கொடக்கவெல மல்வத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த மொஹமட் நிலாம் மொஹிதீன் (வயது-50) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை அவிசாவளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.