Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 29, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பகவதி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் இலங்கைக்கு `நற்சான்றிதழ்'
[29 - April - 2008] [Font Size - A - A - A]
* அமைச்சர் சமரசிங்க மகிழ்ச்சி

சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவின் தலைவரும் இந்திய முன்னாள் தலைமை நீதிபதியுமான பி.என்.பகவதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் மூலம் இலங்கைக்கு `நற்சான்றிதழ்' கிடைத்துள்ளதாக மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இடர்முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு (IIGEP) இலங்கை மீது பல குற்றச்சாட்டுகளை முன்னர் சுமத்தியிருந்தது. சட்டமா அதிபர் திணைக்களம் மீதும் விமர்சனத்தை முன்வைத்தது. அத்துடன் தமது அவதானிப்புப் பணியிலிருந்தும் விலகியது.

இவ்விவகாரம் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களில் பிரபல்யமானது. நிபுணர் குழுவின் அறிக்கையும் கூற்றுக்களும் நாட்டுக்கு அவப்பெயரை தேடித்தருவதாக அமைந்தது. இதற்கு இலங்கை அரசாங்கம் பலத்த கண்டனத்தை வெளிப்படுத்தியது.

இந்நிலையில் கடந்தவாரம் இலங்கைக்கு வருகைதந்த பகவதி இங்கு ஊடகவியலாளர் மாநாட்டையும் நடத்திவிட்டு, ஜனாதிபதியையும் சந்தித்திருந்தார். இதன் போது எமது ஜனாதிபதி அவருக்கு பலவிடயங்களை தெளிவுபடுத்தினார்.

இதையடுத்து இந்தியா சென்ற பகவதி கடந்த 26 ஆம் திகதியிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதத்தில் பல விடயங்களை (சாதகமாக) கூறியுள்ளார். இது அவர் முன்னர் தெரிவித்த கருத்துகளை பிரதிபலிப்பதாக அமையவில்லை.

எனவே ஜனாதிபதிக்கு பகவதி அனுப்பிய கடிதம் மூலம் இலங்கைக்கு நற்சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் இலங்கை அரசாங்கம், சட்டமா அதிபர் திணைக்களம் மீதான குற்றச்சாட்டுகள் நீங்குகின்றன என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த சட்டமா அதிபர் சீ.ஆர்.டீ.சில்வா ;

"சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு விசாரணைகளை கண்காணிக்கவே இங்கு வந்தது. எனினும் அவர்கள் தமது வரம்புகளை மீறி அறிக்கை வெளியிட்டபோதும், தற்போது தமது நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். இதுவே யதார்த்தமாகும். இது எமது நாடடுக்கு நற்பெயரைத் தேடித்தரும்" என்றார்.

Email this page Your Opinion Print this page
நீரில் மூழ்கியது இரத்தினபுரி ஆயிரக்கணக்கானோர் பரிதவிப்பு
மலையகத்தின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்
ஈரானிய ஜனாதிபதி அஹமத் நிஜாத்துக்கு விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு
பகவதி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் இலங்கைக்கு `நற்சான்றிதழ்'
முன்னைய நிலைப்பாட்டினை வாபஸ் பெற்றார் பகவதி
இரணைமடுவில் விமானத் தாக்குதல்
ரணில் இன்று கிண்ணியாவில் பிரசாரம்
உரும்பிராய் பகுதியில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
தற்கொலை குண்டுதாரிக்கு உதவியதாக கைதான பெண் சி.ஐ.டி. விசாரணைக்குட்பட்டவேளையில் மரணம்
கல்கமுவ பஸ் நிலையத்தில் சக்திமிக்க நேரக்கணிப்புக் குண்டு
வடமாகாண சபையை வவுனியாவுக்கு இடமாற்றுவதற்கு எதிர்ப்பு போராட்டம்
தென்பகுதியில் கடும் கடற்கொந்தளிப்பு பெருமளவு இழுவைப்படகுகள் நாசம்
சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சிறுவர்களை அனுப்பிய மூவர் கைது
கொள்கலனில் கொண்டுவரப்பட்ட 2 1/2 கோடி ரூபா பொருட்கள் தடுத்து வைப்பு
கொக்குவிலில் காணாமற்போன இளம் தாயின் சடலம் பாழடைந்த வீடொன்றில் கண்டுபிடிப்பு
கிழக்கில் ஐ.தே.க.வின் தேர்தல் பிரசாரத்திற்கு எதிராக அரசு பல்வேறு விதங்களிலும் அடாவடித்தனங்கள்
பஸ்குண்டு வெடிப்புகளையடுத்து பொது இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
இரு நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே மடு அன்னையின் திருச்சொரூபம் தேவாலயத்திற்கு வரும்
அரிசி ஆலைகளை சோதனையிட்ட குழு விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது
கிளைமோர் தாக்குதலில் விவசாயி உயிரிழப்பு
வெள்ளம், மண்சரிவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 15,000 ரூபா உதவி
அலுவலகங்களில் சிறந்த முகாமைத்துவத்தை கொண்டிருந்தால் மக்களுக்கு சிறப்பாகச் சேவையாற்ற முடியும்
வடபகுதியை மீட்க யுத்தம் நடைபெறும் அதேவேளை அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறோம்
அமைச்சர் கருஜெயசூரியவின் கருத்துக்கு அரசதுறை ஊழியர் தொழிற்சங்கம் கண்டனம்
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருவரையொருவர் பகைத்து வாழ விரும்புவதில்லை
க.பொ.த.(சா/த) பரீட்சைக்கு அடுத்த மாதம் முதல் மாணவர்கள் விண்ணப்பிக்க ஏற்பாடு
சிற்றுண்டிச்சாலை குடிநீரில் மனிதக் கழிவு நீர்
வவுனியா - கொழும்பு ரயில் சேவையை வவுனியா வரை நடத்துமாறு கோரிக்கை
வெளிநாடுகளுக்கு பொதி அனுப்பும் நிறுவனங்களில் அதிக கட்டணம் அறவீடு
24 பொதுமக்களை பலிகொண்ட குண்டுவெடிப்பு கண்டிக்கப்படவேண்டிய கொடூர வன்முறை
குண்டை வெடிக்க வைத்து இராணுவச் சிப்பாய் தற்கொலை
மாத்தளையில் திடீர் தேடுதல்; 15 பேர் கைது
பணிப்பாளர் ஆண் தாதியை ஏசியதால் மாத்தறை வைத்தியசாலையில் பகிஷ்கரிப்பு
மட்டக்களப்பில் 136 இடங்களில் தபால்மூல வாக்களிப்பு
கொழுந்து கொள்முதல் செய்யக் கொண்டு சென்ற 2 1/2 இலட்சம் ரூபா துப்பாக்கி முனையில் கொள்ளை
தபால் மூல வாக்களிப்பில் வாக்காளர்கள் உற்சாகம்
புதிய வகை காய்ச்சலினால் மாத்தளையில் இருவர் மரணம்
எத்தகைய இடர்வரினும் விடுதலைக்கனலை நெஞ்சில் சுமந்து சுதந்திர தாயகத்துக்காக ஒன்றுபட்டு செயற்படுவோம்
கொட்டாஞ்சேனையில் அத்துமீறி தேடுதல் மேலக மக்கள் முன்னணி கண்டனம்
வோல்றீம் தோட்ட தேயிலைத் தொழிற்சாலை தீயில் எரிந்து நாசம்; பெருமளவிலான சேதம்
நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல துணைபுரிந்தவர்
வவுனியா பொது வைத்தியசாலை தாதிமார் பற்றாக்குறை உடனடியாக நீக்குமாறு சுகாதார அமைச்சிடம் வேண்டுகோள்
முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலை பயன்படுத்த வேண்டும்
60 தெங்கு ஆலை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளமையால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்பு
`உலக சந்தையில் ஏற்படும் விலையுயர்வினை காரணங்காட்டி அரசு மக்களை ஏமாற்றுகின்றது'
பெண்கள் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் அரசின் உத்தேச பரிந்துரை குறித்து ஊடகவியலாளர்கள் பங்காற்ற வேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com