதுவரை கலேவெல கல்வி வலயம் மற்றும் மாத்தளை கல்வி வலயம் என்பவற்றிற்கும் கிடைக்காமையினால் மாணவர் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.