Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 03, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
பிரிட்டனில் இறந்த குழந்தையின் உடலை ஐம்பதாண்டுகள் பாதுகாத்த தாய்
[03 - April - 2008] [Font Size - A - A - A]
பிரிட்டனில் இறந்த குழந்தை ஒன்றின் உடலை சூட்கேஸில் வைத்து பூட்டி 50 ஆண்டுகளாக தாய் ஒருவர் பாதுகாத்து வந்தமை தெரிய வந்துள்ளது.

லண்டனைச் சேர்ந்த கிளாடிஸ் மேரி பிரிக்ஸ் என்பவர் நடன பயிற்சியாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

1957ஆம் ஆண்டில் பிரிக்ஸுக்கு ஒரு குழந்தை பிறந்தது. ஆனால் அந்தக் குழந்தை ஒரு சில மாதங்களில் இறந்துவிட்டது.

இறந்த குழந்தையின் உடலை புதைக்க மனம் இல்லாத தாய் அதை ஒரு சூட்கேசில் வைத்து பூட்டி தனது அடுக்குமாடி குடியிருப்பில் 50 ஆண்டுகளாக பாதுகாத்து வந்தார்.

இந்த ஆண்டில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பிரிக்ஸ் தனது வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

நீண்ட நாட்களாக அவரின் வீடு பூட்டியிருப்பதாக அயலவர்கள் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் அதிகாரிகள் வீட்டை சோதனையிட்ட போது சூட்கேசில் குழந்தை ஒன்றின் உடல் துணியால் சுற்றி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன் குழந்தை இறந்த காலப்பகுதியில் வெளியான பத்திரிகை ஒன்றும் இருந்தது. இருப்பினும் விசாரணையின் போது குழந்தை பற்றிய விபரங்களை பொலிஸாரிடம் தெரிவிக்க பிரிக்ஸ் மறுத்துவிட்டார்.

Email this page Your Opinion Print this page
தலாய்லாமாவின் குற்றச்சாட்டுக்கு சீன அரசு கடும் கண்டனம்
மத்திய கிழக்கின் சமாதான நடவடிக்கை சரியான நிலையில் முன்னெடுப்பு
பிரிட்டனில் இறந்த குழந்தையின் உடலை ஐம்பதாண்டுகள் பாதுகாத்த தாய்
குடியேற்றத்திற்கு சார்பான பிரிட்டிஷ் அரசின் கருத்தால் தோன்றியுள்ள புதிய சர்ச்சை
மலேசிய எதிர்க்கட்சிகள் அரசுக்கெதிராக ஒன்றிணைந்து போராடுவதற்கு முடிவு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com