Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 29, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஈரானிய ஜனாதிபதி அஹமத் நிஜாத்துக்கு விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு
[29 - April - 2008] [Font Size - A - A - A]
எம்.ஏ.எம்.நிலாம்

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி மஹ்மூத் அஹமத் நிஜாத் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று திங்கட்கிழமை மாலை 6.45 மணிக்கு கொழும்பு வந்தடைந்தார்.

நேற்று மாலை 5.30 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடையவிருந்த விமானம், ஒன்றரை மணிநேரம் தாமதித்தே விமான நிலையத்தை வந்தடைந்தது.

விமான நிலையத்திலும் அதனைச் சுற்றிய பகுதிகளிலும் கொழும்பு, நீர்கொழும்பு வீதி முழுமையாகவும் நேற்று மாலை அதிஉச்சப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

விமானத்திலிருந்து இறங்கிய ஈரானிய ஜனாதிபதி விசேட வாகனமொன்றில் அரச வரவேற்பளிக்கும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ விமான நிலையத்துக்குச் சென்று ஈரானிய ஜனாதிபதியை ஆரத்தழுவி கைலாகு கொடுத்து வரவேற்றார்.

அதன்பின்னர் ஈரான் ஜனாதிபதிக்கு இலங்கை அமைச்சர்கள், முக்கிய அதிதிகளை ஜனாதிபதி அறிமுகம் செய்துவைத்தார்.

அடுத்து கடற்படையினரின் மரியாதை அணிவகுப்பை ஈரானிய ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். அணிவகுப்பு மரியாதையைத் தொடர்ந்து கடற்படையினர் 6 மரியாதை வேட்டுக்களைத் தீர்த்து வரவேற்பளித்தனர்.

இதனைத் தொடர்ந்து விமான நிலைய விசேட அதிதிகள் பதிவேட்டில் ஈரானிய ஜனாதிபதி நிஜாத் கையெழுத்திட்ட பின்னர் இரவு 7.15 மணிக்கு விசேட வாகனத்தில் பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார்.

வாகனத் தொடரணி ஆரம்பிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னரே கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு நீர்கொழும்பு வீதி போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக நேற்று மாலை 7 மணி முதல் 8 மணி வரையில் கொழும்பில் பல பாதைகளில் பெரும் வாகன நெருக்கடி காணப்பட்டதோடு ஈரான் ஜனாதிபதி அழைத்துவரப்படும் பிரதான பாதையில் பொதுமக்கள் எவருக்கும் நடந்து செல்லக்கூட பாதுகாப்புத் தரப்பு அனுமதிக்கவில்லை.

நேற்றிரவு கொழும்பு வந்தடைந்தவுடன் ஈரானிய ஜனாதிபதிக்கும் இலங்கை ஜனாதிபதிக்குமிடையிலான மரியாதை நிமித்தமான சந்திப்பு இடம்பெற்றது.

இரவு 8.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இருதரப்புப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. 9 மணிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஈரான் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி மாளிகையில் இராப்போசன விருந்தளித்து கௌரவித்தார்.

ஈரானிய ஜனாதிபதி அஹமத் நிஜாத் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு கொழும்பு கலதாரி ஹோட்டலில் இலங்கையின் மதத் தலைவர்களை சந்தித்துப் பேசவிருக்கின்றார். இச்சந்திப்பில் 500க்கும் மேற்பட்ட மதத்தலைவர்கள் பங்கேற்கவிருப்பதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

இச்சந்திப்பை அடுத்து காலை 9 மணிக்கு சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய நவீனமயப்படுத்தும் வேலைகளை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக புறப்படுவார். இந்த வைபவம் காலை 9.30 மணிக்கு இடம்பெறும்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அங்கிருந்து உமாஓயா அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் பொருட்டு ஹெலிகொப்டர் விமான மூலம் வெள்ளவாயவுக்குப் புறப்பட்டுச் செல்வார். இவ்வைபவங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் கலந்துகொள்வார்.

உமாஓயா அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்துவைக்கும் வைபவத்தில் கலந்துகொண்ட பின்னர் அங்கிருந்து ஹெலிகொப்டர் விமானத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு நேரே சென்று பிற்பகல் 12.45 மணிக்கு ஈரான் ஜனாதிபதி இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு புதுடில்லி பயணமாவார்.

Email this page Your Opinion Print this page
நீரில் மூழ்கியது இரத்தினபுரி ஆயிரக்கணக்கானோர் பரிதவிப்பு
மலையகத்தின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்
ஈரானிய ஜனாதிபதி அஹமத் நிஜாத்துக்கு விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு
பகவதி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் இலங்கைக்கு `நற்சான்றிதழ்'
முன்னைய நிலைப்பாட்டினை வாபஸ் பெற்றார் பகவதி
இரணைமடுவில் விமானத் தாக்குதல்
ரணில் இன்று கிண்ணியாவில் பிரசாரம்
உரும்பிராய் பகுதியில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
தற்கொலை குண்டுதாரிக்கு உதவியதாக கைதான பெண் சி.ஐ.டி. விசாரணைக்குட்பட்டவேளையில் மரணம்
கல்கமுவ பஸ் நிலையத்தில் சக்திமிக்க நேரக்கணிப்புக் குண்டு
வடமாகாண சபையை வவுனியாவுக்கு இடமாற்றுவதற்கு எதிர்ப்பு போராட்டம்
தென்பகுதியில் கடும் கடற்கொந்தளிப்பு பெருமளவு இழுவைப்படகுகள் நாசம்
சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சிறுவர்களை அனுப்பிய மூவர் கைது
கொள்கலனில் கொண்டுவரப்பட்ட 2 1/2 கோடி ரூபா பொருட்கள் தடுத்து வைப்பு
கொக்குவிலில் காணாமற்போன இளம் தாயின் சடலம் பாழடைந்த வீடொன்றில் கண்டுபிடிப்பு
கிழக்கில் ஐ.தே.க.வின் தேர்தல் பிரசாரத்திற்கு எதிராக அரசு பல்வேறு விதங்களிலும் அடாவடித்தனங்கள்
பஸ்குண்டு வெடிப்புகளையடுத்து பொது இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
இரு நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே மடு அன்னையின் திருச்சொரூபம் தேவாலயத்திற்கு வரும்
அரிசி ஆலைகளை சோதனையிட்ட குழு விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது
கிளைமோர் தாக்குதலில் விவசாயி உயிரிழப்பு
வெள்ளம், மண்சரிவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 15,000 ரூபா உதவி
அலுவலகங்களில் சிறந்த முகாமைத்துவத்தை கொண்டிருந்தால் மக்களுக்கு சிறப்பாகச் சேவையாற்ற முடியும்
வடபகுதியை மீட்க யுத்தம் நடைபெறும் அதேவேளை அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறோம்
அமைச்சர் கருஜெயசூரியவின் கருத்துக்கு அரசதுறை ஊழியர் தொழிற்சங்கம் கண்டனம்
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருவரையொருவர் பகைத்து வாழ விரும்புவதில்லை
க.பொ.த.(சா/த) பரீட்சைக்கு அடுத்த மாதம் முதல் மாணவர்கள் விண்ணப்பிக்க ஏற்பாடு
சிற்றுண்டிச்சாலை குடிநீரில் மனிதக் கழிவு நீர்
வவுனியா - கொழும்பு ரயில் சேவையை வவுனியா வரை நடத்துமாறு கோரிக்கை
வெளிநாடுகளுக்கு பொதி அனுப்பும் நிறுவனங்களில் அதிக கட்டணம் அறவீடு
24 பொதுமக்களை பலிகொண்ட குண்டுவெடிப்பு கண்டிக்கப்படவேண்டிய கொடூர வன்முறை
குண்டை வெடிக்க வைத்து இராணுவச் சிப்பாய் தற்கொலை
மாத்தளையில் திடீர் தேடுதல்; 15 பேர் கைது
பணிப்பாளர் ஆண் தாதியை ஏசியதால் மாத்தறை வைத்தியசாலையில் பகிஷ்கரிப்பு
மட்டக்களப்பில் 136 இடங்களில் தபால்மூல வாக்களிப்பு
கொழுந்து கொள்முதல் செய்யக் கொண்டு சென்ற 2 1/2 இலட்சம் ரூபா துப்பாக்கி முனையில் கொள்ளை
தபால் மூல வாக்களிப்பில் வாக்காளர்கள் உற்சாகம்
புதிய வகை காய்ச்சலினால் மாத்தளையில் இருவர் மரணம்
எத்தகைய இடர்வரினும் விடுதலைக்கனலை நெஞ்சில் சுமந்து சுதந்திர தாயகத்துக்காக ஒன்றுபட்டு செயற்படுவோம்
கொட்டாஞ்சேனையில் அத்துமீறி தேடுதல் மேலக மக்கள் முன்னணி கண்டனம்
வோல்றீம் தோட்ட தேயிலைத் தொழிற்சாலை தீயில் எரிந்து நாசம்; பெருமளவிலான சேதம்
நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல துணைபுரிந்தவர்
வவுனியா பொது வைத்தியசாலை தாதிமார் பற்றாக்குறை உடனடியாக நீக்குமாறு சுகாதார அமைச்சிடம் வேண்டுகோள்
முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலை பயன்படுத்த வேண்டும்
60 தெங்கு ஆலை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளமையால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்பு
`உலக சந்தையில் ஏற்படும் விலையுயர்வினை காரணங்காட்டி அரசு மக்களை ஏமாற்றுகின்றது'
பெண்கள் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் அரசின் உத்தேச பரிந்துரை குறித்து ஊடகவியலாளர்கள் பங்காற்ற வேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com